Showing posts with label முன்னோட்டம். Show all posts
Showing posts with label முன்னோட்டம். Show all posts

Wednesday, 8 January 2014

வீரம் - ஜில்லா---------- அஜித் - விஜய் ------- தல- தளபதி

தல அஜித் - தளபதி விஜய் இவர்களின் படங்கள் வெளியாகுது என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களிடம். இதுவரையில் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளிவந்த படங்களை  பற்றி ஒரு சிறிய பார்வையே மற்றும் சில வருடங்களுக்கு பிறகு தற்பொழுது வெளியாக போகும்  இருவரின் வீரம்-ஜில்லா படங்களின் முன்னோட்டமும் சேர்ந்ததே இப்பதிவு. 

வான்மதி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)


இப்படங்கள் வெளிவந்த சமயத்தில் விஜய் அவர்கள் நல்ல அறிமுகத்தோடு இருந்து இருப்பார். ஆனால் அஜித் அறிமுகம் கிடைத்து விடாதா என்றே முயற்சி செய்து கொண்டு இருந்து இருப்பார். இப்படங்களின் வெற்றி தோல்வி என்பதை விட வான்மதி படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா" என்ற  பாடல் இன்றும் விநாயகர் கோவில்களில் ஒலிப்பதை மறுக்க முடியாது. அதே போல கோ.மாவில் விஜய்-கவுண்டர் காமெடி நன்கு எடுபட்டது தெரியும். இன்றும் கூட ரசிக்க முடியும்.இப்படங்களுக்கு பிறகு சில நாட்களிலேயே வெளி வந்த பூவே உனக்காக மிக பெரிய வெற்றி பெற்று விஜய் என்ற நடிகரை பட்டி தொட்டி எங்கும் அறியவைத்தது. பின் இவ்வருடத்திலேயே நடுபகுதியில் வெளிவந்த ஆசை படமும் அஜித்திற்கு மிக பெரிய வெற்றியையும் அதுவரையில் அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை பார்த்த நம் தமிழ்நாடு அஜித் போல மாப்பிள்ளை வேணும் என்று சொல்ல தொடங்கியது.ஆக இருவரும் 1996ல் வெற்றி பெற்று நாயகர்களாக வர தொடங்கிவிட்டனர்.

நிலவே வா - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(1998)


ரொமாண்டிக் ஹீரோ என்ற அந்தஸ்த்துடன் விஜய் வளம் வந்து கொண்டு இருந்த சமயம். பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர் என்று ஹிட்களை கொடுத்து நல்ல அடித்தளமிட்டு கொண்டு இருந்தவருக்கு நிலவே வா தோல்வி படமாகவே அமைந்தாது ஆனால் பாடல்கள் இன்றும் கேட்டால் நன்றாக இருக்கும்.ஆனால் அஜித் ஆசை படத்திற்கு பிறகு தேசிய விருது பெற்ற காதல் கோட்டை  நல்ல வெற்றி படமாக அமைந்தாலும் தனித்துவமாக  சொல்லிக் கொள்வது போல் வெற்றி படங்கள் ஏதும் இல்லாமல் அவரேஜ் படங்களாக  தந்து கொண்டு இருந்தார். அப்படி கிடைக்கின்ற படங்களில் எல்லாம் நடித்தாலும் விக்ரமன் அவர்களின் நட்பில் கெஸ்ட் ரோல் (அமெரிக்க மாப்பிள்ளையாக) நடித்த படமே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் , படம் பெரிய வெற்றி தான் ஆனால் என்ன பயன் அஜித்திற்கு. காதல் மன்னன் வெளி வந்து நல்ல யூத் அப்ரோச் இருந்தபொழுது பின் வந்த இப்படம் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்து இருக்கும்.(அஜித் அவர்களை பாடல்கள் மூலமாக ரசிக்க தொடங்கிய காலம் இவ்வருடம் 1998 தான் காதல் மன்னன் பாடல்கள் பட்டைய கிளப்பியது எஸ்.பி.பி குரலில் ஆனால் விஜய் நல்ல காதல் அம்சம் உள்ள வெற்றி படங்களாக தொடர்ந்து ஹிட் கொடுத்து கொண்டே இருந்தார்)


