Saturday 21 December 2013

பிரியாணி- வெங்கட் பிரபு டயட்

எப்பொழுதுமே வெங்கட்பிரபு படம் என்றாலே எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு அதை நான் எப்பொழுதுமே நான் விரும்புவேன் , எப்படியும் கண்டுவிடுவேன் கோவா உள்பட எனக்கு பிடித்ததே ஆனால் அதில் ஓரு சூட்சமம் உள்ளது அதை இப்படத்தில் தான் உணர்ந்தேன் அதை உங்களுக்கு இறுதியில் கூறுகிறேன்.அப்படி ஒரு ஆர்வத்தில் இன்று மதியம் 12.00 மணி காட்சி காண சென்றேன் பிரியாணி ஆனால் நான் சென்று டிக்கெட் எடுக்கையில் யாரும் முன் இல்லை அதனால் என்றென்றும் புன்னகை போங்க அப்படின்னு டிக்கெட் கொடுப்பவரு சொல்ல வேற வலி இல்லாம அதை எடுத்து வர, ஒரு ஜோடி கண்ணுல தென்பட கேட்டா பிரியாணி அப்படின்னு சொன்னாங்க. அது போதுங்க அப்படின்னு டிக்கெட் மாற்றி பார்த்தேன் இன்னைக்கு பிரியாணி.

படம் தொடங்கியதில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தது பின் தேவை இல்லாத விரிவு போல இலுவையோ இழுவை இடைவேளை முன் ஒரு 15 நிமிடங்கள் வரை அப்புறம் சரியான செம்ம ட்விஸ்ட் இடைவேளை முடிந்து ஆரம்பம் ஆர்வமாக தொடங்கியது பின் வழக்கமாக இழுவை தேவை இல்லாத டீடெய்லிங்க் கடைசி 30 நிமிடங்கள் செம்ம ட்விஸ்ட் பரபர செம்ம ஆர்வம் பார்க்கும் பொழுது அங்கே வெற்றி பெற்று விட்டார் வெங்கட் பிரபு.


பிரியாணி தேடி சென்று அதனால் பெற்ற வினையே படத்தின் கதை. இந்த விஷயம் நாம படம் பார்க்கின்ற போது  30 நிமிடங்களுக்கு மேல் தான் தெரிய வரும் ஆனா அதற்க்கு முன் வந்த காட்சிகளின் முக்கியத்துவம் படத்தின் கடைசி 30 நிமிடங்களில் வெறும் முடிச்சி அவிழ்த்து நம்மக்கு புரிய வைக்கும் பொழுது கண்டிப்பாக வெங்கட் பிரபு திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

கார்த்தி தன்னுடைய பங்கை வெகு சிறப்பாகவே செய்து உள்ளார் நடனம் தவிர மற்றும் அவர் ஒரு காட்சியில் சிங்கம் சூர்யா போல  வருவது செம்ம காண்டு ஏன் தேவை இல்லாமல் அவருக்கு விளம்பரம். ப்ளே பாய்  பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். தன் அக்காவை கடத்தி செல்லும் காட்சியில் தன் இயலாமையை நினைத்து வருந்துவது கூட மிக நன்றாக செய்து இருப்பார். ஒரு கதாநாயகனாக தன்னுடைய வேலையை சிறப்பாகவே புரிந்துள்ளார், 3 தோல்வி படங்களை தந்து விட்ட அவருக்கு இப்படம் நல்ல ஒரு ரிலீப் தந்து இருக்கும்.

பிரேம்ஜி  இதுவரை வந்த வெங்கட் படங்களில் என்ன பாத்திரமோ அதையே செம்மையாக செய்து உள்ளார் , ஆனால் இது தான் அவருக்கு கடைசி இதற்க்கு மேல் பொறுமை காக்க நமக்குவழி  இல்லை. ஒரே முகபாவனைகள் அப்படியே தயவு செய்து மாற்றுங்கள் வெங்கட் உங்கள் தம்பி என்பதற்காக எல்லாம் பொறுத்து கொள்ள இயவில்லை. ஆனாலும் சில காட்சிகள் நான்றாக தான் இருந்தது, குறிப்பாக சிங்கம் சூர்யா வேடம் அவருக்கு அப்போ கமல் புலி வேடம் பிரேம்ஜி க்கு  அது நன்றாகவே இருந்தது மற்றும் சில காட்சிகளின் பாவனைகள்.

ராம்கி நீண்ட நாட்களுக்கு பிறகு மிக அருமையான ரீஎன்ட்ரி, தன்னுடைய வேலையை காண கச்சிதமாக புரிந்து உள்ளார். கதை இவரை மையம் கொண்டே செல்லும் இரண்டாம் பாதியில் ஆனால் இறுதியில் வரும் சஸ்பென்ஸ் செம்ம. ஹன்சிகா ஊறுகாய் அவ்வளவே செம்ம அழகு ஆனாலும் அந்த ஹோட்டல் பாட்டுக்கு வருபவர் செம்மையோ செம்ம ஒரு சாங் ஆனாலும் செம்ம. நாசர் பேசவே இல்லை ஆனாலும் படம் முழுக்க இவரை சுற்றியே. ஒரே வருத்தம் சம்பத் மற்றும் ஜெய் பிரகாஷ் இவர்களை ஏன் இப்படி வீணாக்கினார் வெங்கட் ஸோ சேட். சம்பத்தின் நண்பராக வருபவர் சரியான ட்விஸ்ட் க்கு உபயோகம் இப்படி படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.


எனக்கு மிக பெரிய ஏமாற்றம் முதல் முறை யுவன்-வெங்கட் தோல்வியே அதுவும் 100வது படத்தில் முதல் பாடல் தவிர வேறு ஒன்றும் மைண்டில் இல்லை ஆனால் வழக்கம் போல பின்னணி  கலக்கல். அந்த டிக்கெட் வர பாடல் கூட யோசிச்சாலும் வரலை ச்சும்மா கோடான கோடி  பாடு போல வர வேணாம் , என்னமோ போங்க யுவன்.

கேமரா விறு விறு  சரவணன், வெங்கட் படம்னாலே பிச்சி எடுத்துடுவார் போல முதல் காட்சி கார் ஜம்ப் அப்போவே வாய் பிளக்க வச்சிட்டார் அப்புறம் வர அனைத்து சேசிங் காட்சிகளும் மிக அருமையாக செய்து உள்ளார்.

ஆக பிரியாணி படம் பொருத்தவரை கண்டிப்பாக பார்க்கலாம் , அதுவும் வெங்கட் படம் பிடிக்கும் என்பவருக்கு நிச்சயம் பிடிக்கும். சரோஜா பிடித்தவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும். இரண்டாம் பாதி படம் நன்றாக இருந்தால் பிடிக்கும் என்பவருக்கு கண்டிப்பாக நீங்கள் காண செல்லலாம்.


எனக்கு இந்த படத்தில் புதிதாக தோன்றியவை வெங்கட் பிரபுவிடம்

1. இவருக்கு ஸ்டார்டிங் ப்ரொப்லெம் அப்படியே போக போக பிக் அப்  ஆகும் படம் நல்லா கவனிச்சி பார்த்தா முன்ன வந்த இவர் படம் கூட அப்படி தான் இருக்கும் மங்காத்தா கூட.

2.முதல் பாதியில் பிடிக்க வில்லை என்றாலும்  தேவை இல்லாத விரிவாக்கம் தருகிறார் எல்லோருக்கும் முன்ன வந்த கோவா படத்துலையும் அப்படி தான்.

3. வெங்கட் பிரபு அவருக்கு முன்ன விட பின்ன தான் ரொம்ப பிடிக்கும் போல அதனால தான் அவர் படத்துல முன்னடிய விட பின்னாடிய ரொம்ப ரொம்ப நல்லாவே காட்டுறார். ( நான் முன் பகுதி பின் பகுதிய சொல்லுறேன் நீங்க வேற எதுவையும் நினைக்காதீங்க )

4.கண்டிப்பா மிக மிக திறமை உள்ளவர் என்பதும் புலப்பட்டது . ரெண்டு மணி நேரம் கடுப்பாகிய படத்தை கடைசி அரை மணிநேரத்தில் எல்லாம் தேவை என்று நமக்கு புரிய வைத்ததில்.

5. செல்வராகவன் படம் ஆரம்பம் முன் பகுதி மிக பிடிக்கும் என்று எல்லோரும் சொல்லுவர் அது போல இப்போ வெங்கட் பிரபு படம் பின் பகுதி எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லுகின்றனர்.

Friday 22 November 2013

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்

முன்குறிப்பு :

இதுவரை நான் எழுதுவதை (கொஞ்ச நாளா தான்) தொடர்ந்து படித்து வர நண்பர்களுக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கும் , இயக்குனர் செல்வராகவனின் விசிறி நான்  என்பது ஆனால் இப்பொழுது அவரின் இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை பற்றி கூறும் பொழுது இதை விமர்சனம் என்று நினைக்காமல் முழுக்க முழுக்க என் பார்வையில் இரண்டாம் உலகம்  திரைப்படத்தின்  என்னுடைய கருத்து என்றே கூறிவிடுகிறேன்.

இரண்டாம் உலகம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்து தான் காண சென்றேன்  ஆனால் நேற்று இரவு முதல் இன்று மலை வரை விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது , அதிலும் எதிர் விமர்சனங்கள் செல்வராகவனை முற்றிலும் புறம் தள்ளுவது போலவும்   மாறாக ஆதரவாக வருபவையோ செல்வாவின் மாஸ்டர் பீஸ் அடுத்த கட்டம் சென்று விட்டார் என்று சரி தான் இதுவும் இன்னொரு புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் கேஸ் தான் போல  என்று ஒரு நிலைக்கு வந்து எப்பொழுதும் போல இயக்குனரின் மேல்  நம்பிக்கை குறையாமல் சென்றேன். முழுநிறைவோடும் மனம் முழுக்க ஒரு சின்ன கனத்தோடும் தான் வந்தேன் எங்கே இந்த படமும் கேட்பார் அற்று காலம் கடந்து புரிந்து கொள்ளப்படுமோ என்ற சந்தேகம் தான் இப்பொழுதைய தமிழ் சினிமாவில் அந்த சந்தேகம் அடிக்கடி நல்ல திரைப்படங்களை பார்த்தால் உடனடியாக வருகின்றது, மற்றபடி நம் சினிமாவிற்கு முற்றிலும் மாறுபட்ட அடுத்த நகர்வுக்கான அழுத்தமான தொடக்கமே இரண்டாம் உலகம்.


படத்தின் கதையை கூறினால் நிச்சயம் சுவாரசியம் குறைந்து போகும் அதிலும் மனித உணர்வுகளை தாண்டி படம் மேகிங்கில் மிரட்டுவதால் கதையை சொல்லுவது சரியாக இருக்காது. ஒரே வரி கதை ஆனால் அதை அற்புதமான திரைக்கதை  பின்னலால் ஆசாத்திய கதை ஆக்கிவிட்டார் இயக்குனர். உண்மையான காதல் எந்த கண்டமும் தாண்டி கூட வெற்றி பெரும். இது தான் கதை. மைய கதாபாத்திரங்கள் மொத்தமே 5 (அ) 6 நபர்கள் தான், அதிலும் பெரும்பாலான காட்சிகள் மௌன மொழியாகவே தன் படைப்பின் மேல் உள்ள நம்பிக்கையில் வசனமற்று  காட்சி மொழியாகவே படைத்து இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டும், திரைப்படம் காட்சி மொழி என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்கு.

ஆர்யா, நிச்சயம் நான் கடவுள் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்டு திறமையை வெளிக்காட்டியது , ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய எந்த சாயலும் வெளிபடாதது வியப்பை தான் தந்தது. முதலில் அனுஷ்காவிடம் முடியாது என்று சொல்லிவிட்டு பின் காதலுக்காக ஏங்குவதும் உருகுவதும் கிளாஸ் ஆக்டிங். மாவீரனாக உருவெடுக்கும் போது புகுந்து விளையாடி இருக்கிறார் , எகத்தாளமான பேச்சு அனுஷ்காவிடம் மட்டும் அடங்கி போவது என்றும் பின் எழுச்சி பெறுவதும் என்று ஆர்யாவின் மைல்கல்லாய் தான் இருக்கபோகின்றது இரண்டாம் உலகம். அதுவும் இடைவேளைக்கு முன் வரும் காட்சிகளும் நாயுடன் சேர்ந்து நடிக்கும் பொழுதும் கலங்க வைத்து விடுகிறார் பின் தொடர்ந்து இடைவேளை பிறகு தொடரும் காட்சிகளிலும் தேடுதலை துவங்கும் போது அப்ளாஸ் அள்ளினார் திரை அரங்கில். மிருகத்தோடு சண்டையிட்டு பின் வெற்றி பெரும் காட்சி வெறி திமிர் தெரிந்தது ஆர்யாவிடம், அதே போல இறுதிகட்ட காட்சிகளில் காதலை உணர்வதும் ஒருவர் பின் காதல் சேர்ந்த நிறைவு கொள்ளுவதும் என்று இருவேறு பாத்திரத்தில் நன்றாக முழுமை பெற்று இருப்பார்.

