Showing posts with label Karuna. Show all posts
Showing posts with label Karuna. Show all posts

Thursday, 20 November 2014

கதை உண்மையாகுமா ????

என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .


 தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????


தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.


ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை  முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.


 இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு  காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.


 இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.


அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.


பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்.


அவளுடைய தொலைபேசியில் ஹப்பி என்ற பெயரில் அழைப்பு வருவதை நான் பார்த்தேன், அவள் என்னை பார்த்து சிரித்தாள். எடுத்து அவனோடு சில நேரம் பேசினால். நான் அதற்குள் அறையில் இருக்கும் பால்கனி சென்று ஒரு சிகரட்டை பற்றவைத்து அடிக்க தொடங்கினேன் . என் மனம் என்னன்னவோ யோசிக்க தொடங்கிற்று, ஏன் இங்கே வந்தேன்? பின் ஏன் வருத்தபடுகிறேன் ?அவர்களுக்காக நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? அட வந்தது தான் வந்தாச்சு ஒரு தடவ செஞ்சுட்டு போயிட வேண்டியது தான் என்று இறுதியாக முடிவு செய்து விட்டேன். அதற்குள் சிகரட்  சரியாக முடிய, அவள் என்னை பின்னால் இருந்து மென்மையாக கட்டிக்கொண்டாள். முதல் முறை பெண்ணால், என் உடல் வெப்ப மயமானது. அவளுடைய அங்கங்கள் என்னோடு உரசுமிடையில் இனம் புரியா ஒன்று என்னை தூண்டி அவளிடம் இருந்து மெதுவாக விடுபட்டேன் முழுமையாக அல்லாமல் என் கைகளை மட்டும் அவளிடம் கொடுத்து இருந்தேன்.


பின்னர் கேட்டேன்  "எத்தனை வருஷமா இப்படி இருக்க "


"ஹ்ம்ம் 5 வருஷம் ,சரி பசிக்குது எதாச்சும் ஆர்டர் பண்ணுறியா "


"ஹே முன்னயே சொல்லிருக்கலாம்ல நான் கூட மறந்துட்டேன் இரு ஆர்டர் பண்ணுறேன் உனக்கு என்ன பிடிக்கும் ? "


"உனக்கு பிடிச்சதே சொல்லு டார்லிங் "


"டார்லிங் வேணாம் எனக்கு சிரிப்பா வருது "


"டார்லிங் தான் எங்களோட வாழ்கையே "


"ஹ்ம்ம் சரி பிரியாணி மட்டன் ஓகே வா "


"ஹ்ம்ம் ஓகே "


ரிஷப்சனுக்கு அழைத்து ஆர்டர் செய்து விட்டு அவளை பார்த்தால் , என் முகம் வேர்த்து விட்டது. ஆடை ஏதும் இல்லாமல் உள்ளாடைகளுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு என்னை ஏற இறக்கமாக பார்த்து கொண்டு இருக்கின்றாள். என்ன செய்வது என்று புரியாமல் முகத்தை துடைத்து கொண்டு அவள் அருகில் நெருங்குகிறேன். இடது பக்க மார்பில் ஏதோ பற்களால் கடித்தது போல நன்கு தெரிகின்றது அவளின் நிறத்திற்கு, ஆனால் அதை பற்றி யோசிக்க எனக்கு தோன்றவில்லை. முழுமையாக இப்பொழுது நான் ஒரு பெண்ணை அனுபவிக்க போகிறேன் என்ற குற்றவுணர்வு கூட என்னை விட்டு விலகி என்னுடைய பசிக்கு பலியாகி போனது. அவளும் அப்படியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றி இழுத்து அனைத்து கொண்டாள்.


ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்


திடுக் என்று அவளிடம் இருந்து விலகினேன்.அவளோ ஹே லஞ்ச் டியர் என்று என்னை சமாதானபடுத்தினாள்.


இருவரும் ஒன்றாக குளிக்கலாம் வா என்று என்னை அழைக்க, நானோ வேண்டாம் என்று தவிர்த்து விலகினேன். அவள் குளித்து கொண்டு இருக்கும் போது ஏனோ தெரியவில்லை தெரியாமல் பார்க்கலாமா என்று தோன்றியது. அதுக்காக சில நிமிடங்கள் வெட்கப்பட்டேன். இப்படி கேவலமான எண்ணங்கள் ஏனோ தெரியவில்லை அடிக்கடி எனக்கு வரும். அது எனக்கு மட்டும் தானா இல்லை எல்லோருக்குமா என்று கூட தெரியவில்லை.

குளித்து முடித்து விட்டு வெறும் டவலோடு வந்தாள். அவள் அழகில் தலை சுற்றி போனால் ரசிக்க முடியாது என்று நிற்கும் மரமாகி போனேன். அருகில் வந்து கன்னங்களை கிள்ளி சென்றாள்.


அந்த மயக்கத்தோடு நானும் குளிக்க சென்றேன். குளிக்கும் போது இன்னொரு கேவலமான எண்ணம் நண்பன் சொன்னது நினைவில் வந்தது, "மச்சி மேட்டருக்கு முன்ன தனியா போகி செல்பி போட்டுறு அப்போ தான் நீ பண்ணுறப்போ லேட் ஆகும் செம்மையா இருக்கும் ". அடச்ச என்னடா இது இப்படியே தோணுது என்று வெறுப்பாகி சீக்கிரம் குளித்து விட்டு வந்தேன்.


சரிவா சாப்பிடலாம் என்று கூறி கொண்டே எடுத்து வைத்து கொண்டு இருந்தாள், இம்முறை அரை அடி உள்ள டவுசர் அதுவும் எனக்கு பிடித்த பிங்க் கலர் மேலே அதற்கு மேட்ச்சான ஒரு அடி உள்ள டி-ஷர்ட். அற்புதமாக இருந்தாள் தமிழ்.


“ஏன் காலையில சாப்பிடலையா தமிழ் ???”


"இல்ல ஏன் கேட்குற "


"ரொம்ப பசில இருக்குற மாறி இருக்கியே அதான் வேற ஒன்னும் இல்லை"


"நீ என்ன கூப்பிட்டு வரலைனா எனக்கு இப்ப வரைக்கும் சாப்பாடு கிடைச்சு இருக்காது "


"புரியல தமிழ் "


"அது அப்படி தான் கஸ்டமர் வாங்கிதறது இல்ல அவுங்க தர டிப்ஸ் வச்சி சாப்பிடுறது அது தான் எங்களுக்கு சாப்பாடு "


ஒரு நிமிடம் மொத்தமுமாக அதிர்ந்து தான் போனேன்.


"அப்போ யாருமே உன்ன எடுக்கலைனா ? "


"அவ்வுளோதான்  தண்ணீர் தான் சாப்பாடு "


"உங்க ப்ரெண்ட்ஸ் அவுங்களும் இப்படி தானா? "


"ஆமா எல்லாருக்கும் இப்படி தான் எனக்கு பரவா இல்லை எப்படியாச்சும் யாராச்சும் வந்துருவாங்க "


அவள் சொல்லுவதின் அர்த்தம் புரிந்தது முன்னயே சொன்னது போல அவலட்சணமான பெண்கள் இந்த தொழிலில்  எப்படி தான் இருப்பார்களோ என்று மீண்டும் வருத்தப்பட்டு கொண்டே அவளிடம் கேட்டுவிட்டேன்.


"அப்படி இல்லை கொஞ்சம் கஷ்டம் தான் இப்போ சில பேர் நல்ல அழகான பொண்ணுங்கள எடுக்க மாட்டாங்க ஏன்னா சரியான கம்பெனி இருக்காது என்று நினைப்பாங்க அப்படி இருக்குறவுங்க இவங்களை போன்றவர்களை எடுப்பாங்க கம்பெனி நல்லா இருக்கும் அப்படின்னு அதே போல நல்லா பார்த்துபாங்க "


"ஓஹோ இது வேறயா என்ன இருந்தாலும் அவுங்க பாவம் பா "


"இவ்வுலோ பேசுற நீ அவுங்கள எடுத்து இருக்க வேண்டியது தானே "


அவள் முன் வெட்கி தலை குனிந்தேன்.


