Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Thursday, 27 November 2014

இங்க காதலும் இருக்கு



" மச்சான் சக்தி, உனக்கு தான் ஒன்னும் பேச வர மாட்டேங்குதே. அப்புறம் ஏன்டா மூச்ச போடுற "

"அப்படி இல்லைட கார்த்தி , எவ்வுளோ நாளு தான் இப்படியே பயந்துட்டு ஆசைய மட்டும் வச்சிட்டு இருக்கிறது"

"அப்போ நான் சொல்லுறது போல பண்ணு, ஆனா மயிரு எப்போவும் நான் ஒன்னு சொன்னா அதை அப்படியே முழுசா சொதப்பிட்டு வர "

"என்னடா செய்யுறது பயமா இருக்குடா , அப்படியே ஹார்ட் பீட் அடிக்கிறது எனக்கு கேட்கும் மச்சி!!! அவ பக்கத்துல இருக்குறப்போ "

" அது தான் மச்சி லவ்வு "

"லவ்வுலாம் இல்லை ஜஸ்ட் அவ என்ட்ட ஒரு நல்ல ப்ரெண்டா பழகினா போதும் மச்சி "

"இப்படி தான் ஆரம்பிக்கும் அப்புறம் நீயே சொல்லுவ பாரு "

"இல்லடா சில நேரம் அவ பேசுறது ரொம்ப க்ளோஸா வரது போல இருக்கும் , எப்படி சொல்லுறது ? ஹ்ம்ம் ... எப்படியும் மூணு நாலு மாசம் இருக்கும் தான அவள் கூட நான் வேலை பார்த்து கொண்டு இருப்பது? ஆரம்பத்துல ரொம்ப கேஷ்வுளா தான் பேசுனா மச்சி ஆனா, இப்போ அப்படி இல்லடா. "

"அடங்கப்பா உன் கதைய தான் தினமும் புலம்புறியே விடுடா , நாளைக்கு உன் ஆளு பிறந்தநாள், இப்போ நான் சொல்லுறது போல மெசேஜ் பண்ணு , நாளைக்கு உன்ன மீட் பண்ணனும்னு சொல்லு "

"அப்புறம்"

"ஓகே சொல்லிட்டா அவ்வுளோதான் மச்சி 80% கன்பார்ம் "

"எப்படிடா ஓகே சொல்லுவா இப்போ தான் முதல் தடவ "

"அப்படி இல்லடா, எப்போ அவ நீ தம் அடிக்குறத பார்த்து பீல் ஆகி உன்கிட்ட பேசாம இருந்தாளோ, அப்போவே அவளுக்கு உன் மேல ஒரு அக்கறை இருக்குடா. நீ கூப்பிடு அவ வருவா "

"சரிடா "

"ஆனா மச்சி ஈவினிங் கூப்பிடாத ஏன்னா அவளுக்கே லேட் டைம் தான் வொர்க் முடியும் ஸோ மார்னிங் வேலைக்கு போறதுக்கு முன்ன பார்க்கலாம்னு சொல்லு "

"ஆமாம் மச்சி சரி தான், அவ வரலைனாலும் என்னை தப்பா நினைச்சிட கூடாது "

"எல்லாம் சரியா வரும் , ஆனா மயிரு சரக்கு கேட்டா வாங்கி தர மாட்ட அவளுக்கு போயி இவ்வுளோ ரூபாய்க்கு கிப்ட்டு *ண்டை மட்டும் வாங்கு "

"அடிங்க *ண்டை தப்பா பேசுன கடுப்பாகிடுவேன்"

"போடா போடா கரெக்ட் பண்ணிட்டு பேசுடா "

"ஓடிடு கார்த்தி நான் அவள்ட பேச போறேன் "

"சரி சரி சீக்கிரம் பேசிட்டு படு அப்போ தான் காலைல ப்ரெஷ்ஷா போகலாம் "

சரி அவளுக்கு மெசேஜ் பண்ணுவோம் ஆண்டவா எப்படியாச்சும் அவ வரணும்,

"ஹாய் "

என்னடா டக்குனு ரிப்ளை வருது டேய் சக்தி கலக்குற

"ஹாய் என்ன பண்ற "

என்ன சொல்லலாம் ஹ்ம்ம் சரி தட்டி விடுவோம்.

"இல்லை அனு நீ தப்பா நினைக்கலனா ???"

என்னடா நேரா விஷயத்துக்கு போயிட்டோம் , ரிப்ளை பண்ண மாட்டாளோ...?? கிளிஞ்சது போ .... அட வந்துருச்சே

"என்ன சக்தி சொல்லு "

டே டே நல்லா யோசிச்சிக்க அவளே ஒரு வாய்ப்பு கொடுத்துட்டா

"அனு நாளைக்கு மார்னிங் ரெண்டு பேரும் ஒண்ணா ஆபிஸ் போகலாமா "

நடக்கிறது நடக்கட்டும் பார்த்திடுவோம் ,ஏதும் வரல ,குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்திட வேண்டியது தான்.... அய்யயோ என்னமோ வந்துருக்கு திட்டி இருப்பாளோ ?????

"என்ன திடிர்னு தைரியம் வந்துடுச்சா "

அட ஆண்டவா என்ன பண்ணுறது ??? கார்த்தி கார்த்தி இங்க வாடா டே.. டே... எங்கடா போயி தொலைஞ்ச ???

"ஹா ஹா அப்படி இல்ல அனு"

அய்யயோ நான் என்ன பன்னுறதுனே தெரியலையே.

"ஓகே சக்தி நாளைக்கு நா வெயிட் பண்ணுறேன் நீ வா போகலாம் "

"தேங்க்ஸ் அனு நீ வெயிட் பண்ண வேணாம் , நான் தான் உனக்காக வெயிட் பண்ணுவேன் "

"ஹா ஹா போடா நான் தான் வெயிட் பண்ணுவேன் "

"அனு இப்போ நான் பறக்குறேன் தெரியுமா "

"ஹையோடா ,,, நாளைக்கு என்ன டே தெரியுமா ??? "

" ஹ்ம்ம் அதுக்காக தானே நாளைக்கு "

"ஹய் ரியலி "

"எஸ் அனு, கண்டிப்பா நாளைய நாளை நீ மறக்க மாட்ட "

"ஹ்ம்ம் மீ டூ வெயிட்டிங் சக்தி"

"ஓகே அனு டைம் எத்தனை "

"இதுக்கு மெசேஜா முடியல சக்தி "

"சொல்லு அனு ப்ளீஸ் "

"11.59"

"இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என் இனிய அனுவிற்கு, இன்று நீ பெரும் வாழ்த்துக்களை போல என்றும் நீ வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்"

"ஹே சக்தி thank you so much da      dear "

போடு இதை இதை தான் எதிர்பார்த்தேன். நான் அவள்ட லவ்வ சொல்லலை ஆனா கிட்டத்தட்ட சொல்லிட்டாளே அனு.