தீனா-ப்ரெண்ட்ஸ் (2001)


ரஜினி-கமல் அடுத்து  அஜித்-விஜய் என்று பேச்சு துவங்கிய நேரம், காதல் படங்களின் நாயகனாகவே வெற்றி தந்தும் அதையே தொடர்ந்து கொண்டு  இருந்தார் விஜய் அப்படி காதலும் , நட்பும் என்று செண்டிமெண்டோடு நகைச்சுவை  பெரிதும் இடம் பெற்று வெளிவந்த ப்ரெண்ட்ஸ் மிக பெரிய வெற்றி பெற்றது அதிலும் வடிவேலு காமெடி பெரும் பங்காற்றியது. அஜித் அவர்கள் அமர்க்களம் படத்தின் வெற்றி மூலமாக ஆக்ஸன் படங்களில் அடிவைக்க தொடங்கினாலும் தீனா படம் தான் அவரை மாஸ் ஹீரோவாக கொண்டு சென்றது காதல் மன்னன் அஜித் தல அஜித் ஆனார். அஜித் படத்தில் அணிந்து வரும் தேள் பொருத்திய செயின் சாலையில் செல்லும் பெரும்பாலான இளையோரின் கழுத்தில் காண முடிந்தது. அதகளம் புரிந்து கொண்டு இருப்போர்கள் அஜித் ரசிகர்கள் என்று கூறுவதை மறுக்க முடியாது அப்பொழுது.

வில்லன் -பகவதி (2002)


அஜித் அவர்கள்  வித்தியாச முயற்சி , காதல்  , கமெர்சியல் என்று அனைத்து விதமான படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் பெரும்பாலும் இளையோர்கள் தான் குடும்ப ரசிகர்கள் நடுநிலை ரசிகர்களை அவரால் கவரவே முடியவில்லை. அவரின் வெற்றி படங்களும் ரசிகர்களை நிறைவு கொள்வதாகவே அமைந்தது. ரெட் ,ராஜா என்ற தோல்வி படங்கள் கொடுத்து இருந்த சமயத்தில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது வில்லன். இவரின் நடிப்பும் பேசப்பட்டது எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது.ஆனால்  பகவதி திரைப்படமோ விஜய் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்து நல்ல கமெர்சியல் ஹீரோ அந்தஸ்த்து பெற முயற்சி செய்து கொண்டு இருந்தவருக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது.

திருமலை -ஆஞ்சநேயா (2003)


அஜித்-விஜய் என்ற பேச்சு பயங்கரமாக இருந்த சமயம் பல கைகலப்புகள் எல்லாம் வழக்கமாக இருந்தது. அஜித் நல்ல கமெர்சியல் நாயகான இருந்து வல்லரசு என்ற வெற்றி படம் எடுத்த இயக்குனர் அவரின் ஆஞ்சநேயா படம் பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளிவந்து மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் விஜய் அதுவரை தேடி கொண்டு இருந்த கமெர்சியல் ரூட் பக்காவாக திருமலையில் செட் ஆனது வெற்றி படமாக அமைந்தது.இப்படங்களுக்கு பின் விஜய் ஏற்றமே எல்லோர் மத்தியிலும் குழந்தைகள் , பெண்கள் என்று ஆனால் அஜித்திற்கு ரசிகர்கள் குறையவும் இல்லை இளையோர்களின் மத்தியில் பெருகி கொண்டு தான் இருந்தனர் தோல்வி படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தாலும்.