"நானும் சராசரி மனுஷன் தானே முதல் முறை அழகான பொண்ண தான் பார்க்கணும் அப்படின்னு நினைச்சேன் ஆனா அவுங்கள பாக்குறப்போ வருத்தமா இருந்துச்சு நான் என்ன பண்ணுறது "


"ஹே ஹே கூல் நான் சும்மா சொன்னேன் "


"உங்க லைப் நிஜமாவே ரொம்ப பாவம் தமிழ்"


அவளின் கண்கள் கலங்கி கண்ணீரும் வந்துவிட்டது.முகத்தை மூடிக்கொண்டு பாத்ரூம் சென்றுவிட்டாள்.தேவை இல்லாம அவளையும் கஷ்டபடுத்திட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.அவளோ மீண்டும் அந்த பழைய சிரிப்புடன் வந்தாள்.


"அருண் என்ன ரொம்ப நெருங்கி வர "


"அப்படி இல்ல தமிழ் தெரிஞ்சிக்க தான் "


"நல்ல பையனா இருக்குற அப்புறம் ஏன் இப்படி "


"எல்லாம் வயசு கோளாறு 27,28 வயசு ஆகுது கல்யாணத்த பண்ணி வச்சா நான் ஏன் இங்க வாரேன், ஆமா உனக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை ஹப்பி காளிங்குனு வந்துச்சு "


" அதுவா நேத்து வந்த கஸ்டமர் அவரு என்ன கல்யாணம் பண்ணிக்க போறாராம் அவரே என் போன்ல ஹப்பினு சேவ் பண்ணிட்டு போனாரு, நாளைக்கு வரேன்னு சொல்லுறான் நாய் நான் வேணாம்னு சொல்லிட்டேன்"


"ஏன் தமிழ் "


"அவன் டார்ச்சர், அதை பண்ணு இதை பண்ணு, இப்படி அப்படின்னு சாவடிச்சிடுவான் "


"புரியுது தமிழ் "


"அப்புறம் இப்படி நாங்களே ஹப்பினு ஒரு நம்பர் வச்சிக்குவோம் ஒரு சில சமயம் அது எங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அவசரத்துக்கு"


இதை எல்லாம் ஏன் என்ட சொல்லுறா??? என்று யோசிக்கும் போது, எதிர்பார்த்து இருந்தது போல என் இதழ்களை கவ்வினாள்...!


கலவியில் எனக்கு மிகவும் பிடித்தது இதழோடு இதழ் சேர்த்து நீண்ட நேரம் பரிமாறிகொள்ளும் முத்தமே. அதை முதல் முறை நான் அனுபவிக்கும் போது பரவசம் கொண்டேன் கிட்டத்தட்ட என்று அல்லாமல் உச்சமே அடைந்தேன். அப்பொழுது என் உடல் சிலிர்த்தது அதை அவளும் உணர்ந்ததாலோ என்னவோ முத்தத்தை விடுவித்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.


"ஹே என்ன இதுக்கே ஃப்ளாட்டு"


"வேற என்ன செய்யுறது கண்ட்ரோல் பண்ண முடியலையே"


"நீ உண்மைலயே பர்ஸ்ட் டைம் தான் அருண்"


"தமிழ் நீ நம்ப மறுத்தாலும் உண்மை அது தான்"


"ஓகே ஓகே போ க்ளீன் பண்ணிட்டு வந்து சாப்பிடு,அப்படியே வச்சிருக்க பாரு"


"எனக்கு போதும் தமிழ், நீ கொடுத்த முத்தமே இன்னும் நாலு நாளைக்கு பசிக்காது"


"ஹா ஹா ஹா இன்னும் நிறைய இருக்கு இதுக்கே இப்படினா ??? "


"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ??? "


"கேளு. பண்ணுறது தப்பு,நினைப்பு மட்டும் சரியா இருந்தா என்ன? தப்பா இருந்தா என்ன? அருண்"


"இதுவரைக்கும் எத்தனையோ பேர பார்த்து இருப்ப எப்போவாச்சும் ஏன் இப்படி இருக்கிறோம்னு பீல் பண்ணி இருக்கியா. ஐ மீன் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?"


"இதில் என்ன புரியல இத்தனை பேர் கூட படுக்கிறேயே வெட்கமா இல்லையானு கேட்கிற அப்படி தான ??? "


"ஹே சாரி தமிழ் மன்னிச்சிடு நான் அப்படி சொல்ல வரல. உன் இடத்தில் இருந்து உன்னோட வலியை உணர முயற்சி பண்ணுறேன். அதுக்கு நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்"


" வேணா அருண்"


"........"


சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. தேவை இல்லாமல் ஏன் இதை கேட்டோம் என்று நினைத்து கொண்டேன்.ஆனாலும் அவளுக்கு நிச்சயம் ஆறுதலை தந்து இருக்கும், அதுவே அவளுடைய எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டால் இன்னும் அவளுக்கு நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. மௌனத்தை அவள் முடித்தாள்.


"அருண் என்னோட வயசு 21, அஞ்சு வருஷம் முன்ன இந்த தொழிலுக்கு வந்தேன்னு சொன்னேன். அப்போ பார்த்துக்க 16 வயசுல,எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் அப்போ??? இல்ல இப்போ மட்டும் என்னத்த தெரிஞ்சிக்கிட்டேன் ??? ஆண்களின் அளவுகளும், எண்ணங்களும், வக்கிரங்களும், வாதைகளும் தான் தெரிஞ்சிருக்கு."

  

"...."


"சாரி உன்னை பற்றி சொல்ல வரலை,ஆனா இப்பவும் உன் மேல நம்பிக்கை இல்லை. ஐ மீன் ஜஸ்ட் என்னை நீ இம்ரஸ் பண்ண தான் நடிக்கிறியோனு தோணுது தப்பா நினைக்காத, ஏன்னா என் நிலை அப்படி அருண்"


"புரியுது தமிழ் "


"ஒவ்வொரு நாளும் எவன் கூடயாவது படுத்து,படுத்து, எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்கிறப்போ கூட துணை கேட்கும். அதே போல தினமும் எவன் கூடயாவது படுத்து இருக்கிறப்போ எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்க மாட்டோமான்னு தோணும். பாரு இது தான் எங்க வாழ்க்கை"


"என்ன சொல்லுறதுன்னு தெரியலபா "


"அதுவும் பீரியட் டைம்ஸ் இருக்கே ஐயோ நரக வேதனை. அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியல அருண் ..... வேதனையே அப்படின்னு இருக்கிறப்போ எந்த தேவுடியா பயலாவுது வந்து இவ தான் வேணும்னு டார்ச்சர் செஞ்சி புரிஞ்சிக்காம தெரிஞ்சே அழைச்சுட்டு போயிடுவான். அப்புறம்....."


" வேணாம் வேணாம் தமிழ் ப்ளீஸ் ...."


இந்தமுறை அவளின் அழுகை மிக சத்தமாக ஒலித்தது. என் மடியில் முகத்தை புதைத்து கொண்டு அழுகிறாள். அப்பொழுது தான் அவளின் முதுகை பார்க்கின்றேன், ஐயோ என்னது இப்படி இருக்கின்றதே????? என்னை கட்டுபடுத்த இயலாமல் கண்ணீர் வந்துவிட்டது. அப்பொழுது என்னுடைய இதயத்துடிப்பை உணர்ந்தது நான் மட்டும் அல்ல அவளும் தான். என் கண்ணீர் அவளின் முதுகை தொட்டதும் அவள் எழுந்து விட்டாள்.மீண்டும் தனித்து சென்று சுவர் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.