"டே கார்த்தி கார்த்தி இந்த கான்வேர்ஷேஷன பாரேன் ப்ளீஸ் மச்சி எந்திரிடா மாமா , புல் அடிப்போம்"

"என்னடா "

"ப்ளீஸ் பாரு மச்சி "

"ஹ்ம்ம் ...... டே மச்சி கலக்குற ...... அட ...... போடு வக்காளி ......ஹ்ம்ம் .... ரைட்டு அவ்வுளோதான் மச்சி, இனி நீ தான் டெவலப் பண்ணனும்"

" எப்படிடா "

"ஜஸ்ட் நாளைக்கு பேசுறப்போ ஈவினிங் படத்து கூப்பிடு "

" டே வருவாளா ??? "

"நீ கூப்பிடுடா கண்டிப்பா வருவா , எத்தனை பேர பார்த்து இருக்கேன் "

"ஹ்ம்ம் "

" படத்துக்கு வந்துட்டா பினிஷ் மச்சி ....மெதுவா டைம் பார்த்து அப்படியே அழகா கைய வச்சிடு "

"டே என்னடா சொல்லுற "

" ஆமாம் மச்சி நீ கைய வச்சிடு , அவ ஒன்னும் சொல்லலை அப்படியே என்ஜாய் பண்ணு ரூம் போட்டுறு, நீ ஒன்னும் செய்ய வேண்டாம் அவளே பார்த்துக்குவா "

"எப்படிடா சொல்லுற??? எனக்கும் ஆசையா தான் இப்போ இருக்கு மச்சி "

"அதான் பாயிண்ட் , கைய அவ தட்டி விட்டா டக்குனு எந்திரிச்சி வெளிய வந்திடு "

"ஏன்டா"

"அப்படியே ரூம்க்கு வந்துடு மச்சி , அவளே திரும்பவும் உன்ட வருவா அதான் பொண்ணு"

"என்னமோ சொல்லுற பார்ப்போம் "
***********************************************************************************************
"அனு என்ன பேஸ் புக்ல பெர்த் டே நாளைக்குன்னு வருது, உனக்கு தான் போன வாரம் முடிஞ்சதே "

"அதுவாடி ச்சும்மா "

"ஹே எவன்டி"

"விடு நாளைக்கு சொல்லுறேன்"

"ச்சும்மா சொல்லுப்பா "

" ஹே அவனே பழமாட்டம் இருக்கான் அதுக்கு தான் பிட் போட்டுருக்கேன்"

"ஹ்ம்ம் அப்போ அடுத்த விக்கெட் காலி"

"எங்க அவன் நமக்கு மேல இருந்தான்னா ???"

"அனு நீ கவ்வுத்துடுவடி அவன "

"பார்ப்போம் பார்ப்போம் குட் நைட் "

Tuesday, 14 October 2014

கதை உண்மையாகுமா ????

என் பெயர் அருண் , கடைசி பெஞ்சும் அதற்கு அடுத்த பெஞ்சிலும் மாறி மாறி அமர்ந்து பள்ளி கல்லூரி வாழ்க்கையை முடித்தவன். அப்படியே வேலைக்கு சென்று கற்றதனால் பெற்ற பலனை அனுவும் உபயோகிக்காமல் , செய்வதனால் பெரும் அனுபவத்தை கொண்டே பணி புரிந்து கொண்டு இருக்கின்றேன். எல்லோரையும் போல காதல் வயப்பட்டேன் இரண்டு முறை அதுவும் ஒரு தலையாக முடிந்து போனது. பெண்களை கண்டால் ஒரு வெறுப்பு என்று வெளியில் சொல்லி கொண்டு இருந்தேன் உள்ளுக்குள் ஆசை எண்ணிலடங்காமல் கனந்து கொண்டே இருக்கின்றது. அலுவல் ரீதியாக எந்த ஒரு பெண்ணிடம் உரையாடும் போது கூட நடுக்கத்துடன் பேசுவது எனக்கு வாடிக்கையாக இருந்தது. கண்ணை பார்த்து பேசாத ஆண்களை பெண்கள் எளிதாக கணித்துவிடுவார்கள் என்பார்கள் நானும் அவ்வாறே கண்ணை மட்டும் இல்லை அவர்களையே பார்க்காமல் வானம் பார்த்து பேசி என்னை நானே கீழிறக்கி கொண்டேன்.அந்த நிலைக்கு கூட எதாவுது வியாதியின் பெயராக இருக்கும் ,அதை பல காலமாக தேடிக்கொண்டே இருக்கின்றேன் .

 தனிமையிலே பல நேரங்கள் என்னை நான் நேசித்து கொண்டு இருந்தேன், ஆனாலும் பொதுவெளியில் என்னுடைய நிழல் கூட என்னை வெறுத்தது. இப்படியே போகிகொண்டிருக்கும் வாழ்க்கையில் சூழ்நிலை என்னையும் அவளிடம் கொண்டு சேர்த்தது. அவள் பெயர் தமிழ். என்ன ஒரு அழகான ரசனையான பெயர் "தமிழ்" சொல்லும் போதே இனிக்கின்றது தானே. அப்படி தான் இருந்தது அவளை பார்க்கும் போதும். செல்ல அணைப்பிலும் சிணுங்கும் பேச்சிலும் சீறும் சிரிப்பிலும் கவரும் பார்வையிலும் வளைந்து நெளியும் அழகியலிலும் மொத்தமாக என்னை வீழ்த்தி விட்டாள். அவள் என்னை தேடி வரவில்லை நான் தான் அவளை தேடி சென்றேன் ஏன்னென்றால் ???? அவள் பெண் நான் ஆண் என்று கூட கூறலாம் ஆனால் உண்மை ..........????



தமிழ் அவளை நான் முதலில் சந்தித்தது என்னவோ வேண்டா வெறுப்பாக தான் ஆனால் அப்பொழுது கூட நான் அவளை தேர்ந்து எடுக்க மாட்டேனா என்று ஏங்கினாள் என் கையை பிடித்து ? நானோ வெறுப்பில் கையை உதறிக்கொண்டு விடுபட்டேன் அவளிடம் இருந்து.பின்னர் சில பல பெண்களை பார்த்து அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வேதனைப்பட்டு கொண்டே தேர்ந்து எடுக்க நேரம் எடுத்து கொண்டேன். ஆம் நான் அவளை கண்டது விபச்சார வீட்டிலே இல்லை இல்லை விபச்சார தெருவிலே வேண்டாம் அது ஒரு விபச்சார ஊர்.அதுவே சரியாக இருக்கும்.

ஆட்டுசந்தையில் ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது ஆடுகளுக்கு தெரியாது ஏன் என்று இங்கே ஆடுகளாய் இருக்கும் மாதவிகளுக்கு தெரியும் ஏன் என்று. முதல் முறை நான் இவ்விடத்தை காண்கிறேன் குற்ற உணர்ச்சி என்னை வாட்டியதை விட இவர்களின் வேதனையான வாழ்க்கை  முறையே என்னை சோதிக்க செய்தது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வையில் என் மனம் நொறுங்கிவிட்டது.

