Sunday 20 October 2013

முதல் முயற்சியும் என்னுடைய தேர்வும் -1


எப்பொழுதும்  நான் நினைக்கும் & எதிர்பார்க்கும்  ஒரு படம் வெளியாகி அதை குறைந்தது 3 நாட்களுக்குள் எப்படியாவது பார்த்தால் தான், என் மனம் நிம்மதி அடையும் , அதற்காக எந்த ஒரு படத்தையும் என்று கூற முடியாது வெளியாகும் படங்களின் தன்மைகளை பொருத்து  அமையும்.
 வெளியாகும் முன் தமிழ் திரைப்படங்களை என்னளவில்  ஒரு மதிப்பீடு செய்து கொள்ள முடியும், அது அந்த படங்களின் தொழில்நுட்பம் புரியும் நபர்களை முதன்மையாக கொண்டு முக்கியமாக இயக்குனரின் முன் வெளியான படங்களை கண்டு. ஆனால் இவைகளை தாண்டி புதிய படைப்புகளில் அதை வரவேற்க மிகவும் ஆர்வம் கொள்வேன் பல படங்களை அது போல என் விவரம் எட்டி நானாக முதல் நாள் சென்று பல படங்கள் பார்த்துள்ளேன், அவைகளில் பெரும் வெற்றி பெற்றும் உள்ளது (சுப்ரமணியபுரம் , வெண்ணிலா கபடி குழு , வெயில் .....) பலர் சில படங்களை  அப்பொழுது விட்டு இப்பொழுது கொண்டாடி கொண்டும் உள்ளனர் (சில படங்கள் மொக்கை வாங்கியும் உள்ளேன் ) . குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சமீபத்தில் அவ்வாறு செய்து நான் முதல் நாள் கண்ட படம் மூடர் கூடம்  அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் கண்ட ஆரண்யகாண்டம் . இந்த இரண்டு படங்களையும் ஏன் குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால் இந்த படங்கள் தமிழ் திரைஉலகின் முத்துகள் வேறு தளத்திற்கு கொண்டு சென்றவை. முழுக்க முழுக்க புதுமுகங்களால் புது முயற்சியில் எடுக்கப்பட்டு  புதிய அனுபவம் தந்தது என்னை சிறிதும் ஏமாற்றம் அடையசெய்யவில்லை. இப்படிப்பட்ட தமிழ் திரை உலகின் பெருமைமிகு படைப்புகளை திரை ரசிகனாக முதல் நாள் கண்டேன் என்பதில் எனக்குள் ஓர் பெரும் மகிழ்ச்சி.

அதுபோலவே இப்பொழுது புது முயற்சி கொண்டு வெளிவர போகும்
"சுட்ட கதை" படமும் என்னுடைய எதிர்ப்பார்ப்பில் நிச்சயம் குறைவைக்காது என்றே நம்புகிறேன்.

ஆரண்யகாண்டம் , மூடர் கூடம் எவ்வாறு மதிப்பீடு செய்து  சென்றேன் என்றும் , இப்பொழுது சுட்ட கதை என்ன எதிர்பார்ப்பில் உள்ளேன் ??? ஏன் ??? என்று உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஆரண்யகாண்டம்  -

ஆரண்யகாண்டம்  படம் வருவதற்கு முன் அந்த படத்தை பற்றி எந்தவொரு நுட்பமான  செய்தியும்  தெரியாது. யுவன் இசை , சரண் தயாரிப்பு இவ்வளவு தான் தெரியும்.யுவனின் இதுபோன்ற முதல்முறை ஒரு இயக்குனர் உடன்  பணியாற்றும் பொழுது மிக அருமையாக தன்னால் ஆன முழு உழைப்பையும் தந்து இருப்பார். அவரின் பல வெற்றி படங்களின் இசைகளை சர்வசாதரணமாக இதுபோல வரும் புது இயக்குனர்களின் முதல் படத்தில் கண்டுவிடலாம், (பதினாறு , காதல் சொல்ல வந்தேன் (யுவனிடம் முதல் முறை) , பானா காத்தாடி, தீராத விளையாட்டு பிள்ளை , வாமணன், சிவா மனசுல சக்தி ) இந்த படங்கள் பெரும்பாலும் முற்றிலும் இவர்களின் முதல் படைப்பு இதில் படம் தோற்றாலும் , யுவனின் இசை வெற்றியே ஆகையாலே யுவன் இசை என்றால் ஓர் எதிர்பார்ப்பு என்னிடம் உண்டு. இது முதல் காரணம்.