" அருண் சாரிபா நீயே சந்தோசமா இருக்க தானே வந்த நான் உன்னை டென்ஷன் ஆக்கிட்ட போல"


அவள் கேட்டது என்னவோ எனக்கு காதில் விழுந்தாலும், எனக்கு அவள் முதுகில் இருந்த காயமே தெரிகின்றது. வரி வரியாக சிவப்பு நிறத்தில் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. எப்படி அது உருவாகி இருக்கும். இந்த படத்தில் வரும் ட்டார்ச்சர் செக்ஸ் என்பது எல்லாம் உண்மையாவே இருக்கின்றதோ. அப்படி வக்கிரமான எண்ணத்துடன் இருப்பவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ?. அனுபவிக்க தான் பெண் சுகம் என்பதெல்லாம் இவர்களிடத்தில் இல்லையோ. ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்கி அவளை எப்படி துன்புறுத்த மனம் தோன்றுகிறது. அந்த தேவுடிய பசங்களுக்கு பெண்மையின் அர்த்தம் ஏன் விளங்காமல் போனது. விலை மாதுவாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ??? ஒரு நொடி அவள் நிலையில் இருந்து ஏன் யோசிக்க நினைப்பதில்லை??? இப்படி என்னுள் தோன்றிய காட்டமான எண்ணங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற தோன்றியது.


"தமிழ் எனக்கு மனசு சரி இல்லை நான் கிளம்புறேன். நீ வருத்தபடுவது போல எதாவுது நான் நடந்து இருந்தால்.தயவு செய்து என்னை மன்னித்துவிடு தமிழ் ...!!! "


"அருண் ஏன் என்ன ஆச்சு ப்ளீஸ் போகாத "


"இல்ல தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இங்க இருந்தா நான் அழுதிடுவேன்னு பயமா இருக்கு ப்ளீஸ்"


"அருண் நீ போனா எனக்கு தான் பிரச்சனை ப்ளீஸ் புரிஞ்சிக்க கஸ்டமரா விட்டுட்டேன்னு என்ன டார்ச்சர் பண்ணுவாங்க " கலங்குகிறாள் அழகு தமிழ்.


என்ன செய்வது என்ற யோசனையில் என்னிடம் இருந்த சிகிரெட் காலியானது. அவளிடம் அருகே சென்று அவளை பெட்டில் படுக்கவைத்து விட்டு.


" தமிழ் நான் போகவில்லை , நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ஜஸ்ட் நான் கடைக்கு போயிட்டு வரேன் ஓகே "


"நானும் வரேன் அருண் "


"வேணாம்பா சத்தியமா நான் போகமாட்டேன் நீ தூங்கு, நான் டிரிங் பண்ணபோறேன் ஸோ ஒன்லி சாரி "


"ஓகே இங்க வந்து சாப்பிடு ப்ளீஸ் வெளியவேணாம் "


"ஓகே உனக்காக "


அவளிடம் என்ன இனி பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் தூங்கிவிட்டால் போதும் என்றே தோன்றியது. இப்படியே சென்றுவிடலாமா என்று கூட நினைத்தேன், பாவாம் அவள் இதுவால் ஏதாவது பிரச்சனை வந்து இன்னும் கஷ்டபடுவாளே. மீண்டும் அறைக்கே சென்றேன் இம்முறை எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்கின்ற மதுவுடன். பின்னர் மதுவோடு நான்கு மணி நேரம் உரையாடி கொண்டு இருந்தேன். தமிழ் விளித்து விட்டாள். அருகே வந்து ஆதரவாக என்னை அணைத்தாள்.


"வா அருண் "


" வேணாம் தமிழ் மப்பு ஓவரா இருக்கு நா கிளம்பலாமா"


"அருண் நீ ஒன்னுமே செய்யலடா "


"ப்ளீஸ் என்னை கம்ப்பெல் பண்ணாத சாரி தமிழ்"


அவளிடத்திலும் எதுவும் வார்த்தை இன்றி கிளம்ப ஆயத்தமானாள். அவள் கையில் சில பணத்தாள்களை திணித்து விட்டு அவளிடம் இருந்து விடை பெற்றேன். அவள் மேல் இருந்த அன்பினால், மீண்டும் அவளை சந்திக்க கூடாது என்றே நினைத்து கொண்டு சென்றேன்.


ஆனால் 




சில நாட்களுக்கு பிறகு அவளை மீண்டும் சந்திக்க சென்றேன்.



"ஏன்டா உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாடா??? அரிக்கிதுனு போயிட்டு கதை கேட்டு பீல் ஆகி ஒன்னும் பண்ணலையாம், நீ சினிமா பார்த்து கெட்டு போனது நூற்றுக்கு  நூறு  உண்மை. ஓடிடு வாயில எதாச்சும் வந்துட போகுது"
நண்பர்களுக்கு இது போன்ற விஷயங்களில் கோபம் மடை திறந்த தண்ணீர் போல பீறிட்டு வருவது சகஜம் தானே. ஆனால் நான் மீண்டும் தமிழை நாளையே  காண போகிறேன் என்று இவனிடம் சொன்னால், ரணகள  சிரிப்பாய் தான் இருக்கும். காதலர்கள் எப்போதும் அவரவர்களை நினைத்து கொண்டு இருப்பார்கள் ஆனால் நான் ஏன் அவளை இப்பொழுது நினைத்து கொண்டு இருக்கின்றேன். நிச்சயம் எவன் கூடயாவது படுத்து கொண்டு தான் இருப்பாள், அதிலும் அங்கு நடக்கும் சம்பாஷணைகளில்  என்னை நினைப்பது என்பது அவளுக்கு சாத்தியமே இல்லை . அப்படியே வாய்ப்பு இருந்தாலும் என்னை நினைப்பாள் என்று எப்படி என்னால் நினைக்க முடிகின்றது. ஒருவேளை அவளும் என்னை போல தனிமையில் இருக்கும் பொழுது நினைப்பாளா? சுத்தம் அவளின் தனிமை அவளுக்கே போதாதே. நாளை காண போகும் தமிழின் நினைவுகள் ஏன் என்னை இப்படி கொள்கின்றது.
"தமிழ் எப்படி இருக்க ???"
"ஹே ஒரு மாசத்துல நீ ரெண்டாவுது டைம் வந்துருக்க"
"ஆமா உன்ன பார்க்காம இருக்க முடியல "
"நம்புறேன் அருண் எனக்கு உன் நினைப்பு ரொம்பவே இருந்துச்சு "
"ச்சும்மா சொல்லாத தமிழ், எனக்காக தான சொல்லுற ? "
"இல்லை அருண் இங்க வரவங்க நிறைய பேரு ஆனா அதுல உன்ன போல எங்களுக்காக நினைக்கிற ஆளுங்க ரொம்ப ரொம்ப கம்மி அதான் மறக்க முடியாது. "
" நான் ஒண்ணுமே பண்ணலையே தமிழ் "
" அதான்டா பண்ணுனவுங்களை விட பண்ணாதவுங்க தான் எங்க மனசுல இருப்பாங்க "
"மொக்க போடி "
இப்படி எங்களின் உணர்வுகளை வெளிபடுத்தி கொள்ள வேண்டும் என்று பேராவலுடன் சென்ற எனக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
ஆம் தமிழ் அவ்விடத்தை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விட்டாள். பெரிய தொகைக்கு 60வயது உள்ள  வெளிநாட்டுகாரன் அவளை மொத்தமுமாக வாங்கிவிட்டானாம்.
அவள் சென்று 10 தினங்கள் தான் ஆகின்றது என்று கூறுகிறார்கள். அவள் மேல் அளவில்லா அன்பு மறந்து கோபம் கொள்கிறேன். என் கண்ணீர் என்னை கேட்காமல் வந்து கொண்டே இருக்கின்றது. நான் ஒரு கோளை போல என்று என் மனம் சிரிக்கின்றது. வேறு ஒரு பெண்ணை அனுபவித்து அவளின் நினைவை மறக்க மனம் ஓரத்தில் ஆசையை தூண்டுகின்றது. எதை நான் செய்ய போகிறேன்  என்று எனக்கே தெரியவில்லை?? போயும் போயும் ஒரு விபச்சாரிக்காக இப்படி கலங்குகிறேன் என்ற எண்ணத்தில் அடிபட்டு யோசித்தால்,  எனக்கென்று எந்தவொரு தனித்துவமும் இல்லை அவள் வாழ்க்கைக்கான வழி என்று அவள் தேர்ந்து எடுத்து விட்டாள். அதை நான் செய்து இருக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் போனதால் மீண்டும் ஒரு முறை  நன்கு யோசித்து முடிவுக்கு வந்தேன் .