 இவ்வாழ்கையே வேதனையான ஒன்று என்றால், அவலட்சணமாக இருக்கும் பெண்களை அங்கு காணும் பொழுது கண்ணீரே வந்துவிட்டது கடவுள் இந்த நரக வாழ்க்கையை கூட அவர்களுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை. அவர்களின் நிலையில் இருந்து யோசித்தால் எப்படி இருக்கும்? அங்கு இருக்கும் 200 பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்றுவிடுகின்றனர்.பின்னர் இவர்கள் மட்டும் தனிமையில் யாராலும் தேர்ந்து எடுக்கப்படாமல் இருக்கும் பொழுது அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தாலே நெஞ்சம் அழுகிறதே. அங்கே தன்னுடைய அங்கங்களை வெளிகாட்டி அழைக்கும் பெண்கள் நிலை அதைவிட கொடூரமாக இருந்தது எப்படியாவுது தன்னை அழைத்துவிடுவான் என்று அவர்களின் செய்கையினால் எனக்கு  காமத்தின் மேல் இருந்த விருப்பம் மொத்தமுமாக அழிந்து தான் போனது.

 இப்படி வேதனைபட்டாலும் நானும் ஒரு சராசரி மனுஷன் தானே ஆசை யாரை தான் விட்டது, அப்படியே தேடிக்கொண்டு இருக்கும் பொழுது நினைத்தேன்... ஆசையாக வந்து என் கையை அன்பாக பிடித்தவளை அதுவும் அழகாக தானே இருந்தால்,ஏன் அவளிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டேன்? அவளையே அழைப்போம் என்று அவள் இருக்கும் இடம் சென்று பார்த்தேன். இம்முறை எப்படியும் இவன் எடுக்க மாட்டான் என்று வேதனையுடன் என்னை அவள் பார்க்கும் பொழுது, என் கை அவள் வேண்டும் என்று அவளை நோக்கி நீட்டியது. அவளோ கண் கலங்கிய சிரிப்பில் உண்மையில் நாணம் கொண்டாள். அந்த கண்ணீருக்கு ஆனந்த கண்ணீரா என்று தெரியவில்லை.

அவளை தேர்ந்து எடுத்தவுடன் ஆவலுடன் அல்ல அவளுடன் அருகில் அமரும் போதே படபடப்பு தொடங்கிவிட்டது.எனக்கு கதை கேட்க எப்பொழுதுமே விருப்பம் ஆகையால் அவளிடம் அவள் கதை கேட்டேன். தமிழ் சிரித்தது நானோ அதிர்ந்தேன் அவளின் அடுத்த வார்த்தையில். நீங்கள் இந்த ரகமா என்று கேட்டு கொண்டே சிரித்தாள். எனக்கோ புரியவில்லை நான் இது தான் முதல் முறை என்று என்னை பற்றி சிறுகுறிப்பு போல கூறினேன். அவள் அதற்கும் சிரித்தாள் நிறைய பேர் இப்படி தான் சொல்லுவாங்க அதுல ஒரு சிலர் உங்களை போல எங்களை பற்றி கேட்பாங்க ஆனா எல்லாரும் கடைசியா செய்யறது ஒன்னு தான் என்று மீண்டும் சிரித்தாள். இம்முறை சிரித்து கொண்டே மேலாடையை விடுவிக்க முயலும் போது வேண்டாம் பேசுவோம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்ல அவளோ அதற்க்கும் சரி என்று கூறிவிட்டாள்.

பேசினேன் பேசினேன் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அவளிடம் கூற அவளுக்கோ அதிர்ச்சி ஏன் நான் இப்படி பேசுறேன் என்று நினைத்தாலோ என்னவோ அவள் உறுதி செய்து கூறினால் ஆம் நீ முதல் முறை தான் வந்து இருக்கிறாய் என்று. எனக்கோ ஆச்சிரியம் ஒரு பெண் ஒருவனை அவனின் பேச்சில் இருந்து எளிதாக அவனைப்பற்றி கணித்துவிடுகிறாள் என்று. பின்னர் அவளை பற்றி கூற தொடங்கினாள் சரியாக அவள் கணவன் தொலைபேசியில் அழைத்தான்............
                                                                                                                                           தொடரும்

Friday, 14 February 2014

நாவல் சிறுகதையானது பின் நாவலாகும் - சிறுகதை

பனிபொழியும்  அதிகாலை நேரம்
உன் முகம் பார்க்க சூரியனும்
எட்டி எட்டிப் பார்க்கும்
உன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்...

நீ சோம்பல் முறிக்கும்
அழகை பார்த்து சூரியனும்
தலை சுற்றி தான்
மேகத்தினுள் புதைந்து  போகும்...

சிரித்து கொண்டே கார்த்திக்கை பார்த்து போ படிக்க மாட்டேன் என்று சிணுங்குகிறாள் சந்தியா. ஹே என்ன ரெண்டு வரி படிச்சுட்டு அதுக்குள்ள வெட்கபடுற முழுசா படிடா என் செல்லம்ல என்று அவளின் கன்னத்தை தட்டுகிறான் அவளும் படிக்க தொடங்குகிறாள் மனதுக்குள்ளேயே.

நீ போடும் கோலம் கூட
கலைந்து கலைந்து நீண்டு கொண்டே
போகும் இன்னும் கொஞ்ச நேரம்
நீ கோலமிட  மாட்டாயா  என்று ....

 (அவள் படித்து உதிர்க்கும் உதடுகளின் சிரிப்பின் வெடிப்பை  கார்த்திக் அளக்கின்றான்  )

நீ போட்ட கோலம் கூட
உனக்கு நன்றி சொல்லி
சிரிக்கும் முடிவில்
நீ வைக்கும் பூவில் ...

உன் குளியல் அறை
கண்ணாடி உன்னை
பார்த்து பார்த்து
விரிசல் விடுவது
உனக்கு புரியவில்லை
போல நீயும்...
அதை மாற்றி கொண்டிருப்பதை
விடுத்து அதை தூக்கி விடு ....!

இந்த வரியை படித்து முடித்தவுடன் அவள் நாணம் கொள்ள முடியாமல் ச்சீ போடா என்னால படிக்க முடியலை என்று சிரித்து கொண்டே அவனை அடிக்கிறாள், அவனும் அவளின் அன்பை ஏற்று கொண்டே அவளை மேல் படிக்க சொல்லுகிறான் , வெளியில் நடித்தாலும் அவளுக்கும் அடுத்து என்ன எழுதி உள்ளான் என்று படிக்க ஆவல் தான் அதனால் தொடர்கிறாள்.

உன் அறையில்
உள்ள கண்ணாடியோ
நீ உடை மாற்றுவதை
பார்த்து பார்த்து விரிசல் விடுகிறது ...
உன் வீட்டில் இருக்கும்
கண்ணாடிகள் அனைத்தும்
பிறவி பலன் அடைகின்றது ....

( படித்து கொண்டே சிரித்து கொண்டும்  நாக்கை கடித்து கொண்டே கார்த்தியை பார்வையாலே விழுங்கிவிட்டால் சந்தியா.)