பரமசிவன் - ஆதி (2006)


அதுவரையில் சில வருடங்களாக படங்களில் (ரெட், ஜி ,அட்டகாசம்,ஜனா ) உடல் உபாதைகளால் உட்கொள்ளும்  மருந்துகளால் உடற்பெருகி காட்சி அளித்து கொண்டு இருந்த அஜித் அப்பொழுது நடித்து கொண்டு  இருந்த வரலாறு  பின் நடிக்க இருந்த நான் கடவுள் படத்திற்காகவும் உடல் இளைத்து இருந்த சமயம் பாலாவின்  தயாரிப்பில்  நடித்த படமே பரமசிவன் தோல்வி முகமாய் இருந்தவருக்கு இப்படம் அவரை இளமையாக கண்டவிதத்தில் & நீண்ட நாட்களுக்கு(தண்டுவட ஆபரேஷன் ) பிறகு பைக் சாகசம் கண்ட ரசிகர்களுக்கு  அவரேஜ் படமாக தான் போனதே  தவிர  நல்ல ஒரு வெற்றி படமாக அமையவில்லை. விஜய் அவர்களோ கில்லி எனும் மெகா வெற்றியில்  தொடங்கி மதுர , திருப்பாச்சி ,சிவகாசி என்று  மிக பெரிய இடத்தில் இருந்தவரை தன் அப்பாவின் தயாரிப்பில் திருமலை என்ற திருப்புமுனை படத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆதி படுதோல்வி அடைந்தது.

ஆழ்வார் -போக்கிரி (2007)


வெற்றிக்காக நான்கு வருடங்கள் காத்திருந்த அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்கு வராலறு என்ற  மிக பெரிய வெற்றியை  கொடுத்து நான் கடவுள் என்ற படத்தில் இருந்து அஜித் விலகி பின் புதுமுக இயக்குனரின் படைப்பில் (ப்ளீஸ் திட்டிடாதீங்க) வெளிவந்த ஆழ்வார் மெகா  தோல்வியை  சந்தித்தது. போக்கிரி படமோ விஜய்க்கு இன்னுமொரு கில்லி வெற்றி போல அமைந்தது. அஜித்-விஜய் என்ற நேரடி  போட்டியில் இராண்டாம் முறை திருமலைக்கு பிறகு விஜய் அருமையான வெற்றி பெற்றார்.


அதை  தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக போகின்றது. போக்கிரி பிறகு விஜய் இறங்குமுகவே தொடர்ந்தார் வேட்டைக்காரன் எனும் அவரேஜ் படம் வரை, விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு பலமாக ஒலித்தது நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தர தொடங்கி விஜய்க்கு சோதனை  காலமாகவே இருந்தது காவலன் வெளியாகும்  வரையில் பின்னரும் அவரேஜ் படங்களாக தொடர்ந்து நண்பன் படத்தில் நிமிர்ந்து துப்பாக்கியில் மீண்டும் அதே உயரம் சென்றவரை தலைவா கீழே தள்ளிவிட்டது.  எப்பொழுதும் சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றாலே விஜய்க்கு பெரிய வெற்றி   தான்  அதே  நம்பிக்கையில்    தான்  அவர்களும் நாமும் இருக்கின்றோம். படத்தின் முன்னோட்டங்களை காணும் பொழுது எந்த ஒரு  வித்தியாசமும்  தோன்றவில்லை அக்மார்க் விஜய் படம் தான் போல என்ன முந்தைய பொங்கலுக்கு ஆதி போலா இல்லை போக்கிரி போலாகுமா என்று தான் பார்க்க வேண்டும். 

ஆனால் அஜித் பில்லா வெற்றிக்கு பிறகு எத்தனை தோல்வி  படங்கள் தந்தாலும் கிங் ஒப் ஒபெநிங்  என்று அழைக்கபட்டார். தோல்விகள் தொடர்ந்தாலும் எந்த விநியோகஸ்தர்களும் நஷ்ட ஈடு கேட்டு பேட்டி தரவில்லை.மங்காத்தாவின் வெற்றி அவரின் மாஸ் அந்தஸ்த்தை ஆணித்தரமாக உறுதி செய்தது    விஜய் அரசியலில் காலுன்றுவது போல அணிலாக செயல் பட தொடங்கிய நேரம் அஜித்  ரசிகர் மன்றங்களை களைத்த பின் பெற்றதே மங்காத்தா  வெற்றி பின்   தொடர்ந்த பில்லா 2 தோல்வி என்றாலும் முதல் வார  கலெக்சன் ஒபெநிங் அதற்கு நிகர் இல்லை வரிசலுகை அற்று. வெளிவந்த  ஆரம்பம் கூட நல்ல வசூல் தான் அந்த நிலையோடு வெளியாக போகும் வீரம் அவரேஜ் ஆக இருந்தால் கூட தப்பித்து கொள்ளும்.