நானும் ஒரு சராசரி மனிதன் தான்.அதே போல என்னிடம்  இறுதிவரை  இதுவும்  ஒரு போலியான நினைவுகளாக இருக்கும்.

Thursday, 16 October 2014

கதை உண்மையாகுமா ????-------2

அவளுடைய தொலைபேசியில் ஹப்பி என்ற பெயரில் அழைப்பு வருவதை நான் பார்த்தேன், அவள் என்னை பார்த்து சிரித்தாள். எடுத்து அவனோடு சில நேரம் பேசினால். நான் அதற்குள் அறையில் இருக்கும் பால்கனி சென்று ஒரு சிகரட்டை பற்றவைத்து அடிக்க தொடங்கினேன் . என் மனம் என்னன்னவோ யோசிக்க தொடங்கிற்று, ஏன் இங்கே வந்தேன்? பின் ஏன் வருத்தபடுகிறேன் ?அவர்களுக்காக நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? அட வந்தது தான் வந்தாச்சு ஒரு தடவ செஞ்சுட்டு போயிட வேண்டியது தான் என்று இறுதியாக முடிவு செய்து விட்டேன். அதற்குள் சிகரட்  சரியாக முடிய, அவள் என்னை பின்னால் இருந்து மென்மையாக கட்டிக்கொண்டாள். முதல் முறை பெண்ணால், என் உடல் வெப்ப மயமானது. அவளுடைய அங்கங்கள் என்னோடு உரசுமிடையில் இனம் புரியா ஒன்று என்னை தூண்டி அவளிடம் இருந்து மெதுவாக விடுபட்டேன் முழுமையாக அல்லாமல் என் கைகளை மட்டும் அவளிடம் கொடுத்து இருந்தேன்.

பின்னர் கேட்டேன்  "எத்தனை வருஷமா இப்படி இருக்க "

"ஹ்ம்ம் 5 வருஷம் ,சரி பசிக்குது எதாச்சும் ஆர்டர் பண்ணுறியா "

"ஹே முன்னயே சொல்லிருக்கலாம்ல நான் கூட மறந்துட்டேன் இரு ஆர்டர் பண்ணுறேன் உனக்கு என்ன பிடிக்கும் ? "

"உனக்கு பிடிச்சதே சொல்லு டார்லிங் "

"டார்லிங் வேணாம் எனக்கு சிரிப்பா வருது "

"டார்லிங் தான் எங்களோட வாழ்கையே "

"ஹ்ம்ம் சரி பிரியாணி மட்டன் ஓகே வா "

"ஹ்ம்ம் ஓகே "

ரிஷப்சனுக்கு அழைத்து ஆர்டர் செய்து விட்டு அவளை பார்த்தால் , என் முகம் வேர்த்து விட்டது. ஆடை ஏதும் இல்லாமல் உள்ளாடைகளுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு என்னை ஏற இறக்கமாக பார்த்து கொண்டு இருக்கின்றாள். என்ன செய்வது என்று புரியாமல் முகத்தை துடைத்து கொண்டு அவள் அருகில் நெருங்குகிறேன். இடது பக்க மார்பில் ஏதோ பற்களால் கடித்தது போல நன்கு தெரிகின்றது அவளின் நிறத்திற்கு, ஆனால் அதை பற்றி யோசிக்க எனக்கு தோன்றவில்லை. முழுமையாக இப்பொழுது நான் ஒரு பெண்ணை அனுபவிக்க போகிறேன் என்ற குற்றவுணர்வு கூட என்னை விட்டு விலகி என்னுடைய பசிக்கு பலியாகி போனது. அவளும் அப்படியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றி இழுத்து அனைத்து கொண்டாள்.

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

திடுக் என்று அவளிடம் இருந்து விலகினேன்.அவளோ ஹே லஞ்ச் டியர் என்று என்னை சமாதானபடுத்தினாள்.

இருவரும் ஒன்றாக குளிக்கலாம் வா என்று என்னை அழைக்க, நானோ வேண்டாம் என்று தவிர்த்து விலகினேன். அவள் குளித்து கொண்டு இருக்கும் போது ஏனோ தெரியவில்லை தெரியாமல் பார்க்கலாமா என்று தோன்றியது. அதுக்காக சில நிமிடங்கள் வெட்கப்பட்டேன். இப்படி கேவலமான எண்ணங்கள் ஏனோ தெரியவில்லை அடிக்கடி எனக்கு வரும். அது எனக்கு மட்டும் தானா இல்லை எல்லோருக்குமா என்று கூட தெரியவில்லை.
குளித்து முடித்து விட்டு வெறும் டவலோடு வந்தாள். அவள் அழகில் தலை சுற்றி போனால் ரசிக்க முடியாது என்று நிற்கும் மரமாகி போனேன். அருகில் வந்து கன்னங்களை கிள்ளி சென்றாள்.


அந்த மயக்கத்தோடு நானும் குளிக்க சென்றேன். குளிக்கும் போது இன்னொரு கேவலமான எண்ணம் நண்பன் சொன்னது நினைவில் வந்தது, "மச்சி மேட்டருக்கு முன்ன தனியா போகி செல்பி போட்டுறு அப்போ தான் நீ பண்ணுறப்போ லேட் ஆகும் செம்மையா இருக்கும் ". அடச்ச என்னடா இது இப்படியே தோணுது என்று வெறுப்பாகி சீக்கிரம் குளித்து விட்டு வந்தேன்.

சரிவா சாப்பிடலாம் என்று கூறி கொண்டே எடுத்து வைத்து கொண்டு இருந்தாள், இம்முறை அரை அடி உள்ள டவுசர் அதுவும் எனக்கு பிடித்த பிங்க் கலர் மேலே அதற்கு மேட்ச்சான ஒரு அடி உள்ள டி-ஷர்ட். அற்புதமாக இருந்தாள் தமிழ்.

“ஏன் காலையில சாப்பிடலையா தமிழ் ???”

"இல்ல ஏன் கேட்குற "

"ரொம்ப பசில இருக்குற மாறி இருக்கியே அதான் வேற ஒன்னும் இல்லை"

"நீ என்ன கூப்பிட்டு வரலைனா எனக்கு இப்ப வரைக்கும் சாப்பாடு கிடைச்சு இருக்காது "

"புரியல தமிழ் "

"அது அப்படி தான் கஸ்டமர் வாங்கிதறது இல்ல அவுங்க தர டிப்ஸ் வச்சி சாப்பிடுறது அது தான் எங்களுக்கு சாப்பாடு "

ஒரு நிமிடம் மொத்தமுமாக அதிர்ந்து தான் போனேன்.

"அப்போ யாருமே உன்ன எடுக்கலைனா ? "

"அவ்வுளோதான்  தண்ணீர் தான் சாப்பாடு "

"உங்க ப்ரெண்ட்ஸ் அவுங்களும் இப்படி தானா? "

"ஆமா எல்லாருக்கும் இப்படி தான் எனக்கு பரவா இல்லை எப்படியாச்சும் யாராச்சும் வந்துருவாங்க "

அவள் சொல்லுவதின் அர்த்தம் புரிந்தது முன்னயே சொன்னது போல அவலட்சணமான பெண்கள் இந்த தொழிலில்  எப்படி தான் இருப்பார்களோ என்று மீண்டும் வருத்தப்பட்டு கொண்டே அவளிடம் கேட்டுவிட்டேன்.