நீ சாலையில் நடந்து
செல்லும் போது
உன்னை ரசிக்க
ஒரு கூட்டம் என்றல்...
உன் நிழலை ரசிக்கவும்
ஒரு கூட்டம்
பின் தொடர்கின்றது ....

உன்னை தொட்டு செல்லும்
தென்றல் கூட மற்றவரை
தீண்டும் போது
அளவில்லா சூடுடன்
இருகின்றது ...

இவையனைத்தும் கடந்து
நீ பேருந்தில் ஏறினால்
அதுவரை மாநகர பேருந்து
கூட அழகு பேருந்தாகிறது....

நீ உன் கல்லூரியில்
இறங்கி செல்லும் போது
உன்னை பின்தொடரும்
கூட்டத்தில் ஒரு சலசலப்பு
நீ யாரை பார்த்தாய் என்று ...?

நீ உடை சரி செய்யும்
ஒவ்வருமுறையும்
மற்றவர்களும் அதை
மறந்து உன்னை போல்
செய்து பார்க்கிறார்களே ...அய்யகோ ?

இப்படி உன்னால்
பலர் பித்து பிடித்து அலைய
நீயோ ....!
எந்தஒரு
வியப்பும் இல்லாமல்
வருகிறாய் போகிறாயே...!
என் தேவதையே ....

படித்து முடித்தவுடன் என்னவென்று நினைப்பதற்குள் கார்த்திக்கை இறுக்கி அனைத்து கொண்டால் சந்தியா. அவனும் கொஞ்சம் திமிறி தான் அவளை அனைத்து கொண்டு இது தான் உனக்கு நான் தந்த பிறந்தநாள் பரிசு என்று கூறினான். எனக்கு நீ போதும்டா நீ மட்டும் போதும் என் லைப் நல்லா இருக்கும் என்று கூறும் போதே ஆனந்த கண்ணீரோடு அதை துடைக்க அவன் மார்பில் புதைந்தாள் சந்தியா.

கார்த்திக்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை சகஜநிலைக்கு கொண்டு வந்தான். அவளும் அவனிடம் சரி நான் கிளம்புறேன் வீட்டுக்கு, நாளைக்கு பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே கிளம்ப ஆயத்தமாகிறாள். கார்த்திக்கும் சரி வா நானே ட்ராப் பண்றேன் வீட்ல மாமாவையும் அத்தையையும் பார்த்துட்டு வந்தது போல இருக்கும் என்று கூற அவளும் அவனை சிரித்து கொண்டே வா போலாம் என்று அவன் வண்டியில் ஏறியதும்  இவளும் ஏறுகிறாள்.

                                             ****************************

கார்த்திக் தன்னுடைய காதலை எவ்வாறு நந்தினியிடம்  தெரிவிப்பது என்று கடந்த ஆறு மாதகாலமாக தடுமாறி கொண்டே இருக்கின்றான்.அவளோ இவனை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை அது மட்டும் இல்லாமல் 11ஆம் வகுப்பு படிக்கையில் ஒரு பெண் காதலிக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை பாவம் ஆண்கள் தான் இப்பொழுதெல்லாம் 8ஆம் வகுப்பிலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்புறம் காதலுக்கு கண் இல்லை என்பது போல வயசும் இல்லை தானே என்று பலதரப்பட்ட இரண்டாம்  தர காதல் தமிழ் சினிமாக்களை கண்டு இவனே இவனுக்குள் அவள் தன்னை காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்தே தான் காதலிக்க தொடங்கினான் ஆறு மதங்களுக்கு முன்னே. கார்த்திக்கு இன்றும் ஞாபகம் உள்ளது அவளை கண்ட முதல் நாள்  ஜூலை 5 2004 அவனால் யுகம் தாண்டினாலும் அதை மறக்க முடியாது. அன்று இவன் மனதில் ஊற்று எடுத்த வேகம் நாள் ஆக ஆக வீரியம் கொண்டு இவனை காதலில் மூழ்கவைத்தது.

ஒரு தலை காதல் ஆண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் , ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் அனுபவிக்க வேண்டியது. காதல் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் அன்பின் ப்ரியம் எல்லாமும் மொத்தமாக நம்மை ஆட்கொள்ளும் காலம் அது. இன்பம் , துன்பம் , துக்கம் , வேதனை , பசி , தூக்கம் என்று எதுவும் தெரியாமல் எந்தஒரு நிகழ்வையும் நம் காதலியை இணைத்தே பொருள் கொள்ள தூண்டும் காலம் அது . கார்த்திக்கும் எப்பொழுதும்  நந்தினி நினைவில் அவளுக்காக ஏங்கியும் அவளுக்காக காத்திருந்தும் அவளுக்காகவே பிறந்ததும் போலவே உணர்ந்தான். இரண்டு மணிநேரம்  நந்தினிக்காக காத்திருப்பான் அவள் டியூஷன் முடித்து வருவாள் சைக்கிளில் ஒரு நொடியில் இவனை கடந்து போய்விடுவாள். இவனோ அந்த ஒரு நொடி ஏதோ ஒரு யுக  வாழ்க்கை வாழ்ந்தது போல பூரிப்பு அடைவான்.

 நந்தினி சைக்கிளில் முன்னே சென்று கொண்டு இருப்பாள் இவனோ அவள் பின்னே அவளை தொடர்ந்து கொண்டே போவான் ஒரு சில நாட்களில் அது இவனுக்கு சங்கோஜமாக இருக்க சிறிது நேரம் பின் தொடர்ந்து விட்டு சாடார் என்று வேகாமாக அவளை முந்தி செல்லும் போது திரும்பி நந்தினி கண்களை பார்ப்பான் அவளும் பார்ப்பாள் இவனிடம் காதல் கட்டுகடங்காமல் இருந்தது அவளிடம் இவனை பற்றிய எண்ணம் கீழ்தரமாகிக் கொண்டே போனது.

இப்படி தனியாக காதலில் வாழ்ந்து கொண்டு தன் 12ஆம் வகுப்பின் படிப்பை தாரைவார்த்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவளோ இவனை பற்றி அவள் வீட்டில் சொல்லிவிட. அவள் வீட்டிலிருந்து பள்ளிக்கு படையெடுத்தார்கள். வழக்கம் போல அன்றும் அவளுக்காக  வகுப்பு வெளியே அவளை தேடிக்கொண்டு இருந்தான் அவளோ தன் அம்மாவுடன் பள்ளிக்கு வெளியில் இருந்து  உள்ளே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நண்பன் கூறியவுடன்  பயத்தின் உச்சிக்கே சென்று விட்டான். இதுவரை அவளுடன் ஒரு வார்த்தை பேசியது இல்லை அவளை பற்றி எங்கும் தவறாக பேசியது இல்லை அவளுக்காக காத்துகொண்டு மட்டுமே இருப்பான்  ஒரு நொடி பார்வைக்காக , சற்று அவளை மிதிவண்டியில் பின் தொடர்வான் அதுவும் அவள் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று அதை விட்டு அவளை முந்திசெல்லுவதை வைத்துகொண்டான்.

