Friday 17 October 2014

கதை உண்மையாகுமா ????--3


கலவியில் எனக்கு மிகவும் பிடித்தது இதழோடு இதழ் சேர்த்து நீண்ட நேரம் பரிமாறிகொள்ளும் முத்தமே. அதை முதல் முறை நான் அனுபவிக்கும் போது பரவசம் கொண்டேன் கிட்டத்தட்ட என்று அல்லாமல் உச்சமே அடைந்தேன். அப்பொழுது என் உடல் சிலிர்த்தது அதை அவளும் உணர்ந்ததாலோ என்னவோ முத்தத்தை விடுவித்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

"ஹே என்ன இதுக்கே ஃப்ளாட்டு"

"வேற என்ன செய்யுறது கண்ட்ரோல் பண்ண முடியலையே"

"நீ உண்மைலயே பர்ஸ்ட் டைம் தான் அருண்"

"தமிழ் நீ நம்ப மறுத்தாலும் உண்மை அது தான்"

"ஓகே ஓகே போ க்ளீன் பண்ணிட்டு வந்து சாப்பிடு,அப்படியே வச்சிருக்க பாரு"

"எனக்கு போதும் தமிழ், நீ கொடுத்த முத்தமே இன்னும் நாலு நாளைக்கு பசிக்காது"

"ஹா ஹா ஹா இன்னும் நிறைய இருக்கு இதுக்கே இப்படினா ??? "

"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே ??? "

"கேளு. பண்ணுறது தப்பு,நினைப்பு மட்டும் சரியா இருந்தா என்ன? தப்பா இருந்தா என்ன? அருண்"

"இதுவரைக்கும் எத்தனையோ பேர பார்த்து இருப்ப எப்போவாச்சும் ஏன் இப்படி இருக்கிறோம்னு பீல் பண்ணி இருக்கியா. ஐ மீன் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?"

"இதில் என்ன புரியல இத்தனை பேர் கூட படுக்கிறேயே வெட்கமா இல்லையானு கேட்கிற அப்படி தான ??? "

"ஹே சாரி தமிழ் மன்னிச்சிடு நான் அப்படி சொல்ல வரல. உன் இடத்தில் இருந்து உன்னோட வலியை உணர முயற்சி பண்ணுறேன். அதுக்கு நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்"

" வேணா அருண்"

"........"

சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. தேவை இல்லாமல் ஏன் இதை கேட்டோம் என்று நினைத்து கொண்டேன்.ஆனாலும் அவளுக்கு நிச்சயம் ஆறுதலை தந்து இருக்கும், அதுவே அவளுடைய எண்ணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டால் இன்னும் அவளுக்கு நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. மௌனத்தை அவள் முடித்தாள்.

"அருண் என்னோட வயசு 21, அஞ்சு வருஷம் முன்ன இந்த தொழிலுக்கு வந்தேன்னு சொன்னேன். அப்போ பார்த்துக்க 16 வயசுல,எனக்கு என்ன தெரிஞ்சிருக்கும் அப்போ??? இல்ல இப்போ மட்டும் என்னத்த தெரிஞ்சிக்கிட்டேன் ??? ஆண்களின் அளவுகளும், எண்ணங்களும், வக்கிரங்களும், வாதைகளும் தான் தெரிஞ்சிருக்கு."
 
"...."

"சாரி உன்னை பற்றி சொல்ல வரலை,ஆனா இப்பவும் உன் மேல நம்பிக்கை இல்லை. ஐ மீன் ஜஸ்ட் என்னை நீ இம்ரஸ் பண்ண தான் நடிக்கிறியோனு தோணுது தப்பா நினைக்காத, ஏன்னா என் நிலை அப்படி அருண்"

"புரியுது தமிழ் "

"ஒவ்வொரு நாளும் எவன் கூடயாவது படுத்து,படுத்து, எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்கிறப்போ கூட துணை கேட்கும். அதே போல தினமும் எவன் கூடயாவது படுத்து இருக்கிறப்போ எதாச்சும் ஒரு நாள் தனியா இருக்க மாட்டோமான்னு தோணும். பாரு இது தான் எங்க வாழ்க்கை"

"என்ன சொல்லுறதுன்னு தெரியலபா "

"அதுவும் பீரியட் டைம்ஸ் இருக்கே ஐயோ நரக வேதனை. அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியல அருண் ..... வேதனையே அப்படின்னு இருக்கிறப்போ எந்த தேவுடியா பயலாவுது வந்து இவ தான் வேணும்னு டார்ச்சர் செஞ்சி புரிஞ்சிக்காம தெரிஞ்சே அழைச்சுட்டு போயிடுவான். அப்புறம்....."

" வேணாம் வேணாம் தமிழ் ப்ளீஸ் ...."