அனுஷ்கா இதுவரை தமிழ் சினிமாவில் இவரை பயன்படுத்திய இயக்குனர்கள் பார்த்தால் வெட்கி தலை குனிய தான் வேண்டும். முழுகதையையும் தன்னை சுற்றி வர கூடிய மைய பாத்திரம் ஆனால் இவரோ அனாசியமாக நடித்து தள்ளிவிட்டார். ஆர்யாவிடம் காதலை சொல்ல தடுமாறுவதும் பின் வருந்துவதும் என்று சுடிதாரில் பல பேர் மனதுகளை கொள்ளை கொள்ள போகிறார். ஆர்யாவிடம் முரண்டு பிடித்து சண்டை போடுவதாகட்டும் பின் தேடி செல்லுவதாகட்டும் அனுஷ்கா என்ற நடிகைக்கு கிடைத்த அற்புத படைப்பு இரண்டாம் உலகம். சண்டை காட்சிகளில் எத்தனை நாட்கள் தான் பெண்களில் விஜயசாந்தி என்றே கூறி கொண்டு இருப்பது , இதில் பாருங்கள் பின் நான் சொல்லுவது புரியும்.அனுஷ்காவின் தோழியாக வருபவரும் தன் தேர்வை சரி செய்து இருப்பார் அதே போல ஆர்யாவின் நண்பனாக வருபவர் (சுட்ட கதை படத்துல நடிச்சவரா ???) முதல்பாதியில் வரும் காட்சிகளும் பின்  கனிமொழியே பாடலிலும் கிச்சு கிச்சு மூட்டுவார்.அதே போல சிறிது நேரம் மட்டும் வரும் ஆர்யாவின் அப்பா ஒரு சின்ன தாக்கத்தை தருவது நிச்சயம் அதுவும் அவரின் அறிமுகம் கொஞ்சம் சிறு அதிர்ச்சி மற்றும் உணர்வை தூண்டும் காட்சியாக தான் எனக்குப்பட்டது.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி , நீண்ட நாட்களுக்கு பிறகு நம் திரைப்படங்களில் அற்புதமான ஒளிப்பதிவு இதில் , மழையோடு அனுஷ்கா விளையாடும் பொழுது இவரின் காமெராவும் விளையாடியது போல கொள்ளை அழகு அதுவும் கண்ணாடியில் மழை நீர் சொட்ட சொட்ட அதன் பின் இருக்கும் அனுஷ்காவை அப்படியே காட்டும் பொழுது கவிதை போல இருந்தது. இடைவேளைக்கு முன் வரும் இரவு நேர காட்சிகளில் அப்படியே துள்ளியமான அந்நேரம் கிடைத்தது என்று படம் முழுக்க தன் பங்கை மிக திறமையாக கையாண்டு உள்ளார் ராம்ஜி. வி.எப்.க்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம்  குறிப்பிட்ட பட்ஜெட்டில் மிக அற்புதமாகவே இதுவரை வந்ததை காட்டிலும் சிறந்ததாகவே வந்துள்ளது அதற்க்கும் இப்படமே முன்னோடி தான்.


பாடல்கள் மிகபெரிய மைனஸ் அதுவும் செல்வாவின் படங்களில் இது மட்டுமே விதிவிலக்கு , ஏதோ காட்சிபடுத்துதலில் அதை கொஞ்சம் ரசிக்க வைத்துவிட்டார் இயக்குனர். ஹாரிஸ் போட்ட பின்னணி இசை கூட வரவில்லை படத்தில் எந்த இடத்திலும். பின்னணி இசையில் அனிருத் இன்னும் எதிர்பார்த்தது, ஆனால் பெரும்பாலான இடங்களில் மௌனமாகவே இருந்தது தேவை உணர்ந்து இவரிடம் பெற்றது வெளிப்பட்டது. ஆர்யா முதல் முதலில் அனுஷ்காவை நினைத்து காதலில் தவிக்கும் பொழுது வரும் பின்னணி இசை, கோவா செல்லும் பொழுது தொடரும் இசை , இடைவேளை முன்னும் பின்னும் தொடர்ந்து அதிரடியின் போதும் மிரட்டி தான் உள்ளது அனிருத்தின் இசை.

இயக்குனர் செல்வராகவன் , இப்படி பட்ட கதையை நம் மக்களை நம்பி யோசித்து அதை எடுத்தமைக்கே இவரை பாராட்ட வேண்டும் அதிலும் தன்னால் முடிந்த அளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். நிச்சயம் இரண்டாம் உலகம் தவிற்க முடியாத படமாக தான் ஆகும். அதுவும் இக்கதை ஒரு நாவலாக வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அத்தனை அம்சமும் இக்கதையில் இருக்கின்றது திரைப்படத்தை விட இன்னும் சிறப்பாக வரும் நாவலாக வந்தால். ஆயிரத்தில் ஒருவன் படத்துல பேசுன தமிழ் புரியலைன்னு சொன்னதுக்காக இதுல எல்லாரையும் சுத்த நடைமுறை  தமிழ்ல பேசவுட்டு பதில் சொல்லிட்டார் போல , அப்புறம் ஹாலிவுட் படம் மட்டும் தான் நம்ம ஆளுங்க வரவேற்பாங்க போல என்று பெரும்பாலான துணை நடிகர்கள் வெளிநாட்டினரே போட்டு எடுத்து இருக்கார். இதனாலும் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதையும் விடுத்து இதில் லாஜிக் பார்த்து குறை சொன்னால் நிச்சயம் தனிப்பட்ட இயக்குனரின் மேல் ஆனா பார்வையே. இது அவர் உருவாக்கிய உலகம் அவரை நாம் தொடர்ந்தாலே புரிந்துவிடும்.

சில இயக்குனரின் படங்களை டெம்ப்ளேட் காட்சிகளோடு பார்ப்போம் , சில நாயகர்களின் படங்களை அவரின் வருகை எப்போ எப்போ என்றே காண்போம் ஆனால் சில படங்களை நாம் சிறு வயதில் கேட்ட கதை போல என்ன என்ன என்று அடுத்து அடுத்து இயக்குனரை பின் தொடர வேண்டும் அப்பொழுது மட்டுமே நிச்சயம் முழுமை பெற முடியும் அவ்வகையான திரைப்படமே இரண்டாம் உலகம். பெருமைமிகு படைப்பு என்பதில் வியப்பேதும் இல்லை ஆனாலும் தற்போதைய நிலவரப்படி நல்ல சினிமாக்களை எல்லாம் கைவிடுவது  போல விடுத்து பின்னர் மட்டுமே விட்டதை நினைத்து வருத்தம் மட்டும் கொள்வோமோ என்ற நினைப்பு தான் உறுத்துகிறது.

இரண்டாம் உலகம் - தமிழ் சினிமாவின் புது உலகம்



பின்குறிப்பு :

1.முதல் நாள் என்றாலும் இதுவரை இங்கே பெரிய நடிகர்களின் படங்களை தவிர எதற்கும் கூட்டம் இருக்காது ஆனால் இன்று நான் கண்ட காட்சி ஹவுஸ் புல் , செல்வாவிற்கு இங்கே வரை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

2. படத்தில் இடம் பெரும் சில வசனங்களை  மேற்கோள் காட்டி குறிப்பிட வேண்டும் என்றே தோன்றியது ஆனால் அவைகள் மிக முக்கியமான காட்சிகள்  என்பதால் தவிர்த்துவிட்டேன் அதை பற்றி பின்னர் இல்லை பின்னுட்டங்களில் பார்ப்போம்.அதே போல சொல்ல வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது அதையும் இன்னும் ரெண்டு மூன்று தடவை பார்க்க பார்க்க தெரியவரும் விரிவாக அப்பொழுது பார்ப்போம்.

3.என்ன இருந்தாலும் எனக்கு இதை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்து இருந்தது அது ஏன் என்றால் ஆயிரத்தில் ஒருவன் மிக பிடித்தவருக்கு மட்டுமே தெரியும்.ஆனா அது பிடிகாதவுங்களுக்கு கூட இது பிடிக்கும்.

Monday 11 November 2013

முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம்

திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு  தரகூடிய தலைப்பு  இரண்டாம் உலகம்.


இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வரலாற்றில் அதன் வழியாக  கொட்டி கிடக்கும் கற்பனைகளுக்கு உயிர் ஊட்டிய  முயற்சியை  தொடங்கிவைத்த பெருமை இவரையே சாரும்,அது  அந்த படத்தின் வெற்றி தோல்வி என்று பேச்சை தவிர்த்து பார்த்தால் புரியும். அவ்வளவு  எளிதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒதுக்கி தற்கால தமிழ் சினிமாவை பற்றி பேசவும் விவாதித்திடவும்  முடியாது. ஒரு நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் எடுத்த படத்தில் எந்த படத்தை ஏன் எடுத்தோம் என்று நினைத்தீர்கள் ??? என்ற கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி அடுத்த நொடியில் செல்வா கூறியது ஆயிரத்தில் ஒருவன் அருகில் அப்பொழுது இருந்த அவர் மனைவி கீதாஞ்சலி கூட அதிர்ச்சியில் சற்று தடுமாறுவது நன்றாக தெரியும்.

 அந்த நேர்காணலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (8.33ல் அக்கேள்வி கேட்பார்கள் )



இப்படி கூறியதால்  செல்வராகவன் அவர் மனதில் அப்படத்தால் எந்தளவுக்கு சொல்ல முடியாத உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும்.ஆனால் அப்படம் என்னை போன்ற பலருக்கு செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதையும் நிச்சயம் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். அதனால் தானோ என்னவோ இல்லை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ மிக தைரியமாக இரண்டாம் உலகம்  படத்தின் முதல் முன்னோட்டம் கொண்டு இப்பொழுது வரும் முன்னோடங்களில் கூட,

 FROM THE MAKERS OF "ஆயிரத்தில் ஒருவன்"


 என்று கிரெடிட் தந்து,  ஏன் படத்தில் கூட  நிச்சயம் வரும் போல,  என்னை போன்ற அப்படத்தை கொண்டாடியவர்களுக்கும் அதில் தங்கள் உழைப்பை கொட்டியவருக்கும் நன்றி தெரிவித்தது போல செய்துவிட்டார் செல்வராகவன்.

எல்லோரும் வழக்கமாக செல்வாவின் படங்களை எதிர்வினை ஆற்றும் பொழுது இவருக்கு காதல் களம் கொண்ட கதைகள் நன்கு  வருகின்றது அதை விடுத்து ஏன் வேறு களங்களில் முயற்சி செய்கிறார் என்று கூறுவார்கள் அதில் ஒரு துளி கூட உடன்பாடு கிடையாது எனக்கு எப்பொழுதும்  , அப்படி அவர் தொடங்கிவைத்த புதுப்பேட்டை  , ஆயிரத்தில் ஒருவன் என்று எவராலும் அதை போன்ற படைப்புகளை விஞ்சவோ  தொடரவோ  முடியவில்லை, ஆரண்ய கண்டம் மட்டும் விதிவிலக்கு.இதோ அவரே தொடர்ந்து விட்டார் எல்லோரும் சொல்லுவது போல காதல் களம் அதில் இரண்டு உலகம் என்று அவர் நிகழ்த்த போகும் மாயயை பெரும் எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கின்றது.

படத்தின் முன்னோட்டத்தை காண கிளிக்கவும்


ஆர்யா நிச்சயம் இதுவரை நாம் கண்டதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆர்யாவை காணலாம் அது உடல் மொழி கொண்டு நடிப்பில் வரை புதுமையை காண நிறைய வாய்ப்புள்ளது. அனுஷ்கா என்ற நடிகையை தமிழில் எவரும் பயன்படுத்தியது இல்லை, செல்வாவின் படத்தில் நாயகிக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் தான் அதை சொல்லியா  தெரிவிக்க வேண்டும் ஆக இதில் நிச்சயம் அனுஷ்காவின் அடுத்த பரிணாமத்தையும் காணலாம்.

இவைகளை தாண்டி முன்னோட்டத்தை காணும் பொழுது வழக்கமான செல்வாவின் பளிச் என்பது நிறையவே வெளிபடுகின்றது உதாரணம் அனுஷ்கா காலை தூக்கி ஆர்யா மேல் போடுவது, நாயகன் நாயகியை விட  கொஞ்சம்  மென்மையாகவும் வெளிக்காட்டுவது, காதலில் உருகுவதும் வருந்துவதும் என்று செல்வாவின் இந்த வருகை அழுத்தமாக பதியவேண்டும் என்றே நினைத்து கொள்ளுகிறேன்.

செல்வராகவன் என்ற இயக்குனரின் மற்றும் இயக்குனரை நம்பி இதை தயாரிக்கும் பி.வி.பியும் மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மிக சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் இரண்டாம் உலகம்.

நவம்பர் 22 முதல் "இரண்டாம் உலகம்"


Sunday 20 October 2013

முதல் முயற்சியும் என்னுடைய தேர்வும் -1


எப்பொழுதும்  நான் நினைக்கும் & எதிர்பார்க்கும்  ஒரு படம் வெளியாகி அதை குறைந்தது 3 நாட்களுக்குள் எப்படியாவது பார்த்தால் தான், என் மனம் நிம்மதி அடையும் , அதற்காக எந்த ஒரு படத்தையும் என்று கூற முடியாது வெளியாகும் படங்களின் தன்மைகளை பொருத்து  அமையும்.
 வெளியாகும் முன் தமிழ் திரைப்படங்களை என்னளவில்  ஒரு மதிப்பீடு செய்து கொள்ள முடியும், அது அந்த படங்களின் தொழில்நுட்பம் புரியும் நபர்களை முதன்மையாக கொண்டு முக்கியமாக இயக்குனரின் முன் வெளியான படங்களை கண்டு. ஆனால் இவைகளை தாண்டி புதிய படைப்புகளில் அதை வரவேற்க மிகவும் ஆர்வம் கொள்வேன் பல படங்களை அது போல என் விவரம் எட்டி நானாக முதல் நாள் சென்று பல படங்கள் பார்த்துள்ளேன், அவைகளில் பெரும் வெற்றி பெற்றும் உள்ளது (சுப்ரமணியபுரம் , வெண்ணிலா கபடி குழு , வெயில் .....) பலர் சில படங்களை  அப்பொழுது விட்டு இப்பொழுது கொண்டாடி கொண்டும் உள்ளனர் (சில படங்கள் மொக்கை வாங்கியும் உள்ளேன் ) . குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில் அவ்வாறு செய்து நான் முதல் நாள் கண்ட படம் மூடர் கூடம்  அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட ஆரண்யகாண்டம் . இந்த இரண்டு படங்களையும் ஏன் குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால் இந்த படங்கள் தமிழ் திரைஉலகின் முத்துகள் வேறு தளத்திற்கு கொண்டு சென்றவை. முழுக்க முழுக்க புதுமுகங்களால் புது முயற்சியில் எடுக்கப்பட்டு  புதிய அனுபவம் தந்தது என்னை சிறிதும் ஏமாற்றம் அடையசெய்யவில்லை. இப்படிப்பட்ட தமிழ் திரை உலகின் பெருமைமிகு படைப்புகளை திரை ரசிகனாக முதல் நாள் கண்டேன் என்பதில் எனக்குள் ஓர் பெரும் மகிழ்ச்சி.