ஆனால் அவளோ இவனை பற்றி என்ன சொன்னாலோ பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வந்தது அழைப்பு கார்த்திக்கு, சென்றவன் அவளின் அம்மா காட்டிய ஆக்ரோஷத்தில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனான் " டேய் உனக்குலாம் வெட்கமாவே இல்லையா ஒரு படிக்கிற பொண்ண இப்படியா டார்ச்சர் பண்ணுவ , உன் தங்கச்சிய பாலோ பண்ண வேண்டியது தானே இத்யாதி இத்யாதி " என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தவன் பள்ளியில் அவனுக்கு என்று நல்ல பெயர் இருந்தது அதனால் அவனின் வார்த்தைக்கும் செவி கொடுக்கப்பட்டது.

"'சார் என் ஊருக்கு போற வழி அது தான் இவுங்க என்ன தப்பா நினைச்சிட்டு பேசுறாங்க "

"பொய் சொல்றான் சார் இவன் தினமும் என் பொண்ணு பின்னாடி தான் போவானாம், செருப்பாலயே அடிப்பேன் டா "

"சார் ப்ளீஸ் நம்புங்க என் மேல எந்த தப்பும் இல்லை "

இதை அனைத்தையும் அவளும் கண்டு கொண்டு தான் இருக்கின்றாள்.ஒரு முடிவாக இனி இது போல் நடக்காது என்று தலைமை ஆசிரியர் அவர்களுக்கு உறுதி அளித்தார். அவர்களும் அதை ஏற்று அவனை முறைத்துவிட்டு எச்சரித்து   சென்று விட்டனர். அவர்கள் சென்றபின் கார்த்திக்கின் அப்பாவை அழைத்துவருமாறு கூறுகின்றனர் அவனோ இடி விழுந்தவன் போல அப்படியே உறைந்து போனான். பின் சுதாரித்து கொண்டு கெஞ்சி கூத்தாடி எங்க அப்பா இங்கே வந்தால் எனக்கு சாவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்றே கதறினான். அதை கண்ட அவர்களும் ஒரு வாய்ப்பு தந்தனர் அவனுக்கு.

அடுத்தநாள் பள்ளிக்கு வரும் பொழுது புது நோட் வாங்கினான் அதில் அவன் முதல் பக்கத்தில்  எழுதியது,

"நீ இல்லாமல்
என்னால் நினைத்து கூட
பார்க்க முடியவில்லை
அந்த அழகு கற்பனை
தேவதை எப்படி தான்
இருப்பாள் என்று ...?

விளைவுகள் என்ன என்ன
வரும் உன் அழகை ரசித்தால்
என்று தெரிந்து தான் என்
உறக்கத்தை தொலைக்கின்றேன் ...!

அழகை ரசிக்க ஆரம்பித்தால்
கவிதை திருட தோன்றும்
கவிதை திருட தோன்றினால்
உன்னை  ஒப்பிட தோன்றும்
உன்னை ஒப்பிட்டு பார்த்தால்
கவிதையை திருத்த தோன்றும்
கவிதையை திருத்தி பார்த்தால்
உன்னால் ஒரு கவிதை தோன்றும்
என்று உன்னாலே  நானும் எழுதுகிறேன்"


                                   "நித்தமும் நிதர்சனமும் நந்தினியே "

                                            *****************************

இன்னும் சரியாக இரண்டு  மாதமே  உள்ளது கார்த்திக்-சந்தியா திருமணத்திற்கு அதுவும் 2014 காதலர் தினம் அன்று. இந்நாளை இவர்களே மிகவும் விருப்பபட்டு தேர்வு செய்தனர் நம்முடைய திருமணம் நடைபெறும் நாளில்  உலகில் அன்பின் பரவசம்  வெள்ளமாக  பெருக்கெடுத்து ஓட வேண்டும்  என்று நினைத்தே முகூர்த்த நாளும் வந்து அமைய இதையே பிடித்து விட்டனர். இருவீட்டாரின் சம்மதத்தோடு காதல் திருமணம் நடைபெற போகின்றது.

சந்தியா எப்பொழுதும் கார்த்திக்கை விட்டு கொடுக்கமாட்டாள் அவன் தான் அவளுக்கு உலகம். இப்படி ஒரு காதலன் கிடைக்க மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று அவளுக்கே அவள் மேல் ஒரு கர்வம் இருந்தது. சந்தியா கார்த்திக்கை அழைக்க வேண்டும் என்று நினைத்தால், கார்த்திக் அவளை பார்க்க தான் வந்து கொண்டே இருப்பான்  என்று இருவருக்கான எண்ணங்கள் ஒற்று போனதாலே, நல்ல காதல் திருமணம் ஆக போகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் கார்த்திக் தான் அவளை துரத்தி துரத்தி காதலித்தான் அதுவும் ஆரம்ப காலத்தில் அவனை சந்தியா  மிகவும் கஷ்டபடுத்தி இருக்கிறாள். சந்தியாவின் கல்லூரி இருப்பது தஞ்சாவூர்-புதுகோட்டை சாலையில் ,கார்த்திக்கின் கல்லூரி இருப்பதோ திருச்சி -திண்டுக்கல் சாலையில் .ஆனால் அவளின் மேல் உள்ள காதலினால் இவளை காண இரண்டு மாதம் ஒரு முறை சென்றுவிடுவான் ஆனால் அவளை பார்போதோ இவனை கடந்து போகும் ஒரு நொடி. இப்படியாக அவளை நினைத்து நினைத்து அவளுக்காகவே வாழ்ந்து வந்தான்.

இதில் இவனின் அனைத்து நண்பர்களும் இவனையும் இவனின் காதலையும் மிகவும் மதித்து வந்தார்கள். அதிலும் சிலர் இவனை அவனின் காதல் கதை கேட்டு இவனையும் பெருமிதம் கொள்ளவைப்பர். 6வருட ஒரு தலை காதல் இவன் கல்லூரி முடித்தும், அவள் கல்லூரி முடித்தும். ஒரு தலையாக இருந்தவனுக்கு காலம் கனிந்து வந்ததது சென்னையில் .

 இவன் சென்னையில் வேலை பார்த்துகொண்டு இருக்கும் பொழுது அவள் கல்லூரி முடித்துவிட்டு அப்பொழுது தான் சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். அவள் நேசிக்கவில்லை என்றாலும் அவளின் அனைத்து விஷயங்களையும் இவன் யார் மூலமாக தெரிந்து வைத்து கொண்டே இருந்தான். சென்னையில் சி.டி.எஸ் நேர்முகத்தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு ஆச்சிரியம் கார்த்திக் நின்று கொண்டு இருந்தது. இம்முறை ஒரு நொடி பார்வை நீண்டுகொண்டே போகின்றது அதுவும் சந்தியா கார்த்திக்கை நோக்கி நடந்து வருகிறாள். இவன் நெஞ்சம் படபடப்பில் துடிக்கின்றது கொளுத்தும் வெயிலில் இவனுக்கு நடுங்குகிறது. அவள் நடந்து வர வர இவன் கண்ணை மூடி ஒருமுறை யோசித்தான் இனியும் உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து இருக்க முடியாது,இப்பொழுதே முடிவு தெரிந்து தான் போகணும் என்று யோசித்து முடிப்பதற்குள்ளே கேட்டது அவனுக்கு ,

"கார்த்திக்" ...