"அப்படி இல்லை கொஞ்சம் கஷ்டம் தான் இப்போ சில பேர் நல்ல அழகான பொண்ணுங்கள எடுக்க மாட்டாங்க ஏன்னா சரியான கம்பெனி இருக்காது என்று நினைப்பாங்க அப்படி இருக்குறவுங்க இவங்களை போன்றவர்களை எடுப்பாங்க கம்பெனி நல்லா இருக்கும் அப்படின்னு அதே போல நல்லா பார்த்துபாங்க "

"ஓஹோ இது வேறயா என்ன இருந்தாலும் அவுங்க பாவம் பா "

"இவ்வுலோ பேசுற நீ அவுங்கள எடுத்து இருக்க வேண்டியது தானே "

அவள் முன் வெட்கி தலை குனிந்தேன்.

"நானும் சராசரி மனுஷன் தானே முதல் முறை அழகான பொண்ண தான் பார்க்கணும் அப்படின்னு நினைச்சேன் ஆனா அவுங்கள பாக்குறப்போ வருத்தமா இருந்துச்சு நான் என்ன பண்ணுறது "

"ஹே ஹே கூல் நான் சும்மா சொன்னேன் "

"உங்க லைப் நிஜமாவே ரொம்ப பாவம் தமிழ்"

அவளின் கண்கள் கலங்கி கண்ணீரும் வந்துவிட்டது.முகத்தை மூடிக்கொண்டு பாத்ரூம் சென்றுவிட்டாள்.தேவை இல்லாம அவளையும் கஷ்டபடுத்திட்டோமோ என்று வருத்தமாக இருந்தது.அவளோ மீண்டும் அந்த பழைய சிரிப்புடன் வந்தாள்.

"அருண் என்ன ரொம்ப நெருங்கி வர "

"அப்படி இல்ல தமிழ் தெரிஞ்சிக்க தான் "

"நல்ல பையனா இருக்குற அப்புறம் ஏன் இப்படி "

"எல்லாம் வயசு கோளாறு 27,28 வயசு ஆகுது கல்யாணத்த பண்ணி வச்சா நான் ஏன் இங்க வாரேன், ஆமா உனக்கு கல்யாணம் ஆச்சா சொல்லவே இல்லை ஹப்பி காளிங்குனு வந்துச்சு "

" அதுவா நேத்து வந்த கஸ்டமர் அவரு என்ன கல்யாணம் பண்ணிக்க போறாராம் அவரே என் போன்ல ஹப்பினு சேவ் பண்ணிட்டு போனாரு, நாளைக்கு வரேன்னு சொல்லுறான் நாய் நான் வேணாம்னு சொல்லிட்டேன்"

"ஏன் தமிழ் "

"அவன் டார்ச்சர், அதை பண்ணு இதை பண்ணு, இப்படி அப்படின்னு சாவடிச்சிடுவான் "

"புரியுது தமிழ் "

"அப்புறம் இப்படி நாங்களே ஹப்பினு ஒரு நம்பர் வச்சிக்குவோம் ஒரு சில சமயம் அது எங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அவசரத்துக்கு"

இதை எல்லாம் ஏன் என்ட சொல்லுறா??? என்று யோசிக்கும் போது, எதிர்பார்த்து இருந்தது போல என் இதழ்களை கவ்வினாள்...
                                                                                                                                            தொடரும்

Tuesday, 14 October 2014

கதை உண்மையாகுமா ????

என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .

 தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????



தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.

ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை  முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.

 இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு  காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.

 இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.

அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.

பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்............
                                                                                                                                           தொடரும்

Thursday, 10 April 2014

நினைவுகள் எழுத தூண்டுகிறது - 2


ஓமன் போகலாமா வேண்டாமா என்ற இருவேறு சிந்தனையில் என்னை நானே வாட்டி வதைத்து கொண்டு இருந்தேன், போனால் ஒருவேளை நம்மால் சிறப்பிக்க முடியாமல் திரும்பி வருவதற்கு போகாமல் இருந்துவிடலாம் என்று நினைத்தால், இங்கே நான் தலைகனத்தில் பிதற்றிய பிதற்றலுக்கு பதில் சொல்லியே தாவு கிளிந்துவிடுமே ,வீட்டில் கூட மதிக்க மாட்டார்களே, உறவினர் மூலம் கிடைத்த வேலையை விட்டதற்காக எல்லோரிடத்திலும் தலை குனிந்து நிற்க வேண்டுமே. இதற்கு போய்விட்டால் தான் என்னவோ என்று கிட்டத்தட்ட பித்தநிலையில் தான் இருந்தேன்.

அந்நேரத்தில் தஞ்சையில் உடன் பயின்ற நண்பனின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார், அவரை காண தஞ்சை சென்று அவனிடம் புலம்பிவிட்டு. மறுநாளும் அவனை காண சென்று அன்று வேறு நந்தலாலா வெளியீடு அவனும் கொஞ்சம் ரிலக்ஸ் ஆகும் பொருட்டு இருவரும் படத்திற்கு சென்றோம், தஞ்சை பிக் சினிமாஸில் நான் கண்ட முதல் திரைப்படம் நந்தலாலா தான். படத்தின் இரண்டாம் பாதியின் போது இருமுறை சென்னை லேன்ட் லைனில் இருந்து கால் வந்தது படத்தின் ஆர்வத்தால் ஒருமுறை சைலேன்ட்டில் போட்டுவிட்டு மறுமுறை வந்தபோது கட் செய்துவிட்டேன்.


படத்தின் இறுதிகட்ட பாடலின் போது மீண்டும் வந்த அழைப்பை ஏற்று பேசிய போது, ஹலோ கருணா நீங்க இன்னும் மெடிக்கல் சேர்டிபிகட் தரலை, ரொம்ப பிரஷர் பண்ணறாங்க எனி ப்ரொப்லெம் என்று கேட்டனர். சாரி சார் எனக்கு விருப்பமில்லை ஓமன் செல்ல என்று மட்டும் கூறிவிட்டு கட் செய்து விட்டேன். அவர்களும் என்னை மீண்டும் அழைக்கவில்லை. நானோ படம் முடிந்து வீடு செல்லும் வரை மிகுந்த வேதனையில் துன்புற்றேன். எத்தனையோ நபர்கள் தூரதேசம் போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கையில் கிடைத்த வாய்ப்பை இப்படி வீணடித்து விட்டுமே. யாரையும் பழி சொல்ல வாய்ப்பில்லை ,என்னுடைய வாய்ப்பை என்னுடைய இன்பங்களுக்காக நானே கெடுத்து கொண்டே என்பது மட்டுமே உண்மை.

மீண்டும் சென்னை டிசம்பர் 20 ,2010ல் பயணம் , வேலை தேடுதல் மீண்டும் தொடக்கம், மீண்டும் ஒருமுறை செய்தவேலையை விட்டதுக்கு மனதார உண்மையாக வருத்தப்பட்டேன் (இந்த தவறை இதன் பிறகு இன்று வரை செய்யவில்லை).தஞ்சையில் கண்ட நண்பனும் சென்னைக்கு ஒரு நேர்காணலிற்கு வந்து செலக்ட் ஆகிவிட்டான். பின்னர் என்னை சந்திக்க வந்த போது அவன் தேர்ந்து எடுக்கப்பட்ட நிறுவனத்தின் இணையத்தை காண்பித்தான், அப்பொழுதே நான் அவனிடம் சொன்னேன் இந்த நிறுவனத்திற்கும் என்னுடைய விண்ணப்பத்தை அனுப்ப போகிறேன் என்று, அவனும் ஒற்றுகொண்டான். அந்நிமிடமே அனுப்பிவிட்டேன். அன்று மாலையே நாளை நேர்காணலிற்கு அலுவலகம் வந்துவிடுமாறு கூறிவிட்டனர். மனநிறைவுடன் மறுநாள் டிசம்பர் 24 , 2010 அன்று மயிலாப்பூர் , டாக்டர்.ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள அந்த அலுவலகத்துக்கு சென்றேன்.