அதுபோலவே இப்பொழுது புது முயற்சி கொண்டு வெளிவர போகும்
"சுட்ட கதை" படமும் என்னுடைய எதிர்ப்பார்ப்பில் நிச்சயம் குறைவைக்காது என்றே நம்புகிறேன்.

ஆரண்யகாண்டம் , மூடர் கூடம் எவ்வாறு மதிப்பீடு செய்து  சென்றேன் என்றும் , இப்பொழுது சுட்ட கதை என்ன எதிர்பார்ப்பில் உள்ளேன் ??? ஏன் ??? என்று உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஆரண்யகாண்டம்  -

ஆரண்யகாண்டம்  படம் வருவதற்கு முன் அந்த படத்தை பற்றி எந்தவொரு நுட்பமான  செய்தியும்  தெரியாது. யுவன் இசை , சரண் தயாரிப்பு இவ்வளவு தான் தெரியும்.யுவனின் இதுபோன்ற முதல்முறை ஒரு இயக்குனர் உடன்  பணியாற்றும் பொழுது மிக அருமையாக தன்னால் ஆன முழு உழைப்பையும் தந்து இருப்பார். அவரின் பல வெற்றி படங்களின் இசைகளை சர்வசாதரணமாக இதுபோல வரும் புது இயக்குனர்களின் முதல் படத்தில் கண்டுவிடலாம், (பதினாறு , காதல் சொல்ல வந்தேன் (யுவனிடம் முதல் முறை) , பானா காத்தாடி, தீராத விளையாட்டு பிள்ளை , வாமணன், சிவா மனசுல சக்தி ) இந்த படங்கள் பெரும்பாலும் முற்றிலும் இவர்களின் முதல் படைப்பு இதில் படம் தோற்றாலும் , யுவனின் இசை வெற்றியே ஆகையாலே யுவன் இசை என்றால் ஓர் எதிர்பார்ப்பு என்னிடம் உண்டு. இது முதல் காரணம்.


 ஆரண்யகண்டம் படத்தை காண வேண்டும் என்பதற்கு.
இதை போலவே தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்றால் அவரின் படங்களும் அதுவரையில் எதிர்ப்பார்ப்புடன் தானே இருந்தது , இதே இந்த இருவர்களை  நம்பி சென்று ஏமாந்தேன் (அதிலும் யுவனின் இசை நிறைவு செய்தது குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் ).  அதற்காக எல்லாம் ஒரு படைப்பாளியை தவிர்த்து விட கூடாது என்பது என்னுடைய கருத்து.

இவைகளை தாண்டி இப்படத்தின் முன்னோட்டம் கண்டவுடன் முடிவே செய்து விட்டேன் , அதில் அத்தனை ஒரு புதுமை இயக்குனரின் வெளிப்பாட்டை  முன்னோட்டத்தில் கண்டவுடனே பிடித்து விட்டது . அவரின் திரை மொழி அவ்வளவு ஈர்த்தது என்னை.
 ஆரண்யகாண்டம் பற்றிய என் சிறு பார்வையை இந்த இணைப்பில் காணலாம்  http://arjiththala.blogspot.sg/2013/08/blog-post.html

மூடர் கூடம் -


இந்த படமும் ஆரம்பம் முதல் பசங்க பாண்டிராஜ் வெளியீடு என்றே விளம்பரபடுத்தியதில் தான் நான் இதை பின் தொடர்ந்தேன். அதுவரையில் வந்திருந்த பாண்டிராஜின் அனைத்து திரைப்படங்களையும் முழுமையாக உள்வாங்கி இருந்தேன் , வம்சம் படத்தில் கூட என்னை மிக கவர்ந்தது அந்த இடத்தின் நேடிவிடியை அப்படியே அச்சு அசலாக காட்டி இருப்பார், அது உண்மை என்றும் பல நண்பர்கள் கூறும் போதே ஆச்சிரியம் அடைந்தேன். அதனால் இவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும் என்று மனதார நம்பினேன்.

என்னுடைய அந்த நினைப்பை அப்படியே இன்னும் அதிகமாக்கியது படத்தின் முதல் முன்னோட்டம் அதில் வேறு எதுவும் இடம் பெறாது மூடர் கூடம் என்றால் என்ன என்று ? பொது மக்களிடம் கேட்க பட்டு இருக்கும் அதுக்கு அவரவர் சொல்லும் பதில்கள் இன்றைய நம் ஊரின் தமிழ் மொழியின் நிலையை நமக்கு கூறாமல் நம்  பொட்டில் அடித்தது போல இருக்கும். அடுத்து அடுத்து இதே போல வந்த முன்னோட்டங்களும் மொழிபற்றை வலுவாக கூறுவது போல இருந்து இறுதியில் அவர்கள் ஏதோ திட்டம் போடுறாங்க அது என்ன போல வைத்து அதில் இடம் பெரும் வசன உச்சரிப்பு அப்பொழுதே ஒரு வித புதுமையை உணர்த்தியது.

படமும் எதை நம்பி போனேனோ அதை வட்டியும் முதலுமாக எனக்கு தந்தது , என் ரசனையின் தன்மையை இன்னும் மெருகு ஏற்றியது.

மூடர் கூடம் பற்றிய என் விரிவான பார்வையை இந்த இணைப்பில் காணலாம் http://arjiththala.blogspot.sg/2013/09/blog-post_14.html


சுட்ட கதை -


சுட்ட கதை வரும் 25ம் தேதி வெளியாகின்றது , இப்படம் முழுக்க புதியவர்களின் முயற்சி தான் மேற்கூறிய படங்களை போலவே ,படத்தின் மேகிங் கூட புதியதாக இருக்கும் என்று தெரிகிறது இவர்களின் முன்னோட்டம் மற்றும் விளம்பரம் செய்யும் யுக்தி இவைகளை கண்டால்.

இப்படத்தின் முன்னோட்டத்தை காண இந்த இணைப்பை காணுங்கள்
http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o
http://www.youtube.com/watch?v=E1Pcxlh7kNk
http://www.youtube.com/watch?v=7Ymsp4edrjY
http://www.youtube.com/watch?v=NkzkWwlgTS8

இப்படத்தின் விளம்பர முறையை காண இந்த இணைப்பை காணுங்கள்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zTfa6HHEPJQ

பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் தொலைகாட்சிகளில் கூவி கூவி விற்கும் ஆண்மை மருந்து என்று அலப்பறை செய்வோரை மேற்கண்ட விடியோவில் கலாய்த்து எடுத்து விட்டனர்.இதுவே இப்படி என்றால்  படத்தில் இது போல இன்னும் எதை எல்லாம் துவம்சமோ , இதுவே சொல்லுகிறது இப்படத்தின் புது முயற்சியை.

இவைகளை பார்க்கும் போதே நிச்சயம் புதிய அனுபவம் தரும் என்ற நம்பிக்கை தருகின்றது ,மேலும் படத்தை பற்றி வரும் முன் செய்திகள் கூட எல்லோரையும் கவரும் விதமாகவே வருகின்றது.
விரிவான "சுட்ட கதை"யின் முன்னோட்டம் என் பார்வையில் இந்த இணைப்பை பாருங்கள் http://arjiththala.blogspot.sg/2013/10/blog-post_15.html

இது போல மதிப்பீடு செய்து நானும் இது போன்ற படங்களை  முதல் கண்டு நமக்குள் நெகிழ்ச்சி மற்றும்  மகிழ்ச்சி அடைந்து கொண்டு அதை மற்றவர்களிடம்  கொண்டு செல்கையில் வரும்  ஓர்விதமான  பெருமிதம் அவ்வளவே. நல்ல படைப்புகளை நாமும் கண்டு அதை வரவேற்கின்றோம் என்ற நப்பாசை. அதனாலே அடுத்த புது முயற்சி கொண்ட படம் என்ற நினைப்பிலும் புதியவர்களை வரவேற்க வேண்டியும் சுட்ட கதை படத்தை எதிர்பார்த்து உள்ளேன். இது போல பெரும்பாலும் முதல் படைப்பாளிகளை கண்டு பிடித்து அவர்களின் திறமையை எளிதில் உணர்ந்து விடலாம் ஆனால் வழக்கமாக நற்பெயருடன் இருக்கும் சிறந்த இயக்குனர்களை நம்பி தான் பல முறை ஏமாந்து விடுவோம். அது பற்றிய விவரங்களை பின்னர் காண்போம்.

Tuesday 15 October 2013

சுட்ட கதை - முன்னோட்டம் என் பார்வையில்




பெரும்பாலும் இந்த வருடத்தில்  கலை ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது திரைப்படங்களின் வருகைகள் ஆகஸ்ட் மாதம் வரையில் அதன் பிறகு ஆகஸ்ட் 15 அன்று வெளியான ஆதலால் காதல் செய்வீர் முதல் தங்கமீன்கள் , 6 மெழுகுவர்த்திகள் , மூடர் கூடம் , ஓநாயும் ஆடுகுட்டியும் என்று எதிர் விமர்சனகளை விஞ்சி வசூலில் இவைகளில் சில வெற்றி பெற்றும்  பெரும்பாலனோர் நெஞ்சில் பதிந்தது இப்படங்கள் அந்த வரிசையில் அப்பொழுதே ஆகஸ்ட் மாதமே வெளிவரவேண்டிய இப்படமும் பெரும் இடையுறுக்கு பிறகு வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகின்றது. "சுட்ட கதை" .

ஒரே வாரம் அக்டோபர் 25க்கும் தீபாவளி திரைப்படங்களின் வருகைக்கும் ஆன இடைவெளி. வெறும் 7 நாட்களை நம்பி இக்கால சூழலில் திரைரசிகர்களை மட்டுமே நம்பி வெளிவரும் இப்படத்தை , எல்லோரும் நிச்சயம் திரை அரங்கில் பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டும்.இதுபோன்ற புது முயற்சி கொன்ற திரைப்படங்களை வரவேற்கும் பட்சத்தில்  , நம் திரை உலகமும் மென்மேலும் வளரும் புது புது வகைகளான திரைப்படங்களையும் நாம் காண முடியும்.

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் வெளிவர இருக்கும் இப்படத்தின் "சுட்ட கதை " முன்னோட்டம் காண கீழே உள்ள இணைப்பை காணுங்கள்

http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o

இந்த முன்னோட்டத்தை கண்ட பொழுதே எனக்கு இப்படத்தின் மேல் ஓர் எதிர்பார்ப்பு வந்து விட்டது. புதியவர் சுப்பு அவர்கள் எழுதி இயக்க ஏனைய அனைத்து திரை மறைவு உழைப்பை தந்தவர்களும் புதியவர்களே . இப்படமே அவர்களுக்கு முகவரியாய் இருக்க போகின்றது. முதன்மை காதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும் இப்படமே நல்ல முகவரியாய் இருக்க போகின்றது.

 கதை என்று என்னால் யூகிக்க முடிந்த வரையில் கொலை வழக்கை விசாரிப்பது அதை பற்றிய கண்டு பிடிப்பு என்றே முன்னோட்டம் காண்பதில் என் பார்வைக்கு புரிபடுகின்றது. அதுவும் அக்கொலை சுட்டு கொல்லப்பட்டு இருக்கும் போல அதனாலோ என்னவோ சுட்ட கதை என்று தலைப்பு இவ்வாறே யூகிக்கின்றேன். நிச்சயம் இது முது மாதிரியான முயற்சி என்பதை மேற் கூறிய என் கருத்தையும் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தலுமே புரிந்துவிடும்.


இவைகள் விடுத்து இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை பார்க்கும் பொழுதே என் நம்பிக்கை நிச்சயம் பொய்த்தல் ஆகாது  என்றே தோன்றுகிறது . நாசர் , ஜெயப்ரகாஷ் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் , எம்.எஸ் . பாஸ்கர் இவர்களின் தேர்வும் இவர்களின் முன்னைய திரைப்படங்களின் பங்களிப்புகளும் பெரும்பாலானவை எல்லோராலும் போற்றபட்டவையே. ஆகையாலே என்னால் உறுதியாக இப்படத்தை நம்ப முடிகின்றது.

இதுபோன்ற புதுவகையான  திரைப்படங்களை நாம் எப்பொழுதும் வரவேற்க மறந்து பின் வழக்கம் போல வெட்டி கதை பேசுவதை விடுத்து , சுட்ட கதை படத்தையாவுது திரை அரங்கில் சென்று கண்டு புதியவர்களின் முயற்சிக்கு கைகொடுப்போம் அதுவும் அக்டோபர் 31 தலயின்  ஆரம்பம்  வெளியீடு என்று குறிக்கொண்டு இருக்கும் நிலையில் வெறும் ஏழு நாட்களை நம்பி நம்மை போன்ற திரை ரசிகர்களை நம்பி வெளியீட படும் "சுட்ட கதை" படத்தை நிச்சயம் வெற்றி படம் ஆக்க வேண்டும்.