கண்களை திறகின்றான் கலங்கி கண்ணீர்  வெளியில் வர ஆயத்தமாகின்றது.

"சென்னைக்கு நேற்று  தான் வந்தேன் வீட்டுக்கு போகணும் பயமா இருக்கு என் கூட துணைக்கு வரியா "

"எப்படி இருக்க சந்தியா"

"நீ எப்படி இருக்க ? எங்க வொர்க் பண்ற ? "

ஆட்டோவை மறித்து கொண்டு அதில் ஏறுகிறார்கள்

" வா போகலாம் வீடு எங்க வேளச்சேரி தான"

" உனக்கு எப்படி தெரியும் "

"அதெல்லாம் தெரியும் நீ வா , சென்னைல தான் வொர்க் எல் & டி "

"நல்லா இருக்கேன் நீ எப்படி இன்னும் அப்படியே இருக்க"

" எப்படி ??? "

" என்னைய பத்தி தெரிஞ்சிட்டே எங்க போறேன் வரேன் என்ன பண்றேன்னு " (சிரித்துவிட்டாள்)

"என்னபன்னாலும் நீ தான் ஒன்னு சொல்ல மாட்டேங்குற"

"கார்த்திக் நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்"

" ...."

"எனக்கு வேலை கிடைச்சவுடன் சொல்லபோறேன் வீட்ல கூட தெரியும் "

"......"

"வா வீட்டுக்குள்ள வா அம்மா இருக்காங்க பார்த்துட்டு போ"

" இல்லை நீ பார்த்துக்க நான் வரேன் "

"கார்த்திக் ஐ லவ் யு "

பற்களை கடித்துக்கொண்டு கண்கள் துடிக்கின்றது அவனிற்கு திரும்பி அவளிடம்

"என்ன சந்தியா ?"

"ஐ லவ் யு டூ மச் " என்று கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டால்.

அப்பொழுது அவனுக்கு தோன்றியதை அவன் டைரியில் குறிப்பிட்டான் பின் வரும் எழுத்துகளால்,

"காதலை அவளும் உணர்ந்தால் என்னை
தன் உயிர் என்று நினைக்கிறாள் ....

அவளின்
அன்பை நேசித்தேன்...
சுவாசித்தேன்...
உணர்ந்தேன் ...
அனுபவித்தேன்...

நொடி பொழுது பல மணி பொழுதானது
அவள் இல்லாதபோது ....
பல மணி பொழுது நொடி பொழுதானது
அவளுடன் இருக்கும் பொழுது...

என் கவிதைகளை அவள் ரசிக்க
அவளை மிக மிக ரசித்தது என் கவிதைகள் ... "

                                                 ************************************
எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் கார்த்திக் நந்தினியை விடுவதாக இல்லை , தொடர்ந்து நேசித்தான் முன்னை விட மிகுதியாக.  அவளை பின் தொடர்ந்தான் அவளுக்காக காத்துகொண்டு இருந்தான் ஆனால் இம்முறை நந்தினியும் எதையும் கண்டுகொள்ளவில்லை மாறாக அவள் தோழிகள் அவளை கிண்டல் செய்ய தொடங்கினர். கார்த்திக் அவளுக்காக காத்துகொண்டு இருக்கும் போது  அந்த பெண்கள் கூட்டம் கடந்து செல்கையில் அத்தனை பேரும் நந்தினியை பார்த்து ஏதோ சொல்லி சிரிக்க, அவள் மட்டும் மௌனமாய் கடந்து செல்வாள். கார்த்திக் இதையும் ஒரு முன்னேற்றமாக எடுத்து கொண்டே சென்றான்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு வேறு நெருங்கிக்கொண்டே இருந்தது , "காதல்" திரைப்படம் வெளியான பொழுது அதை பார்த்துவிட்டு மிகவும் உருகி போனான் வழக்கமான நம் தமிழ் கலாசார மாணவர்கள் போல அவனுள் இன்னும் காதல் ஊறிப்போனது. அவளோ இவனை ஒரு தூசியாக கூட நினைக்காமல் கடந்து சென்று கொண்டே இருந்தால். பள்ளியில் உள்ள பலருக்கு இந்த காதல் கதை தெரிய ஆரம்பித்தது. ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில்  சொல்லி இவனை பள்ளியில் எச்சரித்தும் மீண்டும் அவளை விடாமல் நேசிக்கும் அவன் யார் என்று பலர் தேடி வந்து பார்ப்பார்கள்  கார்த்திக்கை ஆனால் அவனோ  அவளின் நினைப்பில் தன்னை போல ஒருவன் பெண்ணை காதலிக்க முடியாது காதல் என்பது என்னிடம் வந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெருமிதத்தில் இருப்பான் .

ஒருமுறை நந்தினி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று தான் வரைந்த படத்தை பின் கசக்கி தூக்கி எறிந்துவிட்டால் (படுகேவலமாக இருந்தது என்று தோழிகள்  கூறி இருப்பார்கள் போல) அதை கார்த்திக் எடுத்து தன்னுடைய இயற்பியல் ரெகார்ட் நோட்டிற்கு அட்டையாக போட்டுவிட்டான். அதை அவள் பார்க்க வேண்டும் என்றே தினமும் அதை எல்லோருக்கும் தெரிவது போல எப்பொழுதும் எங்கும் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவள் டியூஷன் 7மணிக்கு முடியும் ஆனால் பள்ளி முடிவதோ மாலை நான்கு மணி வீட்டில் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க இன்னுமொரு டியூஷன் சேர்ந்தான் ,ஏற்கனவே கணக்கு , வேதியல் என்று இரண்டுக்கும் காலை நேரம் 6 டு 8 , இப்பொழுது இதற்க்கு மாலை 6 டு 7.எத்தனை டியூஷன் சென்றாலும் அங்கேயும் நந்தினி நந்தினி நந்தினி தான்.

தேர்வு நாட்கள் வந்தது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் 11ஆம் வகுப்பு  மதியம் தான் தொடங்கும். அந்த நாட்களில் கூட தேர்வு முடித்துவிட்டு  அவள் வரும் வரை காத்திருந்து பார்த்த பின்பே செல்லுவான் ஆனால் இம்முறை டைரி மில்க் சாக்லேட் வைத்துகொண்டு காதலை தெரிவிக்க போகின்றேன் என்றே எல்லா தேர்வும் கடந்தது  சாக்லேட் தினமும் கரைந்து போனது. இறுதி தேர்வு முடிந்து  அவளிடம் சென்றான் இம்முறை அவளும் இவனுக்காக காத்திருப்பது போல அவ்விடத்திலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டே இருந்தாள்.