 ஆரண்யகண்டம் படத்தை காண வேண்டும் என்பதற்கு.
இதை போலவே தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்றால் அவரின் படங்களும் அதுவரையில் எதிர்ப்பார்ப்புடன் தானே இருந்தது , இதே இந்த இருவர்களை  நம்பி சென்று ஏமாந்தேன் (அதிலும் யுவனின் இசை நிறைவு செய்தது குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படம் ).  அதற்காக எல்லாம் ஒரு படைப்பாளியை தவிர்த்து விட கூடாது என்பது என்னுடைய கருத்து.

இவைகளை தாண்டி இப்படத்தின் முன்னோட்டம் கண்டவுடன் முடிவே செய்து விட்டேன் , அதில் அத்தனை ஒரு புதுமை இயக்குனரின் வெளிப்பாட்டை  முன்னோட்டத்தில் கண்டவுடனே பிடித்து விட்டது . அவரின் திரை மொழி அவ்வளவு ஈர்த்தது என்னை.
 ஆரண்யகாண்டம் பற்றிய என் சிறு பார்வையை இந்த இணைப்பில் காணலாம்  http://arjiththala.blogspot.sg/2013/08/blog-post.html

மூடர் கூடம் -


இந்த படமும் ஆரம்பம் முதல் பசங்க பாண்டிராஜ் வெளியீடு என்றே விளம்பரபடுத்தியதில் தான் நான் இதை பின் தொடர்ந்தேன். அதுவரையில் வந்திருந்த பாண்டிராஜின் அனைத்து திரைப்படங்களையும் முழுமையாக உள்வாங்கி இருந்தேன் , வம்சம் படத்தில் கூட என்னை மிக கவர்ந்தது அந்த இடத்தின் நேடிவிடியை அப்படியே அச்சு அசலாக காட்டி இருப்பார், அது உண்மை என்றும் பல நண்பர்கள் கூறும் போதே ஆச்சிரியம் அடைந்தேன். அதனால் இவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும் என்று மனதார நம்பினேன்.

என்னுடைய அந்த நினைப்பை அப்படியே இன்னும் அதிகமாக்கியது படத்தின் முதல் முன்னோட்டம் அதில் வேறு எதுவும் இடம் பெறாது மூடர் கூடம் என்றால் என்ன என்று ? பொது மக்களிடம் கேட்க பட்டு இருக்கும் அதுக்கு அவரவர் சொல்லும் பதில்கள் இன்றைய நம் ஊரின் தமிழ் மொழியின் நிலையை நமக்கு கூறாமல் நம்  பொட்டில் அடித்தது போல இருக்கும். அடுத்து அடுத்து இதே போல வந்த முன்னோட்டங்களும் மொழிபற்றை வலுவாக கூறுவது போல இருந்து இறுதியில் அவர்கள் ஏதோ திட்டம் போடுறாங்க அது என்ன போல வைத்து அதில் இடம் பெரும் வசன உச்சரிப்பு அப்பொழுதே ஒரு வித புதுமையை உணர்த்தியது.

படமும் எதை நம்பி போனேனோ அதை வட்டியும் முதலுமாக எனக்கு தந்தது , என் ரசனையின் தன்மையை இன்னும் மெருகு ஏற்றியது.

மூடர் கூடம் பற்றிய என் விரிவான பார்வையை இந்த இணைப்பில் காணலாம் http://arjiththala.blogspot.sg/2013/09/blog-post_14.html


சுட்ட கதை -


சுட்ட கதை வரும் 25ம் தேதி வெளியாகின்றது , இப்படம் முழுக்க புதியவர்களின் முயற்சி தான் மேற்கூறிய படங்களை போலவே ,படத்தின் மேகிங் கூட புதியதாக இருக்கும் என்று தெரிகிறது இவர்களின் முன்னோட்டம் மற்றும் விளம்பரம் செய்யும் யுக்தி இவைகளை கண்டால்.