" நம்பி வாங்க நிச்சயம் நிறைவா போவீங்க"

Sunday 13 October 2013

"க்ராவிடி" (GRAVITY) - சாகச அனுபவம்

போனவாரம் வெளியான ரெண்டு தமிழ் படமும் (வணக்கம் சென்னை & நய்யாண்டி ) வெளியாவதற்கு முன்னேயே அதை பற்றிய என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது இப்பொழுது வெளியானதுக்கு பிறகு, ஆனா அதுலையும் வணக்கம் சென்னை வம்படியாக போகி மொக்கை வாங்குனேன். அந்த சோகத்த எப்படிடா போக்குறதுனு நினைச்சிட்டு இருந்தப்போ, நாமலும் ரெம்ப நாள் ஆச்சு திரைஅரங்கில் ஹாலிவுட் படம் பார்த்து , இங்கையும் சில நண்பர்கள் சொல்லிடே இருந்தாங்க கடந்த இரண்டு வாரமாக படம் மிக அருமையாக இருக்குது பாருங்க என்று,  அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம குழு (https://www.facebook.com/groups/ThirstForCinemas)  திரைப்படங்கள் பற்றி விவாதிக்க கூடிய அருமையான களம் எந்த நாட்டு படமும்   என்ன மொழிப் படமும் பற்றி முழுமையா தெரிஞ்சிக்கலாம். அப்படி அவுங்கட்ட கேட்டா இதலாம் இப்படி கேட்ககூடாது போய்  பார்த்துட்டு வந்து சொல்லணும் அப்படின்னு நமக்கு  இன்னும் ஹைப் ஏற்றி விட கண்டிப்பா போய்டனும்னு, போயாச்சு.          "க்ராவிடி" (GRAVITY)


பெரும்பாலும் நான் என்னோட திரைப்படம் பற்றிய பார்வையை தெரிவிக்கும் போது அந்த படத்தின் தன்மையை பொருத்து கதை சொல்லி தெரிவிப்பதும் இல்லை சொல்லாமல் கூறுவதும் அமையும். அதே போல இந்த படத்தின் கதை வெறும் இரண்டு வரி என்பதால் நிச்சயம் சொல்லிடவேண்டும் அப்படி சொல்லாம எனக்கு ஹாலிவுட் படம்  விவரிக்க வாராது அது வேற விஷயம். அதனால நாம நேரடிய கதைக்கு போவோம்

விண்வெளியில்  இன்ஜினியர் ஸான்திரா , விண்வெளி வீரர் ஜார்ஜ் க்ளூனி இருவரும் விபத்துக்குள்ளாகின்றனர், தப்பித்து இவர்கள் தரை இறங்கினார்களா என்பது தான் கதை.

90நிமிடங்கள் இதை எவ்வளவு சுவாரசியமாக ,  பார்வையாளர்களை  எந்தளவுக்கு பரவசம் தர முடியுமோ அதை அப்படியே நமக்கு தந்து உள்ளனர். படம் முழுக்க இந்த இருவர் மட்டுமே வேறு எவரையும் ஒப்புக்கு கூட காட்டவில்லை , முழுக்க முழுக்க விண்வெளியில், இன்னொரு உலகம் என்பதை கண்ட பரவசம் படத்தை காணும் பொழுது உணர முடிந்தது.


படத்தின் என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது பல காட்சிகள்.

இன்ஜினியர் ஸான்திரா விண்கலம் வெளியில் பிடிப்பு இன்றி தடுமாறிக்கொண்டு இருக்கும் பொழுது இவரை ஜார்ஜ் க்ளூனி காப்பாற்றும் உதவும் காட்சி என்னை சீட் நுனிக்கு கொண்டு வந்து விட்டது.

அதே போல விண்வெளியில்  நிறைய கோள்கள் நட்சத்திரம் சில கற்கள் ஏதோ பாய்ந்து வருவது போல நம்மை உணரவைத்து பின் மெல்ல மெல்ல வர வர அது அந்த இரு வீரர்கள் தான் என்று தெரியும் பொழுது , என்னமா எடுத்துருக்காய்ங்க என்று ஆச்சிரியபடாமல் இருக்க முடியவில்லை.

இன்ஜினியர் ஸான்திரா தன்னந்தனியாக தடுமாறிக்கொண்டு எப்படியாவது விண்கலம் உள்ளே சென்றுவிட வேண்டும் என்று முயற்சிக்கும் காட்சிபொழுது  எதிர்ப்பார்ப்பு நமக்கும் உள்ளே செல்ல வேண்டும் என்று நம்மை அறியாமல் தொற்றிக்கொள்ளும்.

விண்கலத்தின் உள்ளே நுழைந்தவுடன் அவளின் படபடப்பு , உடற்கவசங்களை அவிழ்க்கும் பொழுது அப்படியே விசையில் தவழ்ந்து கொண்டே அனைத்தையும் விடுவிக்கும் முறை , இப்படி தான் விண்வெளியில் இருப்பார்கள் என்றே முடிவு செய்தேன்.

விண்கலத்தின் உள்ளே  ஸான்திரா தன் நிலைமையை நினைத்து கலங்குமிடம் அவளின் கண்ணீர்துளிகள் அங்கே அப்படியே விளாமல் பறக்கும் பொழுது அதை காட்சிபடுத்திய விதம்வியப்பில் மூழ்கிவிட்டேன்.

விண்வெளி , விண்கலம் அங்கே என்ன உணர்வான ஒலி  ஒளி இருக்குமோ இப்படி தான் இருக்கும் என்றே என்னை பரவசபடுத்தியது.அதிலும் ஸ்பேஸ் வெளியில் இருக்கும் பொழுது அந்த கவசங்களை உடன் அணிந்து பேசும் பொழுதும் , அதே அவர்கள் விண்கலம் உள்ளே பேசும்பொழுது வெளியில் கேட்பது எவ்வளவு நுட்பமாக பணியாற்றி உள்ளனர் என்பது பளிச்சிடுகின்றது.

வெறும் இரண்டு கதாபாத்திரங்கள் அதிலும் ஒருவர் மட்டுமே குறைந்தது 50 நிமிடங்கள் வருகிறார் , அதை காணும் நமக்கு எந்தவொரு சலிப்பும் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் பரவசமாக்குகிறது க்ராவிடி . இதன் கிரியேடிவிட்டி அல்போன்சோ இவருக்கு என்னா அறிவு என்னா மூலை.


சகச பயணம் விரும்புவோர் , விண்வெளி பற்றிய தகவல்கள் விரும்புவோர் , விண்வெளியில் பயணிக்க விரும்புவோர் நிச்சயம் இந்த படத்தை தவிர்க்க விட கூடாது. நுட்பமான பல அறிவியல் பூர்வமான விஷயங்களை கையாண்டு மிக சிறப்பாக வெளி கண்டுள்ளது.

90 நிமிடங்கள் படம் முடிந்து என் இருக்கையை விட்டு நான் எழுந்து வெளியில் வந்த பொழுது , விண்கலத்தில் இருந்து பூமிக்கு வந்து நடக்க முடியாமல் தவழும் பொழுது சிரித்து கொண்டே ஓர் உணர்ச்சியை வெளிக்காட்டும் உணர்வு படத்தில் வருவது போல  எனக்கும் தந்தது  அதுவரை நானும் அவர்களோடு பயணித்த உணர்வு. வேறுஒரு உலகத்தில் பயணித்த அனுபவம் இந்த படம் உறுதியாக தரும். தவறவிடாமல் அனைவரும் நல்ல திரை அரங்கில் சென்று காணுங்கள்.

பின்குறிப்பு:

1.ஒலி  ,ஒளி   சிறப்பு மற்றும் இதர பல விஷயங்களுக்காக I-max 3D தான் சிறந்தது என்று அங்கேயே போய்ட்டேன்.மிக அருமையாக உணர முடிந்தது அதுவும் பல காட்சிகள் கையை இருக்க கட்டிகிட்டேன்.

2. இது தான் முதல் முறை ஒரு வேற்று மொழி படத்த பற்றி நான் எழுதுவது. அதனால குறை இருந்தா ப்ரீயா விடுங்க , சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.

         

Thursday 10 October 2013

இவரின் படங்களில் கற்றேன் பல

கல்லூரி வாழ்க்கை ஓவ்வொரு மாணவர்களுக்கும் அது போல் ஒரு ஆனந்தமான சூழல் வாழ்வில் கிடைப்பது மிகவும் அரிது, தன்னுடைய முழுமையான தேடலை தொடங்கும் காலம் அதில் பலர் வெற்றி தோல்வி என்று அடைந்தாலும் எல்லோரும் நிச்சயம் பெறுவது வாழ்க்கைக்கான மிக பெரிய பாடம் அனுபவம் , அந்த அனுபவ  சூழலே பின் வரும்  மிக பெரிய இடையூறுகளை எளிதாக கையாள கற்று தந்து இருக்கும். அந்த அனுபவம் உன்னாலும் உனக்கு கிடைக்கும் , உன் நண்பனாலும் உனக்கு கிடைக்கும் ,  உன் வாசிப்பாலும் உனக்கு  கிடைக்கும் , நண்பர்களோடு நீ செல்லும் திரைபடங்களாலும் கிடைக்கும். இவைகளின் அனுபவங்கள் எப்பொழுதும் கிடைக்குமே என்று நீங்கள் நினைத்தால் , எங்கே கிடைத்தாலும் இந்த சுழல் போல கிடைக்காது. இன்னும் நன்றாக சொல்ல போனால் என்னுடைய தற்பொழுதைய நிலை கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இன்றும் நான் என்னுடைய பல கடினமான சுழலில் அந்த அனுபவத்தை எடுத்து கொண்டே செல்லுகிறேன்  என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுபோல் அப்பொழுது நண்பர்களோடு அன்று பல திரைப்படங்கள் சென்று இருந்தாலும் எங்கள் எல்லோருக்கும் அன்றும்  இன்றும் என்றும் நிறைய கற்று கொடுத்த ஒரே திரைப்படம் இது மட்டும் தான் , எங்களின் சில தவறுகளை , நாங்கள் மறந்ததை எங்களுக்கு நினைவூட்டியது அதிகம் இந்த திரைப்படமே. இப்படம் மூலமாகவே எனக்கு கிடைத்த இன்னுமொரு மிக பெரிய பொக்கிஷம் அந்த இயக்குனர்.

இயக்குனர் ராம் "கற்றது தமிழ்" இத்திரைப்படம் தான் என்றும் கற்க நிறைய உதவி புரிகின்றது.


கற்றது தமிழ் படம் பார்த்து முடித்தவுடன் குறைந்தது மூன்று நாட்கள் நிம்மதியாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எல்லாவகையிலும் இப்படமே நினைவில் வந்து மிகவும் ஒரு ரண வேதனை ஆக்கியது. நண்பர்களுடன் இப்படத்தை பற்றி கலந்து ஆலோசிக்கும் போதும் பலவகையான விஷயங்களை பற்றிய பேச்சுகள் நீளும். எங்களுக்கு தெரியாதவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை இது தந்தது.

பொறியியல் படித்து கொண்டு இருந்த எங்களுக்கு எங்கள் நண்பர்கள் என் கல்லூரியில் ஏன் இன்றும் பலதரப்பட்ட மக்களிடம் சிவில் இன்ஜினியரிங் என்று கூறினால் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக தான் காணுவார்கள். அதை ஒரு பிரிவு என்று ஏற்று கொள்ள கூட தயங்குவது நான் அதிகம் கண்டது (ஆனா உலக அளவில் அதற்கான மதிப்பு இன்று கண் கூட உணர்கிறேன்) . அதே போன்று தமிழ் மொழி படித்தவர்களின் வலிகளை காணும் போது எங்களையும் அறியாமல் பயந்தோம்.


உலகமயமாக்குதல் என்றால் என்ன என்பதின் உண்மை அர்த்தத்தை இந்த படத்தின் மூலமே கற்றோம்.

 ஒவ்வொரு மக்களும் தன் நாட்டின் ஏற்ற இறக்க பொருளாதார நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது.

நாட்டின் உணமையான வளர்ச்சி என்பது எதில் உள்ளது என்பதை எடுத்து கூறியது.

எந்த படிப்பு  படித்தாலும் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்து உரைத்தது.

தனிப்பட்ட சந்தோசம் மற்றவரின் இடையூறுகளை எப்படி பெற்று தரும் என்று விளக்கியது.

இவைகள் எல்லோரின் வாழ்விற்கும் மிக அத்தியாவசிய தேவைகள். திரைப்படமாக குறைகளை தாண்டியும் இது பாதுகாக்க வேண்டிய முக்கியமான திரைப்படம்.

தற்பொழுது வெளிவந்த தங்கமீன்கள் அன்பை, உணர்ச்சிகளை, உணர்வுகளை, குடும்ப உறவுகளை, கல்வி முறையை, குழந்தை வளர்ப்பு முறையை, இன்றைய ஆசிரியர்களின் நிலையை, சமூகத்தின் விளம்பர யுக்தியை, என்று சகலமும் நாம்  காட்சியாக காணும் பொழுது இது திரைப்படம் என்பதை மறந்து நம்மில் நடந்ததை நினைவு படுத்துவதே இதன் சிறப்பு.


அடுத்து அவரின் வெளியீடாக வரபோகும் தரமணி இப்பொழுதே எனக்குள் மிகபெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரையில் எதை குறை யாரால் அதிகம்  அவதி என்று கூறினாரோ. இப்பொழுது அவர்களின் காதலை கதையை கூறபோகிறார். அவர்களின் பக்கம் இருக்க போகும் நியாயத்தை எடுத்து கூறுவார் என்று நினைக்கின்றேன்.என்னை பொருத்தவரை அவரின் படத்தில் எதை தெரிந்து கொள்ள போகின்றேன் என்ற ஆர்வம் தான் இருக்கும். அதே போல தரமணி படத்திலும் எதை கற்க போகின்றேன் என்று எதிர்பார்த்துகொண்டே இருப்பேன்.

இயக்குனரின் ராமின் திரைப்படத்தை ஒரு முறை நீங்கள் கண்டால் இருபது சிறுகதைகள் வாசித்த உணர்வும் அல்லது ஒரு நாவல் வாசித்தது போலவும் நிச்சயம் உணர முடியும்.அவ்வளவு நேர்த்தியாக பல காட்சிகள் ஏன் முடிகிறது என்ற ஆதங்கம் தரும். இவர் படங்களில் வரும் காட்சி படுத்தும் இடங்கள் கூட பல கதைகள் பேசும். ஒரு பழமொழி சொல்லுவாங்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று அதுபோல ராம் அவர்களின் படத்தின் தரம் இவர் தேர்வு செய்யும் இடங்களிலேயே தெரிந்து விடும் போல. என்னுடைய ஆசையும் , சிறந்த உணர்வுபூர்வமான , அத்தியாவசிய அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய  நாவல் ஒன்றை ராம் அவர்கள் திரைப்படமாக நமக்கு தர வேண்டும். அதையும் கற்க வேண்டும்.


திரைப்படம் என்பது திரைபாடமாக இருக்கும்பச்சத்தில் அது எத்தனை காலம் ஆனாலும்  அந்த படைப்பிற்கு அழிவு இல்லை. பிரபாகரன்,ஆனந்தி , தமிழ் வாத்தியார், செல்லம்மாள்,கல்யாணி,எவிட்டா மிஸ் இவர்களுக்கும் இவர்களின் கதைகளுக்கும் (கற்றது தமிழ் & தங்க மீன்கள்)  என்றும் அழிவே இல்லை.இன்னும் பல லட்சம் நபர்கள் இவர்களை கற்க வேண்டும்.