ஜில்லா- விஜய்க்கு அவசியம்  தேவையான முக்கிய வெற்றி 

வீரம் - தொடர் வெற்றி என்ற ரீதியில் தேவையான வெற்றி 

பின் குறிப்பு :

1. ப்ரெண்ட்ஸ் - தீனா படங்கள் முதல் நான் பார்த்ததை கொண்டே குறிப்பிட்டு உள்ளேன். அதற்கு முன் உபயம் விக்கி.

2. யாருக்கும் சாதகமா எழுதலை அப்படி உண்மை அல்லாதவற்றை எழுதி இருந்தால் குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன். 

Monday, 11 November 2013

முன்னோட்டம் என் பார்வையில் இரண்டாம் உலகம்

திரைப்படத்தின் முன்னோட்டம் என்று கூறுவதைவிட வரபோகும் படத்தின் என் கருத்து என்று கூறிவிடுகிறேன், பரிசோதனை முயற்சி என்பதை முயற்சியாக மேற்கொள்ளாமல் அதை ஒரு கலையாகவே மேற்கொண்டு அதை வெற்றி தோல்வி என்று அடிப்படை ஏதும் இல்லாமல் ஒரு விவாத தலைப்பாக ஏற்படுத்தும் இயக்குனர் செல்வராகவன், அடுத்து நமக்கு  தரகூடிய தலைப்பு  இரண்டாம் உலகம்.


இரண்டாம் உலகம் இப்படத்திற்காக செல்வராகவன் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் மெனகெட்டு சிற்பியாக இப்படத்தை செதுக்கியது அனைவரும் அறிந்ததே. ஆயிரத்தில் ஒருவன் என்று தற்காலத்தில் தமிழ் சினிமாவில் பாண்டஸி , நம் வரலாற்றில் அதன் வழியாக  கொட்டி கிடக்கும் கற்பனைகளுக்கு உயிர் ஊட்டிய  முயற்சியை  தொடங்கிவைத்த பெருமை இவரையே சாரும்,அது  அந்த படத்தின் வெற்றி தோல்வி என்று பேச்சை தவிர்த்து பார்த்தால் புரியும். அவ்வளவு  எளிதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒதுக்கி தற்கால தமிழ் சினிமாவை பற்றி பேசவும் விவாதித்திடவும்  முடியாது. ஒரு நேர்காணலில் செல்வராகவனிடம் நீங்கள் எடுத்த படத்தில் எந்த படத்தை ஏன் எடுத்தோம் என்று நினைத்தீர்கள் ??? என்ற கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி அடுத்த நொடியில் செல்வா கூறியது ஆயிரத்தில் ஒருவன் அருகில் அப்பொழுது இருந்த அவர் மனைவி கீதாஞ்சலி கூட அதிர்ச்சியில் சற்று தடுமாறுவது நன்றாக தெரியும்.

 அந்த நேர்காணலை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் (8.33ல் அக்கேள்வி கேட்பார்கள் )



இப்படி கூறியதால்  செல்வராகவன் அவர் மனதில் அப்படத்தால் எந்தளவுக்கு சொல்ல முடியாத உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்று புரிந்துகொள்ள முடியும்.ஆனால் அப்படம் என்னை போன்ற பலருக்கு செல்வராகவன் என்ற இயக்குனரின் மேல் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதையும் நிச்சயம் குறிப்பிட்டு தான் ஆக வேண்டும். அதனால் தானோ என்னவோ இல்லை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ மிக தைரியமாக இரண்டாம் உலகம்  படத்தின் முதல் முன்னோட்டம் கொண்டு இப்பொழுது வரும் முன்னோடங்களில் கூட,

 FROM THE MAKERS OF "ஆயிரத்தில் ஒருவன்"


 என்று கிரெடிட் தந்து,  ஏன் படத்தில் கூட  நிச்சயம் வரும் போல,  என்னை போன்ற அப்படத்தை கொண்டாடியவர்களுக்கும் அதில் தங்கள் உழைப்பை கொட்டியவருக்கும் நன்றி தெரிவித்தது போல செய்துவிட்டார் செல்வராகவன்.