என்னை நேர்காணல் கண்ட ராஜ்குமார் முதலிலேயே கூறிவிட்டார் எங்களுக்கு அளவு மதிப்பீட்டாளர் தான் தேவை என்று எனக்கு முழுக்க முழுக்க சைட் அனுபவம் தான் ஆனால் இதுவோ நான் முன்னர் கூறியது போல பல பிரிவுகளில் இதுவும் ஒன்று. ஏதோ ஒரு தைரியத்தில் அனுபவம் உண்டு என்று கூறியவுடன் , அவரோ சிறிய அறையின் இன்டீரியர் வேலைபாடுகளுடன் உள்ள வரைபடத்தை கொடுத்து அளவுகள் எடுக்க சொல்லிவிட்டார். நானும் சைடில் பில்லிங்கு அளவுகள் எடுப்பது போன்று எடுத்து கொடுத்துவிட்டேன். அவரும் அதில் நிறைவு கொண்டவராக ,சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பின்னர் நாளை கூப்பிடுகிறோம் என்று என்னை அனுப்பிவிட்டார்.

ஆனால் நாளையோ எனக்கு நாளை நாளை நாளை நாளை நாளை நாளை என்று 30 நாளை ஆனது.இந்நாட்களில் வேலை இல்லாமல் நல்ல வேலைய்யை விட்டதற்கு கிடைத்த தண்டனை என்று மனதில் பச்சையாய் பதிந்து போனது. மீண்டும் அந்த மயிலாப்பூர் நிறுவனத்துக்கு நானே தொலைபேசியில் அழைத்து என் விவரங்களை கூறி நேர்காணலின் முடிவு என்னிடம் தெரிவிக்கவில்லை என்ன ஆனது என்று கேட்டேன் சிறிது நேரம் லைனில் இருக்க சொல்லி பின்னர் நாளை வருமாறு கூறினர்.

ஜனவரி 23 , 2011 மீண்டும் சென்றேன் இம்முறை நேரடியாக எம்.டியை தான் காண போகிறேன் என்று அங்கு தெரிந்துகொண்டேன். இது தெரியாமால் சாதாரணமாக வந்தது நினைத்து உள்ளுக்குள் நெருடபட்டேன். அழைத்தார்கள் மேல் அறைக்கு சென்றேன் நல்ல விஸ்தாரமாக இன்டீரியர் வேலைபாடுகளுடன் அதுவரை அதுபோன்ற இடம் திரைப்படங்களில் தான் பார்த்து உள்ளேன் (சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இருப்பது போல ). பார்த்தால் அழகிய ஆண்டி பெண் தான் எம்.டி , அதுவே மனதை சஞ்சலபடுத்தியது. கண்டிப்பாகா தேறுவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்து கொண்டேன். அதற்க்கு ஏற்றது போல அவர்களின் கேள்வி அமைந்தது என்ன கருணாநிதி ? ஸ்டாலின் ? என்று பெயர் நான் என்ன அரசியாலா பண்ணுறேன் என்று சிரித்து கொண்டே கேட்டார்கள். நானோ என் சொந்த ஊர் தஞ்சாவூரில் இருக்கும் வரை இந்தபெயரின் பெருமையை கேட்டே வளர்ந்துவிட்டேன் இங்கே வந்த பிறகு தான் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர் என்று சிரித்தும் சிரிக்காமலும் கூறிவிட்டேன் அவர்கள் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். பின்னர் கடவுள் நம்பிக்கை இருக்கா என்று கேட்டார்,( உள்ளுக்குள் இந்த பெயர் வைத்தததால் என்ன கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது என்று நினைத்து கொண்டே நல்ல வேலை எங்க தாத்தா ராமசாமி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைத்துகொண்டு). இருக்கின்றது என்றேன். எப்பபோ சாமி கும்பிடுவ என்று திரும்ப அதே கேள்வி? என்னடா இது சோதனை என்று சில நொடி தடுமாற்றத்திற்கு பின் வாரம் இருமுறை கோவிலுக்கு போவேன் என்று பொய் சொன்னேன். ஓஹோ இஸ் குட் என்று பைலை நான் தரும் போது வலது கையில் கட்டி இருந்த கருப்பு கயிறை பார்த்து உறுதி செய்து கொண்டார். பின்னர் வேலை சம்மந்த கேள்வி பதில்கள், பொய் மட்டும் சொல்லவே கூடாது என்ற அறிவுரை.இறுதியில் நான் தேர்ந்து எடுக்கபட்டுவிட்டேன். இம்முறை இந்த நிறுவனம் இன்டீரியர் வேலைபாடுகளை தான் முதன்மையாக கொண்டது. இது என்னுடைய அடுத்த புது அனுபவம்.

ஜனவரி 31 , 2011 முதல் அங்கு பணியை தொடங்கினேன்.

இந்த நிறுவனத்தில் தான் இதுவரையில் என்னுடைய அனுபவத்தில் அதிக நாட்கள் வேலை பார்த்தது (ஒன்னேகால் வருடம்  ), என்னை நான் தொழில் ரீதியாக முழுமை(ஓரளவுக்கு) படுத்தி கொண்டதும் இங்கே தான். என்னுடைய பணிக்காக அதிகபட்ச அங்கீகாரம் பெற்றது இங்கே தான்.ஓமன் சென்று இருந்தால் கூட இங்கு பெற்ற வளர்ச்சியை பெற்று இருப்பேனா என்பது கேள்விகுறி தான்.இங்கு நான் செயல்படுத்த பட்ட தொழில்முறை தான் இன்றும் என்னை காப்பாற்றி கொண்டு இருக்கின்றது.

முதலாளியாகவும் & தலைமை அதிகாரியாகவும் ஒரே பெண்  இருக்கும் நிறுவனத்தில் பணிபுரிவது மிகவும் கடினாமான சூழலை உருவாக்கும் என்பதை புதிதாக அப்பொழுது பணியாற்றிய  மயிலாப்பூர் நிறுவனத்தில்  உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். அளவு மதிப்பீட்டாளர் என்று எடுத்தமையால் முழுக்க அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது, முதல் இரண்டு நாட்கள் நான்கு பண்டில் வரைபடங்களை கொடுத்து ஸ்டடி பண்ணுங்க என்று கூறினார் என்னை நேர்காணல் எடுத்த ராஜ்குமார் அவர்கள், அவர்களுடைய ப்ராஜெக்ட்டில் தான் இருக்க போகிறேன் என்றும் தெரிந்து கொண்டேன்.

முழுக்க முழுக்க சைடில் பணிபுரிந்து விட்டு இப்படி ஒரே அறையில் இருப்பது மூன்றாம் நாளிலேயே கடுப்படித்து விட்டது, அதுவும் அந்த நிறுவனத்தின் கட்டுபாடுகள் , எலிமெண்டரி ஸ்க்கூளை விஞ்சிவிடுவது போல இருந்தது. மதிய சாப்பாடு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், அலுவலகத்தில் ஸ்மோகிங் ஏரியா கிடையாது, காலை 9.00 மணிக்கு வந்தால் மாலை 6.00 மணிக்கு தான் வெளியேற வேண்டும்.இடையில் எந்தஒரு காரணத்திற்கும் வெளியே போக அனுமதி இல்லை ப்ராஜெக்ட் அன்றி. நான் வெஜ் சாப்பிடகூடாது. இப்படியாக அடுக்கி கொண்டே போகலாம் கட்டுபாடுகளை. ஒரே வாரத்தில் முடிவு செய்தேன் நம் அலுவலகத்தில் இருந்தால் ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க மாட்டேன்,எனக்கு ஒற்று வரும் சைட் வேலை தான் சிறந்தது நான் நினைத்து கொண்டு இருந்தது போலவே. கவர் டுட்டிக்காக சைட்டிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டேன், அபிராமிபுரத்தில் ஒரு செல்வந்தரி பாட்டி  வீட்டின் இன்டீரியர் வேலைப்பாடுகளுக்கு. அப்பாட்டியோ எங்கள் அலுவலகத்தில் போட்ட கட்டுபாடுகளை தூக்கி சாப்பிட்டு விட்டது போல இருந்தது அவர்களின் கட்டுபாடுகள்.கட்டிட  வேலையின் போது வேலையாட்கள் பீடி குடிபதற்கு தடை போட சொன்னால் பார்த்துகொள்ளுங்கள். எவன் அங்க வேலை பார்க்க வருவான். அப்படி தான் இருந்தது அங்கே பணிபுரியும் பொழுது.