என்னை கவர்ந்த இயக்குனர் ராமிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

Friday 4 October 2013

முதல் முறை என்னை ரசிக்கவும் வியக்கவும் வைத்த இயக்குனர்

நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் அவரவர் காலங்களில் பெரும் புகழும் பெயர்களையும் எடுத்து பலருக்கு முன் உதாரணமாக இருந்து உள்ளனர் அவரவர் காலங்களில் உள்ள இளைஞர்களுக்கு  திரைப்பட காதலர்களுக்கு ஆதர்ச இயக்குனர்களாக இருந்து பலரின் நெஞ்சங்களில் இடம் பெற்று உள்ளனர். அப்படி என் பள்ளியில் நான் 11வது  (2003ல்) படிக்கும் பொழுது என்னை முதல் முறை இயக்குனராக அவரின் முதல் படைப்பே  அத்தனை ஒரு ஆனந்தம் கொண்டாட்டம் பரவசம் ஏற்படுத்தியது. நானும் முதல் முறை ஒரு இயக்குனரை என் விருப்பமாக தேர்ந்து எடுத்து அவரின் அடுத்த அடுத்த படங்களை எதிர்நோக்கினேன் என் கால  நண்பர்களை போல , என்னை போல பலருக்கும் அவர் தான் இக்காலத்தில் ஆதர்ச இயக்குனராக இருப்பார். அவரின் முதல் படம் தொடங்கி இன்று வரை அவற்றின் அனைத்து படங்களையும் ஒரு நாயகனிற்கு தரும் வரவேற்பை போல முதல் நாளே கண்டு அனுபவித்து கொண்டாடி  கொண்டு இருக்கின்றேன். அவர் பெயர் இயக்குனர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை வந்தபொழுது அதை பற்றிய பேச்சு "ஏ" ரகமாகவே வந்து கொண்டு இருந்தது . அப்பொழுது 10ஆம் வகுப்பு  தொடங்க இருந்த  நேரம், எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆவல் என்னதான் இருக்கும் என்று, அதை போலவே அந்த படம் கண்ட பொழுது நன்றாகவே உள்வாங்க முடிந்தது !!! அப்பொழுதே செல்வராகவன் அவர் தான் இயக்கினார் ஆனா அவுங்க அப்பா பேர போட்டுடாங்க என்று எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். தமிழகத்தில் எல்லோரின் பார்வையும் இருவேறு கருத்துகளோடு பெரும் வெற்றி பெற்ற படம் துள்ளுவதோ இளமை அனைவரும் அறிந்ததே.


இதன் பிறகு ஒரு வருடம் கழித்து வெளிவந்த காதல் கொண்டேன் 2003ல் படம் வருவதற்கு முன்னே தினசரிகளில் விளம்பரம் கண்டு இந்த படத்திற்கு முதல் நாள் நிச்சயம் போய்விட வேண்டும் என்று தீர்மானித்து அதைப்போலவே சென்றோம் நண்பர்கள் எல்லோரும். படம் தொடங்கியது முதல் அப்படி ஒரு பரவசம் காட்சிக்கு காட்சி புதுமையாக தெரிந்தது நடிப்பு வசனம் பாத்திர அமைப்பு என்று எல்லோரையும் வியக்கவைத்தது. காதல் கொண்டேன் படத்திற்கு இன்னும் ஞாபகம் நன்றாக உள்ளது படம் முடிந்தவுடம் செல்வராகவன் பெயருக்கு திரை அரங்கில் அப்படி ஒரு அப்ளாஸ் கிடைத்தது அன்று திரை அரங்கில் அவருக்கு  கிடைத்த வரவேற்பும் என்னுள் அப்படம் ஏற்படுத்திய தாக்கமும் அவரை என்னோடு இணைத்தது. அன்று துவங்கியது என்று  அவரின் அடுத்த படைப்பின் தாகம் இன்று வரை  அவ்வாறே  இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


அடுத்து அவரின் வெளியீடு 7ஜி ரெயின்போ காலனி ,நாங்கள்  பாடல்கள் பட வெளியீடுக்கு முன்னே கேட்க துவங்கிய பொழுது அது , தினமும் பள்ளிக்கு எதிரே உள்ள டி கடை நண்பர்களின் வீட்டில் 7ஜி பாட்டை கேட்டு கேட்டு ஆர்வமாக இருந்தோம் , முதல் நாள் பெரும் எதிர்பார்ப்புடன் சென்று படத்தை கொண்டாடினோம் , இடைவேளை  சோனியாவிடம் பீலிங்க்ஸ் ஆக ரவி பேசும் காட்சி  அதிர்ந்தது அத்தனை ஆராவரம் , கண் பேசும் வார்த்தை பாடல்கள் என்னை அறியாமல் கண் கலங்கியது. கனா காலும் காலங்கள் பாட்டு  முடிந்து அவளின் வீட்டுக்கு பைப் வழியாக சென்று திரும்ப இறங்கும் பொழுது ஒரு வசனம் "இவ்ளோ நடந்தும் உன் பின்னாடி வரேன் நா ஏன் புரிஞ்சிக்கடி " அப்படி ஒரு பூரிப்பு அதை கேட்டவுடன்.வேலை கிடைத்து விட்டது என்று அப்பாவிடம் சொல்லும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் எங்களை நாங்கள் நினைத்து கலங்கினோம். இறுதியில் நினைத்து நினைத்து பாடலில் மாயான  அமைதி கலங்கிய கண்களோடு காண்போருக்கு இறுதியில் படம் முடிந்து செல்வராகவன் பெயர் வரும் பொழுது முன்னை விட இப்பொழுது இடி முழக்கம் போல் சப்தம் அவருக்கே கேட்டு இருக்கும். இப்பொழுது இன்னும் என்னுள் இறங்கிவிட்டார் செல்வராகவன் மீண்டும் துவங்கியது அடுத்த படைப்பின்  தாகம்.


ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் காக்க வைத்துவிட்டார் இரண்டு வருடம் 2006ல் பட வெளியீடுக்கு முன்னே கல்லுரி விடுதியில் இப்படத்தை பற்றி காரசாரமான விவாதங்கள் ஓடும் , ஒவ்வொருவர் விதவிதமாக கூற செல்வாவின் கூட இருந்தது போல என் கருத்துக்களை கூறிக்கொண்டு இருப்பேன்.முதல்  செமஸ்டர் இறுதி தேர்வு (Fundamentals of computer science) அன்று படமும் வெளியீடு  காலையில்  எழுந்தவுடன் தேர்வா படமா என்று நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டு இருந்தோம் ஒருத்தனும் துணைக்கு வரவில்லை பரிட்ஷை முடிச்சிட்டு போலாம்னு எல்லோரும் சொல்ல , வேறு வழியிலாமல் தேர்விற்கு சென்று (அந்த பேப்பர்  அரியர் ) வெறிக்க வெறிக்க அமர்ந்து இருந்து 45நிமிடங்கள் ஆனவுடன் வெளிவந்து  வர மதியம் சென்றோம் , எனக்கோ செல்வா படம் 2 வருடங்கள் கழித்து என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு எகிறி கிடந்தது . படம் தொடங்கியது முதல் உள்ளுக்குள் பேரானந்தம் என்னடா இப்படி எடுத்து இருக்கார் என்று சொல்லிட்டே மிரண்டு போனோம்.சாதாரண கதையை தன்னுடைய அசாதாரமான திரைக்கதையாலும் இயக்கத்திலும் நிருபித்து இருப்பார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனரின் அடையாளங்களை பதித்து இருப்பது தெரியும். தன்னால் காதல் கதை களத்தை பின்பலமாக வைத்தே தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு இயக்குனராய் சரியான முறையில் இப்படத்தின் வாயிலாக பதில் தந்திருப்பார். ஒரு கிரியெட்டராக நிச்சயம் இந்த படம் அவருக்கு மிக பெரிய வெற்றி. இப்படத்தை பற்றி விரிவாக வேறுஒரு பதிவில் சொல்லுகிறேன். படம் முடிந்து எல்லோரும் மிரண்டு போனோம் அன்றே இரவு காட்சியும் பார்த்தோம். கல்லூரி விடுதியில் இப்படத்தில் வரும் முதல் காட்சி போல நடித்து பார்ப்போம் நண்பர்கள் மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லுவார்கள். அந்தளவுக்கு  இந்த படம் எங்களை கவர்ந்தது என்னை மிக நுட்பமாக உள்வாங்கி கொண்டது. இப்பொழுது செல்வாவின் அடுத்த படைப்பின் தாகம் வெறி தனமாக மாறிவிட்டது.


ஆனால் மிகுந்த ஏமாற்றம் தெலுகுவில் படம் இயக்கி அதை காண வாய்ப்பிலாமல் , இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் யாரடி நீ மோகினி என்று அவரின் உதவியாளர் இயக்கி வெளிவந்தது. அந்த படம் மிக பிடித்தாலும் இதை ஏன் இங்கே இயக்காமல் விட்டார் என்ற ஆதங்கம் இருந்தது ? பின் அந்த தெலுகு படத்தை எப்படியோ கண்டு பார்த்து மனுஷன் எங்கயும் விட மாட்டான்  போல  என்று சிலாகித்தேன்.


செல்வாவின் இயக்கத்தில் படம் தமிழில் வந்து சுத்தமாக 4 ஆண்டுகள் ஆகி இருந்தது 2010 ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய முன் செய்திகள் எல்லாம் பிரமிக்க வைத்தது , எதிர்பார்ப்பு வார்த்தைகளில் சொல்ல இயலவில்லை ஒட்டு மொத்த திரை உலகமும் இப்படத்தை எதிர்பார்த்தது.பொங்கல் அன்று படம் வெளியீடு இம்முறை கல்லூரி முடிந்து வேலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் நண்பர்கள் எல்லாம் புதிது. ஒருவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.ஆயிரத்தில் ஒருவன் யார் என்ன கூறினாலும் எனக்கு இப்படம் பெரும் நம்பிக்கையை செல்வா மேல் வைத்தது. இவரால் என்னவொரு படமும் செய்ய முடியும் இவரை ஒரு வட்டத்தினுள் வைக்க முடியாது. தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும் இவரை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. கொண்டாடவே செய்கிறேன்.


இதை தொடர்ந்து மயக்கம் என்ன 2011ல்  அப்படியே வேறு தளத்தில் மீண்டும் செல்வா உணரவைத்தார். இந்த படமும் முதல் நாள் இம்முறை வேலை  சென்னையில் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் 15 நண்பர்கள் புக் செய்து சென்றோம். படம் முடிந்து அனைவரும் சரி இல்லை என்று கூற ஒருவன் மட்டும் என்னா படம் போங்கடா ரசனை கெட்டவிங்கலா என்று வாதிட்டேன். ஆனால் அந்த 15 நபர்களில் இன்று 10 இல்லை 11 நபர்கள் மயக்கம் என்ன படம் பார்க்க பார்க்க செம்மையா இருக்குடா என்று கூறுகிறார்கள். அது தான் செல்வராகவன் புதுபேட்டை , ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன இந்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பிடித்து போனவர்கள் ஏராளம்.இம்மூன்றும் வேறு வேறு தளங்கள் என்பதில் தான் செல்வா என்ற இயக்குனர் பளிச்சிடுகிறார்.


இம்முறை அவரின் அடுத்த படம் இதோ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இரண்டாம் உலகம் என்று அவர் நடத்த போகும் மாயயை காண  பெரும் ஆவலோடு உள்ளேன். சிலிர்க்கின்றது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால். செல்வாவின் படத்திற்கு என்று என்னை போல எத்தனையோ நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவரின் படைப்பின் மேல் உள்ள காதல் எத்தனை பேரை திரையுலகத்திற்கு அழைத்து கொண்டு வர போகின்றதோ. இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தால் அப்பொழுது வரும் இயக்குனர்கள் கூறுவார்கள் புதுபேட்டை பார்த்து சினிமாக்கு வந்தேன் சார் என்று. அதில் இருக்கும் அவரின் மிக பெரிய வெற்றி.


செல்வராகவன் தமிழ் சினிமாவின் மாற்று திசை.



(இதுபோல நான் சமகாலத்தில்  பார்த்து முதல் படைப்பில் இருந்து கொண்டாடிய இயக்குனர்களை பற்றி வரும் பதிவுகளில் கூறுகிறேன்.)

Thursday 3 October 2013

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா

இதற்க்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா -

எவுளோ பெரிய பேரு எழுதவே அவ்வளோ நேரம் ஆகுது, எல்லாரும் விஜய்சேதுபதி படம் என்று பெரிய வரவேற்ப்பு கொடுக்க , அவரும் இதுவரை இயக்குனரின் நாயகனாகவே வெளிப்பட்டு கொண்டு இருக்க, ஸ்டுடியோ 9 வெளியிடும் படங்கள் வேறு தேர்ந்து எடுத்து வந்து கொண்டு இருப்பதாலும் , ரௌத்திரம் பட இயக்குனர் என்பதில் மட்டும் கொஞ்சம் பயந்துட்டே தான் நேற்று படத்துக்கு போனேன்.


விஜய்சேதுபதி வழக்கம் போல வேறு ஒரு புதியமுகமாக இதில் தெரிகிறார் , அது தான் அவருடைய மிகபெரிய ப்ளஸ். ஒரு காட்சியில் கூட அவரின் முந்தைய படங்கள் நினைவில் வரவில்லை. சும்மார் மூஞ்சி குமாரு என்று புகுந்து லந்து பண்ணி இருக்கார் அவர் வருகின்ற அனைத்து காட்சிகளுக்கும் , பேசுகின்ற அனைத்து வசனங்களுக்கும்  விசில் பறக்கின்றது. நிச்சயம்  இவரின் அடுத்த அடுத்த படங்களும் பெரும் வரவேற்ப்பு இருக்க தான் போகின்றது.