எல்லோரும் வழக்கமாக செல்வாவின் படங்களை எதிர்வினை ஆற்றும் பொழுது இவருக்கு காதல் களம் கொண்ட கதைகள் நன்கு  வருகின்றது அதை விடுத்து ஏன் வேறு களங்களில் முயற்சி செய்கிறார் என்று கூறுவார்கள் அதில் ஒரு துளி கூட உடன்பாடு கிடையாது எனக்கு எப்பொழுதும்  , அப்படி அவர் தொடங்கிவைத்த புதுப்பேட்டை  , ஆயிரத்தில் ஒருவன் என்று எவராலும் அதை போன்ற படைப்புகளை விஞ்சவோ  தொடரவோ  முடியவில்லை, ஆரண்ய கண்டம் மட்டும் விதிவிலக்கு.இதோ அவரே தொடர்ந்து விட்டார் எல்லோரும் சொல்லுவது போல காதல் களம் அதில் இரண்டு உலகம் என்று அவர் நிகழ்த்த போகும் மாயயை பெரும் எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கின்றது.

படத்தின் முன்னோட்டத்தை காண கிளிக்கவும்


ஆர்யா நிச்சயம் இதுவரை நாம் கண்டதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆர்யாவை காணலாம் அது உடல் மொழி கொண்டு நடிப்பில் வரை புதுமையை காண நிறைய வாய்ப்புள்ளது. அனுஷ்கா என்ற நடிகையை தமிழில் எவரும் பயன்படுத்தியது இல்லை, செல்வாவின் படத்தில் நாயகிக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் தான் அதை சொல்லியா  தெரிவிக்க வேண்டும் ஆக இதில் நிச்சயம் அனுஷ்காவின் அடுத்த பரிணாமத்தையும் காணலாம்.

இவைகளை தாண்டி முன்னோட்டத்தை காணும் பொழுது வழக்கமான செல்வாவின் பளிச் என்பது நிறையவே வெளிபடுகின்றது உதாரணம் அனுஷ்கா காலை தூக்கி ஆர்யா மேல் போடுவது, நாயகன் நாயகியை விட  கொஞ்சம்  மென்மையாகவும் வெளிக்காட்டுவது, காதலில் உருகுவதும் வருந்துவதும் என்று செல்வாவின் இந்த வருகை அழுத்தமாக பதியவேண்டும் என்றே நினைத்து கொள்ளுகிறேன்.

செல்வராகவன் என்ற இயக்குனரின் மற்றும் இயக்குனரை நம்பி இதை தயாரிக்கும் பி.வி.பியும் மற்றும் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் மிக சிறந்த வெற்றியை பெற்று தர வேண்டும் இரண்டாம் உலகம்.

நவம்பர் 22 முதல் "இரண்டாம் உலகம்"


Tuesday, 15 October 2013

சுட்ட கதை - முன்னோட்டம் என் பார்வையில்




பெரும்பாலும் இந்த வருடத்தில்  கலை ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது திரைப்படங்களின் வருகைகள் ஆகஸ்ட் மாதம் வரையில் அதன் பிறகு ஆகஸ்ட் 15 அன்று வெளியான ஆதலால் காதல் செய்வீர் முதல் தங்கமீன்கள் , 6 மெழுகுவர்த்திகள் , மூடர் கூடம் , ஓநாயும் ஆடுகுட்டியும் என்று எதிர் விமர்சனகளை விஞ்சி வசூலில் இவைகளில் சில வெற்றி பெற்றும்  பெரும்பாலனோர் நெஞ்சில் பதிந்தது இப்படங்கள் அந்த வரிசையில் அப்பொழுதே ஆகஸ்ட் மாதமே வெளிவரவேண்டிய இப்படமும் பெரும் இடையுறுக்கு பிறகு வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகின்றது. "சுட்ட கதை" .