இந்தமுறை அவளின் அழுகை மிக சத்தமாக ஒலித்தது. என் மடியில் முகத்தை புதைத்து கொண்டு அழுகிறாள். அப்பொழுது தான் அவளின் முதுகை பார்க்கின்றேன், ஐயோ என்னது இப்படி இருக்கின்றதே????? என்னை கட்டுபடுத்த இயலாமல் கண்ணீர் வந்துவிட்டது. அப்பொழுது என்னுடைய இதயத்துடிப்பை உணர்ந்தது நான் மட்டும் அல்ல அவளும் தான். என் கண்ணீர் அவளின் முதுகை தொட்டதும் அவள் எழுந்து விட்டாள்.மீண்டும் தனித்து சென்று சுவர் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

" அருண் சாரிபா நீயே சந்தோசமா இருக்க தானே வந்த நான் உன்னை டென்ஷன் ஆக்கிட்ட போல"

அவள் கேட்டது என்னவோ எனக்கு காதில் விழுந்தாலும், எனக்கு அவள் முதுகில் இருந்த காயமே தெரிகின்றது. வரி வரியாக சிவப்பு நிறத்தில் இரண்டு பக்கங்களிலும் இருந்தது. எப்படி அது உருவாகி இருக்கும். இந்த படத்தில் வரும் ட்டார்ச்சர் செக்ஸ் என்பது எல்லாம் உண்மையாவே இருக்கின்றதோ. அப்படி வக்கிரமான எண்ணத்துடன் இருப்பவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ?. அனுபவிக்க தான் பெண் சுகம் என்பதெல்லாம் இவர்களிடத்தில் இல்லையோ. ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்கி அவளை எப்படி துன்புறுத்த மனம் தோன்றுகிறது. அந்த தேவுடிய பசங்களுக்கு பெண்மையின் அர்த்தம் ஏன் விளங்காமல் போனது. விலை மாதுவாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ??? ஒரு நொடி அவள் நிலையில் இருந்து ஏன் யோசிக்க நினைப்பதில்லை??? இப்படி என்னுள் தோன்றிய காட்டமான எண்ணங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற தோன்றியது.

"தமிழ் எனக்கு மனசு சரி இல்லை நான் கிளம்புறேன். நீ வருத்தபடுவது போல எதாவுது நான் நடந்து இருந்தால்.தயவு செய்து என்னை மன்னித்துவிடு தமிழ் ...!!! "

"அருண் ஏன் என்ன ஆச்சு ப்ளீஸ் போகாத "

"இல்ல தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இங்க இருந்தா நான் அழுதிடுவேன்னு பயமா இருக்கு ப்ளீஸ்"

"அருண் நீ போனா எனக்கு தான் பிரச்சனை ப்ளீஸ் புரிஞ்சிக்க கஸ்டமரா விட்டுட்டேன்னு என்ன டார்ச்சர் பண்ணுவாங்க " கலங்குகிறாள் அழகு தமிழ்.

என்ன செய்வது என்ற யோசனையில் என்னிடம் இருந்த சிகிரெட் காலியானது. அவளிடம் அருகே சென்று அவளை பெட்டில் படுக்கவைத்து விட்டு.

" தமிழ் நான் போகவில்லை , நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ஜஸ்ட் நான் கடைக்கு போயிட்டு வரேன் ஓகே "

"நானும் வரேன் அருண் "

"வேணாம்பா சத்தியமா நான் போகமாட்டேன் நீ தூங்கு, நான் டிரிங் பண்ணபோறேன் ஸோ ஒன்லி சாரி "

"ஓகே இங்க வந்து சாப்பிடு ப்ளீஸ் வெளியவேணாம் "

"ஓகே உனக்காக "

அவளிடம் என்ன இனி பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. அவள் தூங்கிவிட்டால் போதும் என்றே தோன்றியது. இப்படியே சென்றுவிடலாமா என்று கூட நினைத்தேன், பாவாம் அவள் இதுவால் ஏதாவது பிரச்சனை வந்து இன்னும் கஷ்டபடுவாளே. மீண்டும் அறைக்கே சென்றேன் இம்முறை எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்கின்ற மதுவுடன். பின்னர் மதுவோடு நான்கு மணி நேரம் உரையாடி கொண்டு இருந்தேன். தமிழ் விளித்து விட்டாள். அருகே வந்து ஆதரவாக என்னை அணைத்தாள்.

"வா அருண் "

" வேணாம் தமிழ் மப்பு ஓவரா இருக்கு நா கிளம்பலாமா"

"அருண் நீ ஒன்னுமே செய்யலடா "

"ப்ளீஸ் என்னை கம்ப்பெல் பண்ணாத சாரி தமிழ்"

அவளிடத்திலும் எதுவும் வார்த்தை இன்றி கிளம்ப ஆயத்தமானாள். அவள் கையில் சில பணத்தாள்களை திணித்து விட்டு அவளிடம் இருந்து விடை பெற்றேன். அவள் மேல் இருந்த அன்பினால், மீண்டும் அவளை சந்திக்க கூடாது என்றே நினைத்து கொண்டு சென்றேன்,

ஆனால்

சில நாட்களுக்கு பிறகு அவளை மீண்டும் சந்திக்க சென்றேன்.....

                                                                                                                                            தொடரும்

2 comments:

  1. அழகாக போய்க் கொண்டிருக்கிறது... its nice... awaiting next part...

    ReplyDelete