பசுபதி (அண்ணாச்சி ) நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது முதல் பாதியில் வி.சே வுடன் சேர்ந்து கொண்டு கல கலக்குகிறார் ஆனால் இரண்டாம் பாதியில் ஒப்புக்கு கூட ஒரு காட்சியில்  இல்லை.

நந்திதா குமுதவாக கிறங்கடிக்க வைக்கிறார் சுமார் மூஞ்சி குமாரை , அந்த பாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து உள்ளார் ஆனால் ஒரே விதமான பாவனைகள் தான் படம் முழுக்க இவரிடம். குமுதா ஹாப்பி தான்பா


பாலா - சுவாதி இவர்கள் ஜோடியாக தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டு இருக்கும் , அவ்வப்போது இவர்களின் பகுதியில் வரும் பாஸ்கரின்   காட்சிகள் தள்ளி கொண்டு இவர்களை கரை சேர்க்கும், ஆனால் இரண்டாம் பாதி இவர்களுக்காகவே கதை நகரும். சுப்ரமணியபுரம் சுவாதியா இது என்று சில காட்சிகளில் வியக்க வைத்தார் , பாலாவின் குடி அரட்டைகள் போர் ராகம்.

சிலநேரமே வந்தாலும் செம்மையா ஸ்கோர் பண்ணிருக்கார் சூரி , எத்தனை எத்தனை எக்ஸ்ப்ரஷன்ஸ் , கண்டிப்பா இவரோட போர்ஷன் சிரிக்காம இருக்க முடியாது குறிப்பா இஷ்க் இஷ்க் ஷாஆஆஆஆஆ  அந்த காட்சி அப்டி தான் இருக்கும்.

படத்தின் இடைவேளைவரை கொஞ்சம் அலுப்பாகவும் ஒரு சில காட்சிகள் நீளமாவும் போய்ட்டு இருந்துச்சு , விஜய் சேதுபதி வர காட்சிகள் நிம்மதியா கடத்திட்டு போச்சு ஆனா அப்புறம் இடைவேளைக்கு பிறகு படம் பறக்க ஆரம்பிச்சிடுச்சு வரவன் போறவன் எல்லாம் சிரிக்க வைக்குறாங்க. எத்தனையோ காமெடி படம்னு நம்ம கழுத்த அறுக்குற படைகளுக்கு மத்தியில் மூடர் கூடம் , இந்த படம் போல யாரும் எடுக்க மாட்டேன்குறாங்க.

படத்தில் வரும் சென்னை பாஷை வசனங்கள் மிக அருமை, குமாரு நண்பர் என்று ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வருபவர் இரண்டாம் பாதியில் ஒரு 30 தடவையாச்சும் கூறி இருப்பார் " ஹே குமாருக்கு லவ் ப்ராப்ளம் அப்செட்டா இருக்காரு ஆப் அடிச்சா கூல் ஆய்டுவாறு " இதை ஒவ்வரு முறையும் சிரிக்கலாம் சிலருக்கு அலுப்பாகும்.

இந்த படத்தில் சிரிப்பதற்கு எல்லோரின் உடல் மொழி தான் முக்கிய காரணம் , அவரவரின் செய்கைகளில் வட்டார பேச்சுகளில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் கடைசி 15நிமிடங்கள் விஜய்சேதுபதியின் அட்டகாசம் அதகளம் செய்து உள்ளார் . படம் முடிந்து வெளியே வந்தாலும் அவை நினைவில் வந்து வந்து சிரிக்கவைக்கும்.

எல்லாத்துக்கும் மேல இப்படத்தின் மூலம் இயக்குனர் கோகுல்  நல்ல கருத்தை எல்லோரும் ஏற்று கொள்ளும் படி தந்து உள்ளார்.

SAY NO TO DRINK

 நம்பி போகலாம் பேரு  தாங்க சுமார் மூஞ்சி குமாரு ஆனா பார்க்க நல்லாவே இருக்கார்பா 

Sunday 29 September 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்


தன்னுடைய முதல்படம் தொடங்கி இன்றுவரையில் அவரின் அனைத்து 6 திரைப்படங்களிலும் (முகமூடியிலும்) தன்னுடைய தனித்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளார் , அவரின் கிளிஷேக்கள் கிண்டல் அடிக்கபட்டாலும் அதை தவிர்க்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். இயக்குனர் என்று ஒரு குழுவின் தலைவனாக திரைப்படத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி , பாமரனுக்கும் இது மிஷ்கின் படம்பா என்று சொல்லாமல் புரியவைத்தது உள்ளார்.  இவரின் இருளுலக  படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அப்படி ஒரு எதிர்பார்ப்பில் தான் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்திற்கு காத்திருந்து சென்றேன்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் , கதாநாயகி இல்லை என்றால் பிரபல நாயகி இல்லாமல் (சூது கவ்வும் படத்துக்கு கூட சஞ்சீதா ரெட்டி தேவைப்பட்டு இருந்துச்சு பார்த்துக்கோங்க ) நாயகன் என்று ஒருவனை முன்னிறுத்தி பயணிக்காமல்.நீண்ட நாட்களுக்கு பிறகு  , என்ன கதையோ எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை எந்தவொரு சமரசமும் விட்டு கொடுத்தாலும் (முன்பு மிஷ்கினின் நந்தலாலா தவிர அனைத்திலும் சமரசம் செய்து இருப்பார் ) இல்லாமல் நேர்மையாக வழக்கமான மிஷ்கினின் கிளிஷேவுடன் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் அமர்ந்து இருந்த எனக்கு மிஷ்கின் விருந்து படைத்தார் என்றே சொல்ல வேண்டும், காட்சிக்கு காட்சி மிரள வைத்தது படத்தின் மேகிங், முதலில் சாலையில் தொடங்கும் காட்சி குண்டு துளைக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டு இருப்பவனை(ஓநாய் ) , எல்லோரும் எவ்வாறு அணுகிவிட்டு செல்கின்றனர் என்ற காட்சி அமைப்பு சமகால நிகழ்வுகளை வேதனை பகடி செய்கின்றது. அதிலும் ஒரு இளகிய மனம் கொண்ட மருத்துவ மாணவன் (ஆட்டுக்குட்டி ) அவனை காப்பாற்றுகிறது. பின் தொடர்ந்து அதனால் வரும் இன்னல்? ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று இயக்குனர் மிஷ்கின் நடத்திய வேட்டை தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

தமிழ் திரைப்படங்களில் இந்த படத்தின் திரைக்கதைக்கு தனி இடம் நிச்சயம் உண்டு, சர்வசாதரணமாக 2 மணிநேரம் பார்வையாளர்களை கட்டி போட்டுவிடுகிறார், பின் மீதி 20 நிமிடங்கள் அதுவரை இருந்த ஆர்வத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று அட்டகாசமாக வெற்றி கண்டுவிட்டார் மிஷ்கின்.

படத்தின் மொத்தமே எல்லோரும் பேசும் வசனங்களை பார்த்தல் 20 முதல் அரைமணி நேரம் தான் இருக்கும் , மீதி உள்ளவை அனைத்தும் இளையராஜாவின் ராஜாங்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு (நந்தலாலா) அவரிடம் 20 வருடதுக்கு முந்தைய இசையை உணர முடிந்தது. கல்லறையில் நடைபெறும் காட்சி பின் கார் பார்கிங்ல் வரும் காட்சிகள் இசையில் உருக வைத்துவிட்டார். பின்னே படம் முழுக்கவும் இசை தனியே தெரியாமல் படத்தோடு பயணித்தது மிஷ்கின் & இளையராஜா இருவரின் நேர்மை வெளிப்பட்டது.

ஒளிப்பதிவு மிஷ்கினின் படங்களில் மிக சிறப்பான இடம் பெரும் என்பது எல்லோரும் அறிந்ததே அதிலும் இதில் பாலாஜி வி ரங்கா எனும் புதியவரின் ஒளியில் இருளை அழகாக்கி திரையில் விரித்து உள்ளார், குறிப்பாக கார் பார்கிங் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது , ட்ரைன் காட்சிகள் யதார்த்தமாக நம்மை நம்ப  வைத்தது இவரின் சாதுர்யம். அதே போல பல காட்சிகள் ஒளிபதிவில் புதுமை புகுத்தி உள்ளனர் அது வித்தியாச கோணங்கள் , லைடிங்கில் , என்று. எப்பொழுதும் மிஷ்கினின் படங்கள் ஒளிப்பதிவில் அவரின் அதுவரை படங்களை முந்தும் அதுபோலவே இப்பொழுது இது முதலிடத்தில் உள்ளது.

ஓநாயாக மிஷ்கினும் ஆட்டுக்குட்டியாக  ஸ்ரீயும் புலிகளாக காவல்துறையினர்களும் , கரடியாக தம்பா ஓநாயின் தலைவனும் , என்று அனைவரும் இயல்பு மீறாத நடிப்பில் பதிவு செய்கின்றனர் இவர்களை மீறி சில வேறு மென்மையான  ஆட்டுக்குட்டிகள் நெஞ்சில் பதிந்து போனது வழக்கமான மிஷ்கினின் வகையறா. இதில் ஒரே விதி  விளக்கு சாஜி சுத்தமாக பொருந்தவில்லை மிஷ்கினின் இது போன்ற பாத்திரங்கள் அற்புதமாக பொருந்தி போகும் அஞ்சாதே நரேன் , யுத்தம் செய் ஜே.பி ஆனால் இதில் தவறி போனது. அவரின் உடல்மொழி கூட அன்னியமாக பட்டது.


மிஷிகின் நடிப்பில் நந்தலாலாவை மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும் அதிலும் இதில் ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள் தான் பெரும்பாலும் ஆனால் கல்லறையில் வரும் ஒரே ஷாட் காட்சி இப்படத்தின் உச்சம் குறைந்தது 4 முதல் 5 நிமிடங்கள் உறையவைத்து விடும், அதுவரை படம் பிடிக்காதவருக்கு  (வாய்ப்பில்லை இருந்தும் சிலருக்கு ) கூட இந்த காட்சிக்கு பிறகு பிடித்துவிடும் என்பதை விட படத்தினுள்  உள்ளே இழுத்துவிடும். அவ்வளவு அற்புதமான காட்சி.

மருத்துவ மாணவர்கள் போதை மருந்து சர்வ சாதரணமாக உபயோகிப்பதை , அலட்சியமாக பதிவு செய்து உள்ளார். அதில் எந்த தர்க்க நியாயமும் கூறவில்லை ஏன் அந்த மருந்து தான் அடிபட்டவனை காக்கின்றது ஒரு வகையில்.

வில்லனை (கரடி) எழுந்து நடக்க கூட இயலாதபடி ஆரம்பம் முதல்  இறுதிவரை நோயாளியாக(ஓநாய் கடித்து குதறியதால் )  காட்டியது புதுமை.

சிறுமி தன் உடன் இருந்த சித்தி இறந்த பின்னும் கதை சொல்ல சொல்லி கேட்பது நமக்கும் அனுதாபம் ஏற்படும் .

பார்வை அற்றவர் துப்பாக்கியை மேல் நோக்கி சிரித்துக்கொண்டே சுடுவதும் தொடர்ந்து தானும் இறப்பதும், பல அர்த்தங்களை கூறிவிடுகிறது.

படத்தில் மரணிக்க போவோர்கள்  இறக்கும் தருவாயில் அதுவரை தன் வாழ்க்கையில் எவரை நினைக்கின்றனரோ அவர்களின் பெயரை சொல்லிவிட்டு இறப்பது போல காட்சிபடுத்தியதும் உணர்ச்சியின் அழகு.

படத்தின் குறை என்று எனக்கு படுவது பெரிதாக இல்லை என்ன அறுவை சிகிச்சை செய்து சில நிமிடங்களில் நேரங்களில்  ஒருவர் இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள முடியுமா ? இப்படி எல்லாம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முடியுமா என்று படத்தின் முதல் 20 நிமிடங்கள் அப்பொழுதே யோசிக்க வைத்தது. இவை தவிர அந்த புலி ஷாஜி நடிப்பு அவரின் தேர்வு.

திரைஅரங்கில் பார்க்கவேண்டும் என்றும் மக்களை இழுக்க வேண்டும் என்று எங்கள் படத்தில் இந்த சவுண்ட் சிஸ்டம் முதல் பயன் படுத்தி உள்ளோம் , சில காட்சிகள் இப்படி எடுத்து உள்ளோம் , vfx படத்தில் நிறைய உள்ளது என்று விளம்பர படுத்துவோருக்கு மத்தியில். அமைதியாக எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் பெரியதாக இல்லாமல் வெளியீடு கண்ட இப்படத்தை திரைஅரங்கில் மட்டுமே முழுமையாக கண்டு ரசிக்க முடியும் , நிச்சயம் வேறு எதிலும் அந்த அனுபவத்தை பெற்றுவிட முடியாது. இந்த படத்தை பொருத்தவரை எப்படியாவது திரை அரங்கிற்கு இழுக்க வேண்டும் , அவர்கள் உள்ளே வந்தால் போதும் மிஷ்கினின் திரை மொழி நிச்சயம் ஏதோ ஒரு இடத்தில் கட்டி போட்டுவிடும்.

இறுதியில் படம் முடிந்து எல்லோரின் பெயர்களை தொகுக்கும் பொழுது அவரவரின் பாத்திரங்களுக்கு ஏற்ப ஓநாய் , ஆட்டுக்குட்டிகள் , புலிகள் , கழுதை புலிகள் என்று மிருகங்களின் பெயர்களை கூறியதும் எல்லோரையும் போட்டுவிட்டு அதுவே இரண்டு நிமிடங்களுக்கும் மேல் பின் கடைசியாக இணைய இயக்குனர் புவனேஷ் என்று பெருமை படுத்தி விட்டு இறுதியாக

எழுத்து -இயக்கம் மிஷ்கின் என்று வந்தபொழுது கைதட்டி விசில் அடித்துவிட்டு வந்தேன்.