ஒரு மாதங்களாக வேலை அங்கு போய்கொண்டு இருந்தது அலுவலக பக்கம் போகாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டு இருந்தது, அத்தியாவசியாமாக வரைபடம் உடனடியாக தேவைபட அலுவலகம் சென்றேன் அன்று அப்பொழுது அங்கு வந்த எம்.டி , என்னை பார்த்து யாருப்பா நீ புது பையன் என்று கேட்க சொல்லுவது அறியாமல் முழித்தேன் அருகில் இருப்போர் கூறினார் இவர் தான் அவர் என்று இம்முறையும் சிரிப்பு தான், என் பெயருக்காக. நானும் கேன சிரிப்பை சிரித்துவிட்டு வந்து விட்டேன். மாதம் ஒருமுறை மீட்டிங் என்று அனைத்து சைட்டிலும் இருந்து அழைக்கபடுவர். எல்லோரும் ஏதோ நேற்றே இறந்தது போல முகத்தை வைத்து கொண்டு  வந்திருந்தனர். எனக்கு அது தான் முதல் முறை என்பதால் சாதரணமாக சென்றேன். அப்பொழுது சைட்டில் இருப்பவர்களுக்கு புது கட்டுப்பாடு விதித்தனர் அதாவுது தினமும் காலை இன்று என்ன வேலைகள் நடக்க போகிறது  என்றும் , மதியம் மேற்கூறிய வேலைகளின் நிலவரம் பின் மாலை அன்றைய நாளின் முடிவுகள். இப்படி தினமும் மூன்று முறை எம்.டிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. எல்லோரும் மீண்டும் ஒருமுறை உச் கொட்டினர் அவர்களுக்குள்ளே தான் கேட்டு கொண்டது. நான் இந்த கட்டுபாடுகளை பின்பற்றாமல் தொடர்ந்தேன் சில நாட்கள் ஆனால் என்னுடைய மேலதிகாரி மூலம் அனுப்ப வேண்டும் என்று செயல்படுத்தபட்டேன். 

அன்று முதல் தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முன் அனுப்பிவிடுவேன், முதல்நாள் மட்டும் பதில் ஓகே என்று இரவு வந்தது பின்னர் மூன்று மாதங்கள் பதிலே வரவில்லை என்றாலும் நான் அனுப்புவதை விடவில்லை. எதேச்சையாக சந்திக்கும் போது ஒருநாள்  எம்.டி, உன்னோட அப்டேட்ஸ் டெய்லி பாக்குறேன் குட் கீப் இட் அப் , ஜஸ்ட் கண்டினியு யுவர்ஸ் வே என்றார். அப்பாடி முதல் வாழ்த்து கிடைத்துவிட்டது இதை தொடர வேண்டும் என்று நினைத்து  கொண்டு இருக்கும் போது, அடுத்த நாளே அலுவலகத்திற்கு மிக மிக அருகில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டேன். நான்கு தளங்கள் கொண்டவையாக வரை படங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது. கோபி என்ற அந்த நிறுவனத்தில் 3 வருடங்களாக  பணிபுரிந்தவர் , எனக்கு மேல் அதிகாரியாக நியமிக்கபட்டார். முழுக்க முழுக்க சைட் கண்ட்ரோல் என்னுடையாதாக வழங்கப்பட்டது. உதவி தேவை என்றால் கோபி அவர்களிடம் கேட்டு பெற்று கொள்ள வேண்டும். நிறுவனத்திலும் மற்ற சைட்களை விட இதற்க்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவை எல்லாம் நான் சேர்ந்து மூன்றுக்கு குறைவான  மாதங்களில் அங்கே நியமிக்கப்பட்டேன் ஏப்ரல் 17, 2011 அன்று.

தொடங்கியது முதல் ஏற்கனவே நான் பழகிய வேலை என்பதால் எளிதாக கையாளமுடிந்தது , ப்ராஜெக்ட் ஜெட் வேகத்தில் சென்றது.கடுமையான இட நெருக்கடிக்குள் வேலை செய்வது ஒன்று தான் புதிதாக இருந்தது.நகரின் மையமான பகுதி என்பதால் கான்க்ரீட் இரவு 10 மணிக்கு மேல் தான் போட அனுமதி கிடைக்கும். பத்து மணிக்கு ஆர்டர் செய்தால் அதன் பிறகு இரண்டு மணிநேரம் கழித்து 12 மணிக்கு மேல் தான் வரும் ரெடி மிக்ஸ் கான்க்ரீட். பின்னர் தொடங்கி வேலை முற்றிலும் முடிய அதிகாலை 5ல் இருந்து 6 மணி ஆகிவிடும். அப்பொழுதும் அந்நேரத்தில்  மெசேஜ்  செய்துவிடுவேன் விவரமாக எப்பொழுது தொடங்கியது ? எவ்வளவு அளவு ? எப்பொழுது முடிந்தது ? என்று அதற்க்கு மட்டும் அந்நேரத்தில் கூட ரிப்ளை வரும் முதலில் அதிர்ந்தேவிட்டேன். என்னடா இந்நேரம் கூட பதில் வருது என்று.

குறிப்பிட்ட நாட்களுக்குள் மிக வேகமாக வேலை நடந்து கொண்டு இருந்தது, ஆகஸ்ட் 9ஆம் தேதி மூன்று தளம் கூரை கான்க்ரீட் முடிந்து விட்டது , இதர வேலைகள் கூட தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருந்தநேரம், என்னுடைய சக ஊழியர் அம்பேத்கர், இவரும் ஒருவகையில் தொழில் ஆசான் தான் என்னை வேலையில் மிக பயங்கரமாக ஊக்கபடுத்துவார். அவரின் மூலம் வேறு நிறுவனத்தில் நல்ல வாய்ப்பு இருக்கின்றது (நான் தான் அந்த வாய்ப்பை கேட்டேன் ஆனால் ஏன் என்று விவரமாக கூறினால் இது போல இன்னும் நாற்பது பதிவுகள் ஆகும் விவரமாக பின்னர் காண்போம்) என்று கூறினார். நானும் அங்கே சென்று நேர்காணலில் நன்கு பேசி எப்பொழுது சேருகிறேன் என்று வரை முடிவு செய்துவிட்டு வந்தேன். அரசால் புரசலாக அலுவலகத்தில் தெரிய தொடங்கி எம்.டி அழைத்து விட்டார். இது நான் அவரை காண்பது மூன்றாவது முறை. ஏன் வேலை விட்டு போக போகிறாய் ? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நன்றாக போய்கொண்டு இருக்கும் உன் சைட் நீ போய்விட்டால் அதை டேக் ஓவர் செய்வது வீண் நேர செலவு என்று என்னை சமாதானபடுத்தி, சம்பள உயர்வு அங்கேயே முடிவு செய்து , மாதம் 3000 ரூபாய் இன்சென்டிவ் என்றும் அதை ப்ராஜெக்ட் முடியும் போது மொத்தமாக பெற்று கொள் என்று என்னை சம்மதிக்க வைத்தார்கள் சாமர்த்தியமாக. முதல் முறை தொழில் நிமித்தமாக என்னை நான் புரிந்துகொண்டேன்.