ஒரே வாரம் அக்டோபர் 25க்கும் தீபாவளி திரைப்படங்களின் வருகைக்கும் ஆன இடைவெளி. வெறும் 7 நாட்களை நம்பி இக்கால சூழலில் திரைரசிகர்களை மட்டுமே நம்பி வெளிவரும் இப்படத்தை , எல்லோரும் நிச்சயம் திரை அரங்கில் பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டும்.இதுபோன்ற புது முயற்சி கொன்ற திரைப்படங்களை வரவேற்கும் பட்சத்தில்  , நம் திரை உலகமும் மென்மேலும் வளரும் புது புது வகைகளான திரைப்படங்களையும் நாம் காண முடியும்.

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் வெளிவர இருக்கும் இப்படத்தின் "சுட்ட கதை " முன்னோட்டம் காண கீழே உள்ள இணைப்பை காணுங்கள்

http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o

இந்த முன்னோட்டத்தை கண்ட பொழுதே எனக்கு இப்படத்தின் மேல் ஓர் எதிர்பார்ப்பு வந்து விட்டது. புதியவர் சுப்பு அவர்கள் எழுதி இயக்க ஏனைய அனைத்து திரை மறைவு உழைப்பை தந்தவர்களும் புதியவர்களே . இப்படமே அவர்களுக்கு முகவரியாய் இருக்க போகின்றது. முதன்மை காதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும் இப்படமே நல்ல முகவரியாய் இருக்க போகின்றது.

 கதை என்று என்னால் யூகிக்க முடிந்த வரையில் கொலை வழக்கை விசாரிப்பது அதை பற்றிய கண்டு பிடிப்பு என்றே முன்னோட்டம் காண்பதில் என் பார்வைக்கு புரிபடுகின்றது. அதுவும் அக்கொலை சுட்டு கொல்லப்பட்டு இருக்கும் போல அதனாலோ என்னவோ சுட்ட கதை என்று தலைப்பு இவ்வாறே யூகிக்கின்றேன். நிச்சயம் இது முது மாதிரியான முயற்சி என்பதை மேற் கூறிய என் கருத்தையும் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தலுமே புரிந்துவிடும்.


இவைகள் விடுத்து இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை பார்க்கும் பொழுதே என் நம்பிக்கை நிச்சயம் பொய்த்தல் ஆகாது  என்றே தோன்றுகிறது . நாசர் , ஜெயப்ரகாஷ் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் , எம்.எஸ் . பாஸ்கர் இவர்களின் தேர்வும் இவர்களின் முன்னைய திரைப்படங்களின் பங்களிப்புகளும் பெரும்பாலானவை எல்லோராலும் போற்றபட்டவையே. ஆகையாலே என்னால் உறுதியாக இப்படத்தை நம்ப முடிகின்றது.

இதுபோன்ற புதுவகையான  திரைப்படங்களை நாம் எப்பொழுதும் வரவேற்க மறந்து பின் வழக்கம் போல வெட்டி கதை பேசுவதை விடுத்து , சுட்ட கதை படத்தையாவுது திரை அரங்கில் சென்று கண்டு புதியவர்களின் முயற்சிக்கு கைகொடுப்போம் அதுவும் அக்டோபர் 31 தலயின்  ஆரம்பம்  வெளியீடு என்று குறிக்கொண்டு இருக்கும் நிலையில் வெறும் ஏழு நாட்களை நம்பி நம்மை போன்ற திரை ரசிகர்களை நம்பி வெளியீட படும் "சுட்ட கதை" படத்தை நிச்சயம் வெற்றி படம் ஆக்க வேண்டும்.

" நம்பி வாங்க நிச்சயம் நிறைவா போவீங்க"