பதற்றத்துடன் சென்றவன் இன்று சாக்லேட் கையில் இல்லை வாங்க மறந்ததை நினைத்து கையை பிசைய அவள் எதேச்சையாக பார்த்துவிட்டாள்.

அருகில் சென்று நாந்தினி என்று அழைப்பது அவனுக்குள்ளேயே கேட்டது அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை மீண்டும் ஒருமுறை நந்தினி என்று அழைக்க,

நந்தினி தன் செருப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.

இவனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது அன்று அப்பொழுது அவன் நினைத்ததை பின் ஒருநாளில் டைரியில் எழுதி வைத்துகொண்டான்,
       
"என் துயரம் நீ அறிய
என் உயிர் பிரிய வேண்டுமோ ??? "

பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வு  முடிவுகள் வந்தது , அடித்து பிடித்து கார்த்திக் தேர்ச்சி பெற்றுவிட்டான் ஆனால் தான் விரும்பும் படிப்பை படிக்க முடியவில்லை வீட்டில் இன்ஜினியரிங்  தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறிவிட யோசித்தான், "தன்னுடைய காதலுக்கு நந்தினியின் சம்மதம் மட்டுமே தேவை அவள் இறுதிவரை காதலிக்கவில்லை என்றாலும் கூட நன்கு பொறியியல் துறையில் படித்து சாதித்து பின் நம் வீட்டில் சொன்னால் நிச்சயம் ஒற்றுகொள்வார்கள் ஏன் என்றால் அவளும் எங்கள் ஜாதி தான் அதனால் எதிர்ப்பிற்கு காரணமே இருக்காது ஆக நான் நன்றாக படித்து முன்னேற வேண்டும் ஒரு எஞ்சினியராக பொண்ணு கேட்டு போகலாம் " என்று நினைத்து படிக்க ஒற்றுகொண்டான்.

கார்த்திக் எடுத்த மதிப்பெண்ணிற்கு திருச்சியில் தான் ஜே.ஜே  கல்லூரியில் இடம் கிடைத்தது.  முதல் முறை தன் சொந்தஊர் திருவையாறை விட்டு வெளியூரில் தங்கி படிக்க போகின்றான். தஞ்சாவூர் கல்லூரியில் தான் படிக்க ஆசை அப்பொழுது தான் தினமும் நந்தினியை பார்க்கலாம் அவளும் கண்டிப்பாக அக்கல்லூரியில் தான் சேருவாள் என்று நினைத்தவனுக்கு இது பேரதிர்ச்சி , இருந்தால் என்ன தான் எங்கே இருந்தாலும் என் காதல் மாறபோவதில்லை என்று முதலாம்  ஆண்டு கல்லூரி விடுதியில் அதுவரை வீட்டில் அடைபட்டு கட்டுபாடோடு இருந்தவனுக்கு அந்த சுதந்திரம் பரவசம் கொள்ளவைத்தது.

கல்லூரி வாழ்க்கை நான்கு வருடங்கள் கார்த்திக்கை புரட்டிபோட்டது அவன் வாழ்க்கையை , அவ்வபோது ஊருக்கு செல்லும் போது நந்தினியை எந்த நேரத்தில் காண முடியும் என்று தெளிவாக முடிவுசெய்துவிட்டே செல்வான் அதுவும் ஒருநொடி பார்வைக்காக. நந்தினி பள்ளி முடித்து எந்த கல்லூரியில் சேருவாள் என்று நினைத்தானோ அதே கல்லூரியில் தான் , தினமும் வீட்டில் இருந்தே சென்று வந்துவிடலாம். அதில் இவனுக்கு அவ்வளவு சந்தோசம் ஏன்??? கல்லூரி விடுதி எப்படி இருக்கும் என்று தான் இவனுக்கு தெரிந்துவிட்டதே. பார்த்தீகளா இங்கே பிறக்கின்றது இவனிடம் உள்ள ஆணாதிக்க திமிர். இப்பொழுது ஊருக்கு வரும் பொழுது அவளை காணும் நேரம் ஒரு நொடியில் இருந்து சில மணித்துளிகள் ஆனது அவள் கல்லூரி பேருந்து வரும் வரை நந்தினியும் இதை கவனிக்க தொடங்கினால். மாதம் மூன்று நான்கு முறை அதில் அவன் வீடிற்கு கூட செல்ல மாட்டான் அவளை காண்பதற்காக மட்டுமே 65மைல்கள் வந்து செல்லுவான்.கல்லூரி நண்பர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள் என்று அனைவரும் இவனின் 6வருட  காதல் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிகொண்டனர். பல இரவுகள் நினைத்தவுடன் கண்ணீர் வருவதை உணர்ந்தான். காதல் இவன் நெஞ்சில் தெய்வமாக ஆனது.

அப்பொழுது நந்தினி முகநூளில் நிச்சயம் இருப்பாள் என்று தேடி பிடித்து நட்பு விண்ணப்பம் கொடுத்தான். அவன் தேடியது எல்லாம் விரிவாக இங்கே கூற முடியவில்லை ஏற்கனவே நாவலாக வேண்டியது சிறுகதை ஆகிக்கொண்டு இருக்கின்றது இதில் அதை விரிவாக எழுத முடியவில்லை. நந்தினி என்று தேடினால் குறைந்தது ஒரு 30 அல்ல நாற்பது நந்தினிகள் வரும் அதில் இவனுடைய நந்தினியை பிடித்தான். அன்றைய தினம் முதல் இவனின் பொழுதுபோக்கு பாதி நேரம் அவளின் பக்கத்தையே பார்த்துகொண்டு இருப்பது எப்பொழுது தன்னை நட்பு வட்டத்தில் சேர்ப்பாள் என்றே நினைத்து உருகினான்.பின் ஒரு முடிவாக அவளுக்கு தன்னுடைய மனதில் உள்ளதை எழுதி(டைப்படித்து) உள்டப்பியில் அனுப்ப தொடங்கினான்.

Conversation started December 15, 2007
karthik
12/15, 1:31am
karthik
please read it....
ஹாய் நந்தினி ,
            ரொம்ப  கஷ்ட  பட்டு  உன்னை இதுல கண்டுபிடிச்சேன். நட்பு விண்ணப்பம் தந்து இருக்கேன் ஆனா நீ இன்னு அக்செப்ட் பண்ணலை.நீ என்ன எவ்ளோ வெறுத்தாலும் எனக்குள்ள இந்த 5 வருஷமா எந்த மாற்றமும் இல்லை உன்னை இன்னும் அதிகமா தான்  நினைக்க  தோணுது. உன்ன நினைச்சி எத்தனை நாள் நான் கலங்கி இருப்பேன்னு எனக்கு தான் தெரியும். எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை சத்தியமா சொல்லுறேன் உன்னை தவிர எந்த பொண்னையும் நினைச்சி கூட பார்க்க தோணலை அப்போ 17 வயசுல என்ன நினைச்சி உன்ன காதலிக்க தொடங்கினேனோ இப்போ 21 வயசுல எந்த வித்தியாசமும் தெரியலை நான் உன் மேல வச்சிருக்குற அன்பு மட்டும் என்னைக்கு மாற போறது இல்லை நந்தினி. உனக்காக தான் நான் இந்த படிப்பே படிக்கிறேன் எந்த ஒரு சின்ன விஷயம் கூட தடங்களா இருக்க கூடாதுன்னு .இதை படிச்சி திரும்ப என்ன வெறுத்தாலும் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு எனக்கு எப்படி புரியவைப்பதுனு தெரியலை. இதை சொல்லுறப்போ கூட கலங்குறேன்.என்ன புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நந்தினி. நமக்கான லைப் காத்திருக்கிறது .