இப்படத்தின் முன்னோட்டத்தை காண இந்த இணைப்பை காணுங்கள்
http://www.youtube.com/watch?v=MNp8YHueR_o
http://www.youtube.com/watch?v=E1Pcxlh7kNk
http://www.youtube.com/watch?v=7Ymsp4edrjY
http://www.youtube.com/watch?v=NkzkWwlgTS8

இப்படத்தின் விளம்பர முறையை காண இந்த இணைப்பை காணுங்கள்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=zTfa6HHEPJQ

பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் தொலைகாட்சிகளில் கூவி கூவி விற்கும் ஆண்மை மருந்து என்று அலப்பறை செய்வோரை மேற்கண்ட விடியோவில் கலாய்த்து எடுத்து விட்டனர்.இதுவே இப்படி என்றால்  படத்தில் இது போல இன்னும் எதை எல்லாம் துவம்சமோ , இதுவே சொல்லுகிறது இப்படத்தின் புது முயற்சியை.

இவைகளை பார்க்கும் போதே நிச்சயம் புதிய அனுபவம் தரும் என்ற நம்பிக்கை தருகின்றது ,மேலும் படத்தை பற்றி வரும் முன் செய்திகள் கூட எல்லோரையும் கவரும் விதமாகவே வருகின்றது.
விரிவான "சுட்ட கதை"யின் முன்னோட்டம் என் பார்வையில் இந்த இணைப்பை பாருங்கள் http://arjiththala.blogspot.sg/2013/10/blog-post_15.html

இது போல மதிப்பீடு செய்து நானும் இது போன்ற படங்களை  முதல் கண்டு நமக்குள் நெகிழ்ச்சி மற்றும்  மகிழ்ச்சி அடைந்து கொண்டு அதை மற்றவர்களிடம்  கொண்டு செல்கையில் வரும்  ஓர்விதமான  பெருமிதம் அவ்வளவே. நல்ல படைப்புகளை நாமும் கண்டு அதை வரவேற்கின்றோம் என்ற நப்பாசை. அதனாலே அடுத்த புது முயற்சி கொண்ட படம் என்ற நினைப்பிலும் புதியவர்களை வரவேற்க வேண்டியும் சுட்ட கதை படத்தை எதிர்பார்த்து உள்ளேன். இது போல பெரும்பாலும் முதல் படைப்பாளிகளை கண்டு பிடித்து அவர்களின் திறமையை எளிதில் உணர்ந்து விடலாம் ஆனால் வழக்கமாக நற்பெயருடன் இருக்கும் சிறந்த இயக்குனர்களை நம்பி தான் பல முறை ஏமாந்து விடுவோம். அது பற்றிய விவரங்களை பின்னர் காண்போம்.

2 comments:

  1. சுட்டகதை படம் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சுருக்கீங்களா ? படம் வர்றதுக்கு முன்னாடியே இப்படி ஒரு ஃபேன் கிடைச்சுருக்கறது தெரிஞ்சா டைரக்டர் ரொம்ப சந்தோஷப்படுவாரு..
    பின்னர் காண்போம்னா அப்போ இது தொடர்பதிவா..?? கலக்குங்க தல..

    ReplyDelete
  2. வாங்க தல, கண்டிப்பா நீங்க அந்த லிங்கை பார்த்தாலே தெரியும் , நிச்சயம் புதுமுயற்சி தான் படம் இன்னும் ரெண்டு நாள் தானே பார்த்துட்டு உடனடி பார்வை இங்க பகிர்ந்துக்கபடும்.... :)
    அப்புறம் முதல் முயற்சி படங்களை நான் கண்ட அனுபவம் , நல்ல இயக்குனரின் படங்கள் என்று மொக்கை வாங்குன அனுபவம் என்று அப்படியா வரும் நண்பா பார்த்துக்கோங்க.... நன்றி !!!!

    ReplyDelete