 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - நேர்மையான திரைப்படம்
---------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு :(படம் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும்)

*சிங்கப்பூரில்  எப்பொழுதும் எதிர்பார்ப்பு உள்ள சிறு முதலீடு கொண்ட திரைபடங்கள் கூட எளிதாக  வெளியீடு கண்டுவிடும் ,ஆனால் அதை நாம் காண ஞாயிறு தவிர மற்ற நாட்கள் பெரும்பாடு படவேண்டும் . அதுபோலவே ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இரண்டு திரைஅரங்கில் வெளியாகி விட்டது, அதை நான் காண்பதற்கு வழக்கம் போலவே பெரும் பாடுபட வேண்டியானது.முதலில் சென்ற திரை அரங்கில் வெள்ளிகிழமை ஆள் இல்லை என்று கூற சரி அடுத்த காட்சிக்கு முன்பதிவு செய்யலாம் என்றால் அதற்கும் இல்லை ஷோ நேரத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட கடுப்பாகி , அடுத்த திரைஅரங்கு சென்று(இந்த இடம் பெயரே லிட்டில் இந்தியா அதனால தமிழர்கள் நிறைந்து இருப்பர்  ) அங்கும் இதை போலவே கூற வேறு வலி இல்லாமல் என் நண்பனை வர சொல்லிவிட்டு காத்திருந்து படத்தை பற்றி நண்பர்களிடம் செல்லில் பயங்கர பப்ளிசிட்டி போல கொஞ்சம் சத்தமாக பேச , ஒரு சில புண்ணியவான்கள் எப்படியோ டிக்கெட் எடுத்துட்டாங்க , ஒரு படம் பார்க்க எவ்ளோ வேலை பண்ண வேண்டியது இருக்கு அப்படின்னு நினைச்சிடே உள்ளே போனோம் நானும் என் நண்பனும் (அவனும் என் மேல் செம்ம காண்டாகி இருந்தான் ராஜா ராணி டிக்கெட் என்று வர சொல்லிவிட்டு இதை காட்டினேன் அதனால் )

*இறுதியில் எழுத்து -இயக்கம் மிஷ்கின் என்று வந்தபொழுது கைதட்டி விசில் அடிக்கும் பொழுது ஒரு ஜோடி எங்களோடு இருந்து, பையனை வழுக்கட்டாயமாக நிற்க சொல்லி அந்த பெண் பார்த்து சென்றது ஆச்சிரியமாக இருந்தது.

*பிடிக்காமல் படத்திற்கு உடன் வந்த நண்பன் முடிந்து சூப்பர் படம் மச்சி அஞ்சாதே வராம இல்லை அந்த படத்த பார்க்காமா இத பார்த்தா இன்னும் மிரட்சியா இருக்கும் என்று பாராட்டு பத்திரம் வாசித்தான்.

Saturday 14 September 2013

மூடர்கூடம் - புதியமுயற்சி நல்ல முயற்சி


இத்திரைப்படத்தை பற்றி கூறுவதற்கு முன் இன்று  நான் இத்திரைப்படத்தை காண சென்ற திரைஅரங்கில் நடந்த சுவாரசியமான நிகழ்வை கூர் வேண்டும் , வேலை முடிந்து 12 மணி காலை காட்சிக்கு என் பணியிடம் அருகில் உள்ள கோல்டன்  திரைஅரங்குக்கு  சென்றேன் (சிங்கப்பூரில் ரெக்ஸ் சினிமாஸ் & கோல்டன் டிஜிட்டல் இந்த இரண்டு மல்டி திரையரங்குகளில் மட்டுமே எப்பொழுதும் தமிழ் படம் வெளியிடு காணும், சில பல பெரிய படங்கள் நிறைய பெரிய திரையரங்கில் வெளியாகும் ).  மூடர் கூடம் வெளியாகி இருந்தது , தங்கமீன்கள் 15 நாட்களை தாண்டியும் ஓடி கொண்டு இருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக ஆனந்தமாக இருந்தது . டிக்கெட் தருமிடம் சென்று மூடர்கூடம் ஒரு டிக்கெட் இந்த ஷோ என்றேன் , அதற்க்கு அவர் தம்பி ஆளு இல்லப்பா ஷோ கிடையாது என்றார் , அட என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசுறிங்க என்று நக்கல் கலந்து கேட்டு  தாருங்கள் என்றேன் , அட நீங்க மட்டும் தான் ஒரு மூணு பேர் இருந்த கூட ஓட்டுவோம் வேணும்னா தங்கமீன்கள் , வ.வா.ச டிக்கெட் தருகிறேன்   என்றார் பாருங்கள் , என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை , என்னடா இது ஒருத்தன் கூட வரமாட்டான என்று சிறிது நேரம் பார்த்துவிட்டு ஷோ கான்செல் என்று சொல்லிவிட்டார் வேறு பின் சற்று அருகில் உள்ள ரெக்ஸ்சில் பார்த்தேன். இது போல் எனக்கு நடப்பது முதல் முறை.

தமிழ் சினிமாவில் என்னடா ஒரே மாறி படம் வந்துட்டு இருக்குனு நினைத்தால் , உடனே சென்று மூடர் கூடம் காணுங்கள் , சூதுகவ்வும் படம் போல தான் என்றாலும் இதில் இயக்குனர் பரிமாறிய விதம் முற்றிலும் புதுமை. படத்தில் ஒரு காட்சி கூட காமெடி என்று நினைத்து பேசுகிறேன் , கலாய்க்கிறேன் , பார்வையாளர்களை சிரிக்கவைக்கின்றேன் என்று சுத்தமாக இருக்காது. முழுக்க முழுக்க ஒரு டார்க் காமெடி டைப் படம் தமிழில்.

இயக்குநரி பல யுக்திகள் நம் சினிமாவுக்கு புதுசு ஒன்று மட்டும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது , அது படத்தில் உள்ள 5 பாடல்களிலும் 5 நபர்களின் முன் வாழ்கையை கூறிவிடுகிறார் அதாவுது பிளாஷ் பேக் என்று தனியாக காட்சி படுத்தாமல் படைகளில் கூற நாமும் வெளியில் செல்லாமல் பார்த்துவிடுவோம் , அதுவும் ஜேசுதாஸ் அவர்கள் பாடிய கடைசி பாடல் அது யாருடைய முன் வாழ்கை என்ற நான்  கூறிவிட்டால் உங்களுக்கு ஒரு எக்சைட்மெண்ட் போய்விடும் , நீங்களே காணுங்கள் அனுபவியுங்கள்.

அதே போல கதை என்று எல்லாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை , வாழ வழி இல்லாத நாலு பேர் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க சென்று ஒரு நாள் அந்த வீட்டில் நடப்பவையே படம் , இதை எவ்வளவு சுவாரசியமாக தர முடியுமோ அதில் 80 சதவீதம் இயக்குனர் தந்து உள்ளார் , மீது இருபது சதவீதம் குறை தான் கொஞ்சம் இழுக்கின்ற போன்று தோன்றியது முதல் பாதி மற்றும் சில வேண்டாத காட்சிகள் , என்று இருந்தாலும் இப்படம் நிச்சயம்  ஒரு பீல் குட் மூவி என்று நினைக்க தோன்றும்.

இயக்குனர் நவீன் நவீனகவும் , குபேரன் , வெள்ளை , சென்ராயன் என்று அந்த நான்கு பேர் நன்றாக நடித்து இருந்தாலும் , என்னை மிக கவர்ந்தது சென்றாயன் பிச்சி புகுந்து விளையாடி இருக்கார், ஓவியாவிடம் வளியும் போதும் , ஆஊனா எல்லோரையும் தலை கீழாக நிக்க சொல்லுவது (அவர் தரும் தண்டனை :) ) பட்டய கிளப்பிருக்கர் , இயக்குனர் நவீனின் வசன உச்சரிப்பு மிக பிடித்து இருந்தது , பல காட்ச்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தேன். வசனம் இல்லாத காமெடிகலும் அதிகம் இப்படத்தில் உடல்மொழி , அவர்களின் சூழ்நிலைகளை காண்போருக்கு இவ்வளவு நகைச்சுவையாக காட்டி இருப்பது முற்றிலும் புதுசு.

ஒளிப்பதிவு மிக நிறைவாக இருந்தது , இப்படத்திற்கு ஏற்றாது போலவே அதுவும் டார்க் டைப் என்று அனைத்தும் டார்க் தான் ஆனால் காணும் நமக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். எடிட்டிங் கச்சித்தமாக நறுக்கி இருக்கின்றனர். மியூசிக் புதியவர் உறுத்தல் தெரியவில்லை என்றாலும் இன்னும் நன்றாகவே இருந்து இருக்கலாம்.

வசனம் மிக முக்கியம் , இயக்குனர் பல விஷயங்களை வசனங்கள் வாயிலாக  இப்படத்தில் தொட்டு பேசி உள்ளார் , உலகமயமாக்குதல் , குழந்தை வளர்ப்பு முறை , ஏழை பணக்காரன் வித்தியாசம் , காதல் , மொழி பற்று என்று ,அதற்கு அவர் தரும் விளக்கங்கள் வசனங்கள் காட்ச்சிக்கு சில திணிப்பாக இருந்தாலும் , ரசிக்க முடிந்தது.

ஒரே ஒரு சாம்பிள் " ஒரு மரத்துல 100 பழம் இருந்துச்சுனா கீழ இருக்குற நூறு பேருக்கு என்பது இயற்கையோட நீதி , ஆனா அதா திறமை உள்ளவன் என்றும்  பணக்காரன் என்றும்   எல்லாத்தையும் பறிச்சி , அதை எடுத்து விதைச்சு மரமாக்கி காய்க்கிற பழத்த பறிக்க அவனையே பறிக்க சொல்லி அவனுக்கே ஒரு பழம் கூலியா தருறீங்க , அது தான் இப்போ  நடக்குது "

இதுபோல பல வசனங்கள் மிக கூர்மையாக இருந்தது.

மூடர் கூடம் குறைகள் இருந்தாலும் முற்றிலும் நமக்கு புதிய அனுபவமாக இருக்கும் ,நிச்சயம் நிறைவுடன் வருவோம் . திரைஅரங்கில் சென்று காணுங்கள். இயக்குனர் நவீன் உங்களின் அடுத்த படம் என்னை எதிர்பார்க்க வைத்துவிட்டது , உங்களின் இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.

மூடர் கூடம் - மூடை மாற்றும் நன்றாக 

Friday 13 September 2013

அழிவை நோக்கி செல்லும் திரைப்பயணம் - தடுத்திடுவோம்


அழிவை நோக்கி செல்லும் திரைப்பயணம் - தடுத்திடுவோம் 

* கலை என்பது ரசனைகளின் பல  விதங்கள் என்று அறிப்பட்ட நமக்கு இன்றைய நாட்களில் காண்பது  நகைச்சுவை என்ற ஒன்றின் படியிலே நின்று கொண்டும் , அதை தாண்டி செல்ல நினைப்போருக்கும் பெரும் முட்டுகட்டையாய் இருக்கின்றார்கள் , வரவேற்க வேண்டியவர்களே.

*அரசியல் சூழலும் கலை துறையை கீழ் இறக்கம் செய்து கொண்டு இருக்கின்றது , கட்டுப்பாடு என்ற போர்வையில். 

* சென்சார்  என்ற  அமைப்பு பல இயக்குனர்களின் சிந்தனையை சுருக்கும் வேலையை மிக கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றது , அரசியல் தலையீடு உடன்.

*திரைப்படங்களின் தரங்கள் இவைகளால் ஒரே பார்வை கொண்ட கோணத்திலேயே சென்று கொண்டு இருக்கின்றது , அதையும் வெற்றி வேறு பெற செய்து கொண்டே அவர்களையும் சிந்திக்கவிடாமல் தடுத்து கொண்டு இருக்கின்றனர்.

* மாற்று முயற்சியை ஊக்கபடுத்தாமல் அதை விமர்சனம் என்று மிகவும் கீழ் தரமாக ஒதுக்குவது பின் அப்படத்தை பிற வெளி படங்களோடு ஒப்பிட்டால் எந்த வகையில் நியாயம் , அங்கு உள்ள சூழ்நிலையா இங்கு உள்ளது துணிந்து எடுப்பதற்கு. எத்தனை எத்தனை இடர்பாடுகளை தண்டி ஒரு புது முயற்சியை எடுக்க வேண்டியுள்ளது என்பது அது போல முயற்சி செய்யும் இயக்குனருக்கே  தெரியும்.

*2011ல் வெளிவந்த புதிய முயற்சி கொண்ட படங்கள் 
ஆடுகளம் ,பயணம் , அழகர் சாமியின் குதிரை , ஆரண்ய காண்டம் , வாகை சூட வா , மௌனகுரு (2011).

2012ல் வெளிவந்த புதிய முயற்சி கொண்ட படங்கள் 
மெரினா ,டோனி,அரவான்,வழக்கு எண்,தடையற தாக்க ,நான் ஈ,மதுபானகடை,அட்டகத்தி ,சாட்டை,பீஸ்ஸா,ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , நீர் பறவை.

2013ல் இதுவரை வந்த புதிய முயற்சி கொண்ட படங்கள்
பரதேசி(எனக்கு பிடிக்காத படம் ) ,சூது கவ்வும் , நேரம் , 555 , ஆதலால் காதல் செய்வீர் , தங்கமீன்கள்.

*இந்த  மூன்று வருடங்களில் பாருங்கள் 19 திரைப்படங்கள் மட்டுமே புதிய கோணத்தில் வந்துள்ளது ஆனால் வெளிவந்தது 400க்கும் மேற்பட்ட படங்கள் , இந்த 19 படங்களில் வெற்றி சதவீதம் மிகவும் குறைந்தது பின் எப்படி நாம் படைப்பாளிகளை குறை சொல்ல முடியும்.

*2012ல் நகைச்சுவை களம் கொண்ட புதிய முயற்சிகள் வெற்றி கொண்டதால் அதை தொடர்ந்து இன்றுவரை மீள முடியவில்லை. காமெடி என்ற ஒன்றையே தயவு செய்து நம்ப வேண்டாம். சகித்து கொள்ள முடியவில்லை. சூது கவ்வும் , அட்டகத்தி , ந.கொ.ப.கா இவைகளில் காட்சி அமைப்புகள் புதிய முயற்ச்சியில் இருந்தது, அதை விடுத்து அந்த காமெடி என்று அதை மட்டும் கண்டால். தோல்வி தான் மிஞ்சும்.