"உன்னை நினைத்து நினைத்து
என் நினைவற்று போகும் தருணம்
மிக அருகினில் தான் பெண்ணே ....! "

என்றும் உன் நினைவுடன்
கார்த்திக்

December 21, 2007
karthik
12/21, 3:05am
karthik
நந்தினி ப்ளீஸ் என்னை உன் நட்பு வட்டத்துல சேர்த்துக்கோ அந்த சந்தோசமாவுது கொடு. எதாச்சும்  எண்ட பேச நினைச்சா ப்ளீஸ் இது தான் என் செல் நம்பர் காண்டக்ட் பண்ணு 9944229004

March 31, 2008
karthik
3/31, 11:27pm
karthik
நந்தினி  how are u...

April 7, 2008
karthik
4/7, 11:53pm
karthik
hai நந்தினி  how are u...my mail password karthiknandhini   and my cell code nandhini and official mail password nandhini so anytime i am remember u... i cant forget u...

April 13, 2008
karthik
4/13, 11:44pm
karthik
காதலின் வலிகள் வாழ்க்கையில்  சுமைதான் மனதிற்கு அந்த வலி கூட சுகம்தான்.

May 10, 2008
karthik
5/10, 3:27am
karthik
i love u nandhini
9944229004 this is my anything tell to me pls call this number am waiting till my life endddddddddddddd

May 25, 2008
karthik
5/25, 1:35am
karthik
hai nandhini thanks ur's update frist time in my page thats your's chairman victory comment.... today my more and most important day..... pls if u call to my number 9944229004 or karthiknandhi@live.com or karthiknandhi@gmail.com all mail passwords karthiknandhini

இப்படி உருகி உருகி நேசித்தவனின் கல்லூரி  வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அவனுடைய முழு தொகுப்பையும் இங்கே தெரிவிக்க முடியவில்லை முன்னே கூறியது போல சிறுகதை என்பதால் பின் வரும் நாவலில் அனைத்தும் வரும் இதோ அவனின் நான்கு வருட கல்லூரி எவ்வாறு கடந்தது என்பதற்கு அவனின் செமஸ்டர் முடிவுகள்.

முதல் செம் - 5 அரியர்ஸ் எழுதிய 6 தேர்வுகளில்
இரண்டாம் செம் -7 அரியர்ஸ் எழுதிய 7+5=13 தேர்வுகளில்
மூன்றாம் செம் -11 அரியர்ஸ் எழுதிய 6+7=13 தேர்வுகளில்
நான்காம் செம் -14 அரியர்ஸ் எழுதிய 7+11=18 தேர்வுகளில்
ஐந்தாம் செம் - 18 அரியர்ஸ் எழுதிய 6+14=20 தேர்வுகளில்
ஆறாம் செம் -23 அரியர்ஸ் எழுதிய 7+18=25 தேர்வுகளில்
ஏழாம் செம் -15 அரியர்ஸ் எழுதிய 6+23=29 தேர்வுகளில்
எட்டாம் செம் -5 அரியர்ஸ் எழுதிய 3+15=18 தேர்வுகளில்
ஒன்பதாம் செம் -0 அரியர்ஸ் எழுதிய 5 தேர்வுகளில்

இப்படி இறுதிகட்டத்தில் தான் சுதாரித்து தன் இழக்கை அடைந்தான், அதுவும் பட்டமளிப்பு விழாவின் போது கார்த்திக்கின் துறை மேலாளர் கட்டி தழுவி பாராட்டியது என்றும் அவனால் மறக்க இயலாது. அதில் அவன் பெற்ற வெற்றி காதல் காதல் காதல் அதற்காக மட்டுமே.இதோ கல்லூரி முடித்து தற்பொழுது சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டான். இங்கேயும் அவனின் நினைப்பு நிச்சயம் நந்தினி அடுத்த வருடம் கல்லூரி முடித்து சென்னை தான் வருவாள் என்று.

கார்த்திகை தீபம் அன்று இப்படி எழுதினான் நந்தினியை நினைத்து
"அகல் விளக்கு கூட
அழகு விளக்காகும்
தேவதை நீ ஏற்றும் தீபத்தில்..."

                                              ****************************

"கார்த்திக் எங்க இருக்க ???"

"உன்கிட்ட தான் இருக்கேன் "

"டேய் விளையாடாத சீக்கிரம் வா வீட்டுக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ண போகணும் "

"ஹே திரும்பி பாரு சந்தியா"

"ஹையோடா எப்போடா வந்த"

"இப்போதான் சரி சரி வா கிளம்பலாம் அம்மு"

"கொஞ்சுறத பாரு 2மினிட்ஸ்"

கார்த்திக்கும் சந்தியாவும் கிளம்பி வண்டியில் செல்ல நினைக்கும் போது கார்த்திக் நடந்தே போகலாம் பக்கத்துல  தானே என்று இருவரும் நடந்தே செல்லுகிறார்கள் கை கோர்த்து.

"சந்தியா உனக்கு ஒரு செம்ம சஸ்பென்ஸ் இருக்கு"

 "எனக்கு பிடிக்காதது கண்டிப்பா இருக்காது"

"ஹே எப்படி சொல்லுற ?"

"உனக்கு பிடிச்சது எனக்கு தான் பிடிக்குமே"

"மொக்கை போடாத"

"ம்க்கும் ச்சீ போடா "

"நான் எழுதுறேன்னு சொன்னேன்ல ஒரு நாவல்"

"ஆமா அதுக்குள்ள முடிச்சிட்டியா ??? "

"இல்லபா அதை ஒரு சிறுகதையா சுருக்கிட்டேன் ஒரு போட்டிக்காக "

"ஓஹோ சரி அது என்ன கதை ப்ளீஸ் சொல்லுடா"

"என்னோட லைப் தான் அந்த கதை"

"ஹை அப்போ நான் இருப்பேன்ல "

" நீ இன்னும் வரலை "

"நடிக்காத போடா சரி சரி நம்ம பேர் என்ன வச்சிருக்க"

"கார்த்திக் - நந்தினி"

"நந்தினி நந்தினி  நல்லா  தான்  இருக்குடா ஏன் சந்தியா பேர் வைக்கல நீ மட்டும் உன் பேர வச்சிகிட்ட"

 என்று செல்லமாக சண்டைபிடித்து கொண்டே சாலையில் காதல் மழை பொழிந்தால் நந்தினி ச்ச சாரி சந்தியா.