அதே வேகத்தில் வேலையும் சென்றது செப்டம்பர் மாதம் நான்கு தல ரூப் முடிந்துவிட்டது. இனி உள்வேலைகள் தான் அதுவும் தொடர்ந்து  கொண்டே வந்தது. பின்னர் நிறுவனத்தில் கட்டுபாடுகளுக்கு தான் பஞ்சம் இல்லையே அதில் இன்னொன்று எவருடைய வேலை அம்மாதத்தில் சரிவர இல்லையோ அவரின் குறிப்பிட்ட அளவு ஊதியம் பிடித்து கொள்ளப்படும் அவை பின்னர் தான் வழங்குவார்கள். எவ்வளவு வேதனையான  ஒன்று இது. எனக்கு அது  போல ஒருமுறையும் நடந்தது இல்லை அப்படி நடந்து இருந்தால் அன்றே வேலையை விட்டு இருப்பேன்.


அக்டோபர் 22,2011 நிறுவனத்தில் தீபாவளி போனஸ் தருவதாக கூறப்பட்டு, எல்லோரும் அலுவலகம் அழைக்கப்பட்டு இருந்தனர். அதுவரையில் நான் பெற்றிடாத பணம் அன்று என் கையில் புரண்டது. என் நண்பர்களுக்கெல்லாம் தொடர்பு கொண்டு சந்தோசமடைந்தேன். ஆனால் என் வீட்டில் சொல்லவில்லை. பின்னர் வேலை சுணக்கம் கண்டது உரிமையாளர்களின் நேர  வீணடிப்பு தான் காரணம் என்பதால் நாங்களும் கண்டு கொள்ளவில்லை. அதே போல இன்னுமொரு கட்டுப்பாடு என்னை அழைத்து என்னுடைய சைட்டிற்காக மட்டும் போடப்பட்டது. வேலையாட்கள் அசைவம் சைட்டில் சமைத்து சாப்பிடகூடாது அருகாமையில் உள்ளவர்கள் கம்ப்ளைன்ட் செய்கிறார்கள்  என்று. அடங்கோ அப்போ மாமிங்க தான் சித்தால வரணும் , அய்யர்வாள் தான் மேஸ்திரியா இருக்கணும் என்று காட்டமாக கூறிவிட்டேன். 
முக்கியமான அனைத்து வேலைகளும் முடிவுக்கு வந்து கொண்டே இருந்தது, சில நேரத்தில் பல வாக்கு வாதங்கள் திட்டினாலும் பின்னர்  சமாதானமும் செய்து கொண்டே வந்தார் எம்.டி. என்னுடைய மேல் அதிகாரி இடைப்பட்ட நாட்களில் விலகி அவருடைய சைட்டை முழுகவனம் செலுத்த தொடங்கியமையால்.முழுக்கவே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையில் பணியாற்றினேன்.

அந்நேரத்தில் தான் கோபி அவர்களிடம் முன்னமே கூறி இருந்தேன் , சிங்கப்பூரில் வேலை இருந்தால் சொல்லுங்கள் போகிறேன் என்று.அதை நீண்ட நாட்களுக்கு பிறகு என்னிடம் கூறினார் நண்பரின் நிறுவனத்தில் வேலை என்று நானும் சரி அப்பளை பண்ணுங்க பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டேன்.

ஒரே வாரத்தில் பிப்ரவரி 17 2012 ,விசா வந்துவிட்டது. மீண்டும் ப்த்துபிடித்த நிலை ஆனால் இம்முறை பரிபூரண அனுமதி பெற்று நிறைவாக வெளியேற வேண்டும் ஆனால் அதற்குள் சிங்கப்பூரில் போருக்க வேண்டுமே மார்ச் 22 அங்கே வந்துவிட வேண்டும் என்று வேற அழுத்தம் கொடுத்தனர். இங்கே வேலை முடியவே இன்னும் 3மாதங்கள் (சிவில் எஞ்சினியரிங்கில் இறுதி கட்ட வேலை தான் போட்டு தாக்கி நிம்மதியை கெடுத்து விடும்) ஆகுமே விசா வேல்யு வேறு மூன்று மாதங்கள் தான் , அய்யயோ என்று புலம்பவிட்டுவிட்டனர். அதை எல்லாம் தாண்டி மார்ச் 6 என்னுடைய  ராஜினாமாவை அனுப்பிவிட்டேன் 22ஆம் தேதி என்னை விடுவித்து விடுமாறு. இரவு அனுப்பினேன் இ-மெயிலில் காலை முதல் அழைப்பு எம்.டியிடம் இருந்து. அலுவலகத்தில் வந்து காணுமாறு கூறிவிட்டார்.

சிறிதுநேரம் என்னை சமாதானபடுத்த பார்த்தார், பின்னர் வெளிநாடு என்று நினைத்து கூட என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் ஆனால் ஒரு வேண்டுகோளுடன் குறிப்பிட்ட சில வேலைகளை முடித்துவிட்டு , ஏப்ரல் 5 வரை இருக்குமாறு கேட்டுகொண்டார். நானும் அதை ஏற்று கொண்டேன் நிறைவுடன். ஆனால் சிங்கப்பூரில் என்ன சொல்லி சமாளிப்பது என்று வேறு பயம் தொற்றி கொண்டது. கோபி அவர்களிடமே சொல்லி அதையும் அவர் நண்பரிடம் சம்மதம் வாங்கிவிட்டேன். 

இந்த நிறுவனத்தையும் அந்த நிறுவனத்தையும் பார்த்தேனே ஒழிய , என் வீட்டை நினைக்க மறந்துவிட்டேன். என் மேல் எண்ணிலடங்கா கோபத்தில் இருந்தனர். எங்கயோ போகபோற வீட்டுல வந்து ஒரு மாதம் இருக்க வேண்டாமா என்று தொடங்கி 20 நாள் இருக்க வேணாம் என்றும் 10நாள் இருக்க வேணாமா என்றும் இறுதியில் 3நாட்கள் தான் வீட்டில் இருந்தேன். ஆம் ஏப்ரல் 5ல் சந்தோசமாக நிறைவாக  நிறுவனத்தில் இருந்து  நிறைய வாழ்த்துக்களுடன் அனுப்பிவைக்கப்பட்டேன்.   

வெறும் மூன்று நாட்கள் மட்டும் இருந்தவிட்டு ஏப்ரல் 9, 2012. சிங்கபூர் வந்தடைந்தேன். நேற்றோடு இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை என்னை இவ்வாறு எழுத தூண்டிவிட்டது. இங்கு வந்தது முதல் நான் பெற்ற அனுபவங்கள் மிக மிக மிக அதிகம் இங்கே நான் கண்ட , கண்டுகொண்டு இருக்கின்ற , காண போகின்ற ஒவ்வொருத்தரும் ஓராயிரம் கதைகள் கொண்டவராக இருக்கின்றனர். அவைகளை நான் கூற தொடங்கினால் எங்கெங்கோ போக வேண்டி இருக்கும்.என்னை என்னுடைய விருப்பங்களை என்னுள் இருந்தவற்றை என்னுடைய ஆசைகளை என்னுடைய ஏக்கங்களை என்னுடைய ஆர்வங்களை எனக்கு நன்றாக விளங்க வைத்த பெருமை. சிங்கபூருக்கு முழுக்க முழுக்க உண்டு.

என் சிந்தனை சிறகை சிறகடிக்க வைத்த சிங்கபூருக்கு சல்யுட் _​/\_

பின்குறிப்பு : என்னடா சுயதம்பட்டம் என்று நினைக்காமல் தொடர்ந்து படித்து வருவோருக்கு நன்றி.இதை நான் என்று கூறாமல் அவன் என்று கூறி சிறுகதை போல எழுதவே நினைத்தேன் ஆனால் அது எப்படி இருக்குமோ என்று நினைத்து கொண்டு தவிர்த்தேன்.அதையும் நேற்று ஒரு நண்பரிடம் கேட்டேன் அவரும் கேள்விக்குறியாகவே பதில் சொல்ல நல்லது இப்படி எழுதியது என்று நினைத்து கொண்டேன்.