இவைகளை  ஏன் கூறுகிறேன் அடுத்து அடுத்து வர விருக்கின்ற மாற்று திசை கொண்ட திரைப்படங்களை வரவேற்க வேண்டும் 

மூடர் கூடம் - இன்று வெளியீடு 13செப் (காமெடி படம் ஆனா காட்சி அமைப்புகள் வேறு )



6(மெழுகுவர்த்திகள் )- செப் 20 வெளியீடு 

சுட்டகதை - செப் 20 வெளியீடு



இரண்டாம் உலகம் - தீபாவளி வெளியீடு 

இவைகளை நாம் எல்லோரும் திரைப்பட ஆர்வமிக்கோர் அனைவரும் வரவேற்க வேண்டும் , நல்ல படமாக இருக்கும்பட்ச்சத்தில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

நம் தமிழ் திரை உலகமும் எல்லோரையும் கவனிக்க செய்யும். இவ்வாறு நாம் செய்தால். இல்லையென்றால் அழிவை நோக்கியே செல்லும் பயணமாக இருக்கும் இறுதிவரை.

Saturday 7 September 2013

6 (மெழுகுவர்த்திகள்) - திருப்புமுனை ஆகா வேண்டும்

 
தற்பொழுதைய தமிழ் திரைஉலகில் எந்தவொரு வித்தியாசமான படைப்பையும் எளிதாக எடுக்கவும் முடியவில்லை , அப்படியே வெளியே வந்தாலும் , ஆதரவும் விமர்சனமும் ஒன்றாகவே இருந்தும் அந்த படத்தை முற்றிலும் ஒழிக்கவே படு படுகின்றனர் . இவைகளை தாண்டியும் பெரும்பான்மை மக்கள் வெற்றியும் பெற வைக்கின்றனர் அதற்க்கு சாட்சி ஆதலால் காதல் செய்வீர் & தங்கமீன்கள்.ஒரு படைப்பாளி தன்னுடைய முயற்சியை  சிறிதும் குறைத்துக்கொள்ளாமல் சொல்ல விரும்பியதை சொல்லி அவர்களுக்கு என்று பெரிய ரசிகர்களை உருவாக்கிவிட்டனர் ராம் மற்றும் சுசீந்திரன் .

இவர்களை போலவே இயக்குனர் துரை நீண்டகாலமாக தன்னுடைய முயற்சியை ஆணித்தரமாக பதிக்க விரும்புகிறார் , இவருடைய முதல் படம் முகவரி தொடர்ந்து நேபாளி வரை , இவருடைய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தது (காதல் சடுகுடு தவிர ).

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையில் கவர வைத்தவர். முதல் முயற்சி என்று அவ்வளவு எளிதாக எவரும் தோற்று போகும் வாழ்கையை பதிவு செய்ய விரும்ப மாட்டார்கள் , ஆனால்  அதையே துணிந்து செய்தவர் இயக்குனர்  துரை .

முகவரி , தொட்டிஜெயா & நேபாளி இந்த மூன்று திரைப்படமும் முக்கியமான திரைப்படமே. அது மேக்கிங் , கதை , திரைக்கதை என்று மூன்று படத்திலும் ஒவ்வொன்று சிறப்பு. அதே போல வேறு வேறு தளங்களில் பயணிக்க அவர் விரும்புவதையும் காட்டுகிறது.

6 திரைப்படத்தின் முன்னோட்டம் கீழே உள்ள லிங்கை காணுங்கள்

https://www.youtube.com/watch?v=T29LjEw8g84
https://www.youtube.com/watch?v=QngNcKvrGSQ

இப்பொழுது நான்கு வருடங்களாக கடினமாக உழைத்து , வெளியிட்டுக்கு கொண்டு வந்துவிட்டார் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தை. இந்தபடத்தின் முன்னோட்டம் பார்க்கையில் நம்மகி பலவிதமான செய்திகளை நினைவில் கொண்டு வருகிறது , ஏதோ பழிவாங்கல் கதை என்று மட்டும் யூகிக்க முடிகிறது. ஆனால் துரை மீது உள்ள நம்பிக்கை முகவரி கதையும்  தொட்டிஜெயா திரைக்கதையும் நேபாளி மேகிங்கும். இப்பொழுது சேர்ந்து இந்த படத்தில் இருக்கும். நம்மை சுவாரசியமாக கொண்டு செல்லும் என்றே நம்புகிறேன்.

இயக்குனராக தனக்கு வாழ்வா சாவா என்றே இந்த படம் அவருக்கு இருந்து இருக்கும் , ஆகையினால் இந்த படம் அவரை என்னை போல நம்பி கொண்டு இருப்போருக்கும் மிக ஆர்வத்தை கூட்டியுள்ளது.

ஜெயமோகன் வசனம் மிகபெரிய ஆர்வத்தை இன்னும் அதிக படுத்தி உள்ளது (எனக்கு அவரின் வசனங்கள் நான் கடவுள், அங்காடிதெரு , நீர்பறவை , கடல் படங்களில்  பிடிக்கும் ). அவைகள் கதைக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.


ஷாம் தோல்வியை மட்டுமே இதுவரையில் கண்டு வந்த நாயகன் , அதை இப்படம் மாற்றி அமைக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இப்படத்திருக்கு முகவரியே ஷாம்மின் உழைப்பை காட்டிய அந்த புகைப்படங்கள் தான் மிரள வைத்தது. இப்படியும் ஒரு கலைஞன் தன்னை வருத்திக்கொண்டு இருப்பனா என்று  ஆச்சிரிய படாமல் இருக்க முடியவில்லை. நிச்சயம் அவருக்கு இது திருப்புமுனையாக அமைய வேண்டும்.


இத்திரைப்படத்தின் மேல் மிக பெரிய நம்பிக்கையை இயக்குனர் மற்றும் ஷாம் இவர்களை போலவே நாமும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.மக்களின் வரவேற்ப்பை பெற்று மிக பெரிய வெற்றி பெற வேண்டும் 6 மெழுகுவர்த்திகள்.

Monday 2 September 2013

யதார்த்தம் மீறியவையா இவைகள் ???


இப்பொழுது சமீபமாக பலராலும் யதார்த்த சினிமாக்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகிறது சென்ற வாரம் வெளியான தங்க மீன்கள் மற்றும் அதற்க்கு முன் வெளியான ஆதலால் காதல் செய்வீர் , இந்த திரைப்படங்களை முன்னிலைப்படுத்தியே கூறப்படுகின்றன.

ஆதலால் காதல் செய்வீர் - இன்றைய இளையோரின் காதல் இறுதி வரை நீடிக்கின்றதா இல்லைஎன்றால் அதனால் ஏற்படும் விளைவுகள். இந்த கதை களத்தில் இயக்குனர் கூறிய உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் , அவரவர் கூறும் எதிர்  கருத்துக்கள் ,

"யாருப்பா இப்போலாம் இப்படி பண்றா அவனவன் காண்டம் போட்டுட்டு பக்காவா செய்யுரானுங்க"

"அட காண்டம் போட சொல்லுரார்பா "

"கருவ கலைக்குரதுலாம் ரொம்ப சுலபம் இதை போய் என்னமோ பெரிய விஷயமா சொல்லிருக்கார் "

இப்படி பலதரப்பட்ட எதிர் விமர்சனம் கூறுகிறார்கள் , உண்மையில் இன்று பயிலும் கல்லூரி மாணவர்களிடம் சென்று கேட்டு பாருங்கள் , உண்மை முகத்தில் அறைவது போல இருக்கும்.அசிங்கமான உண்மைகள் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் , இதை நிச்சயம் ஒற்று கொண்டு தான் ஆக வேண்டும். கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் உடன் பயிலும் தோழியை காதல் கொண்டால் அது அடுத்த கட்ட உறவுக்கு செல்லும் போது காண்டம் எல்லாம் எவனும் போடுவது இல்லை,(காண்டம் உபயோகிப்பது எய்ட்ஸ் தவிர்க்க என்றே நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் , கரு உண்டாகாமல் தடுக்க என்பது தெரிந்தும் அதை எவனும் கண்டு கொள்ளவது இல்லை அவனுக்கு பார்ட்னர் மீது நம்பிக்கை இருக்கும் பட்ச்சத்தில் போடுவதில்லை , வேசிகளிடம் மட்டுமே உபயோகிப்பார்கள் ) அதை முடித்து விட்டு பெருமையாக கதியாடிப்பதே வாடிக்கை பின் கரு கலைப்பது வேடிக்கை  ,இன்னும் ஒரு சிலர் இதில் பெண் அடிக்ட் ஆனவர்கள் அவர்களின் பிரியட் டேட்ஸ் தெரிந்து இந்த நாட்களில் கொண்டால் கரு உண்டாகாது என்பது வரை யோசித்து அதற்கு தகுந்தது போல ஏற்பாடு செய்பவனும் உண்டு , இதை சொல்லுவதற்கு கூட எனக்கு அசிங்கமாக உள்ளது. ஆனால் இதை இப்படி எதிர்கருத்து கூறுவோரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை, இத்தனைக்கும் இயக்குனர் சுசீந்தரன் கூட பல தரப்பட்ட மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் என்று இந்த படத்திற்காக கலந்துரையடிவிட்டே எடுத்து இருக்கிறார்.
அவ்வாறு செய்பவர்கள் இந்த படத்தை பார்த்தாவது காண்டம் போட்டு துலைந்தால் அது கூட வெற்றி தான். கருவை கலைத்து படத்தை முடித்திருந்தால் அப்பொழுது அந்த கருத்து இன்னும் கேவலமாக பேச பட்டு இருக்கும். அந்த இவர்களையும் சேர்த்து வைத்து இருந்தால் இந்த திரைப்படத்தை பற்றி இங்கு நாம் பேசவே வேண்டியது இல்லை அதுவும் ஒரு படம் என்று கடந்து போகிருக்கும், ஆக நடந்த நடக்கின்ற ஒன்றையே இயக்குனர் இதில் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்று கொள்ளுவதும் அல்லாததும் அவரவர் விருப்பம்.ஆனால் இப்படி எல்லாம் நடப்பது இல்லை இது யதார்த்தம் மீறி வழி வகுப்பது என்று கூறுவோருக்கே இவை.



தங்கமீன்கள் -

கிராமத்தில் வாழும் தந்தை-மகள் அன்பு , மகளுக்கு இக்கால கல்வியால் ஏற்படும் சிரமங்கள் , மகளின் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் பண வசதியற்ற  தந்தை.இப்படி பின்னப்பட்டுள்ள கதையில் இதை எதிர்த்து கருத்து கூறுவோர்கள் ,அவரவர்க்கு இது நடைமுறைக்கு மீறியது , இப்பொழுது இப்படிலாம் பணம் பெறுவது பெரிய விஷயமில்லை , தவறு செய்யும் குழந்தையை கண்டித்தால் தவறா. என்று பலவாறு கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

6வயது மகளிடம் செல்லம் கொஞ்சும் தந்தை இயற்கையே , அவள் கேட்ப்பவைகளை வங்கி தர வேண்டும் என்று நினைப்பது இயற்கையே , எல்லோரையும் புறம் தள்ளி மகள் மீது மட்டும் பாசம் கொள்ளுவது இயற்கையே.மகளை விட்டு பிரியாமல் அவள் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயற்கையே. கிராமத்தில் இருப்பவனுக்கு 6மாதம் சம்பளம் பாக்கி உள்ளவனுக்கு  2000 ஸ்கூல் கட்டணம் கட்டுவது கடினம், அவனுக்கு அந்த பணமும் பெரிது தான்.அதை அடைய அவன் வழி தெரியாமல்(+2 படிக்கையில் திருமணம்) தான் நண்பனின் உதவியை எதிர்பார்க்கிறான். அவனிடம் எப்படி நம் நகரத்தின் தொழில் யுக்திகளை எதிர்பார்க்க முடியும். அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணுனான் புள்ள பெத்துகிட்டான் அப்படின்னு எடக்கு மடக்கா கேட்காதீங்க , திரையில் காட்டியதை அதை இயல்பு வாழ்க்கையோடு சேர்த்தே கூறுகிறேன். இன்றைய கல்வி முறை மாணவர்களின் சிந்தனையை சிதைக்கின்றது என்பதை மிக அருமையாக காட்டியுள்ளார். எத்தனை குழந்தைகள் தமக்கு பிடித்தவைகளை செய்ய முடியாமல் , யோசிக்க முடியாமல் தவிக்கிறார்கள் கொஞ்சம் நினைத்து பாருங்கள். இந்த திரைப்படத்தில் இயல்பு மீறினது இறுதியில் அந்த இசை கருவியை தேடி மலைகள் தாண்டி காடு தாண்டி போகுவது மட்டுமே. அது தவிர அனைத்தும் அழகான கவிதைகள் போலவே இருக்கும்.

.இதுவும்  தங்கமீன்கள் கருத்து பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் உரிமை ஆனால் இது யதார்த்தம் மீறியவை இயல்பியல் சுத்தமாக இல்லை அபத்தம் என்று கூறுவோருக்கு மட்டுமே.

யதார்த்தம் என்ற சினிமாவகைகள் ஒரு வட்டத்தினுள் சுருங்குவது இல்லை ஒரு வட்டத்தினுள்(உண்மைகளில்) இருப்பதை தான் காட்டுகிறது. நெஞ்சில் பெரும் தாக்கம் தரும் உண்மைகளை ஏற்று கொள்ள முடியவில்லை அதை விடுத்து யதார்த்த சினிமாக்கல் அனைத்தும்  அபத்தம் என்று கூற வேண்டாம் நண்பா , மீண்டும் நாம் பின்னோக்கியே சென்று விடுவோம்.


 இன்னும் நிறைய கூற வேண்டும் என்றே நினைக்கின்றேன் ஆனால் பதிவின் நீளம் கண்டும் இதை படிப்பவரின் நிலைக்கு வருந்தியும் முடித்துக் கொள்ளுகிறேன்.

பின் குறிப்பு :
1.உங்களுடைய கருத்துகளில் வேறுபட்டால் மன்னித்துவிடுங்கள் , உங்களின் மனம் வருத்தம் கொண்டதற்கு.