Saturday 21 December 2013

பிரியாணி- வெங்கட் பிரபு டயட்

எப்பொழுதுமே வெங்கட்பிரபு படம் என்றாலே எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு அதை நான் எப்பொழுதுமே நான் விரும்புவேன் , எப்படியும் கண்டுவிடுவேன் கோவா உள்பட எனக்கு பிடித்ததே ஆனால் அதில் ஓரு சூட்சமம் உள்ளது அதை இப்படத்தில் தான் உணர்ந்தேன் அதை உங்களுக்கு இறுதியில் கூறுகிறேன்.அப்படி ஒரு ஆர்வத்தில் இன்று மதியம் 12.00 மணி காட்சி காண சென்றேன் பிரியாணி ஆனால் நான் சென்று டிக்கெட் எடுக்கையில் யாரும் முன் இல்லை அதனால் என்றென்றும் புன்னகை போங்க அப்படின்னு டிக்கெட் கொடுப்பவரு சொல்ல வேற வலி இல்லாம அதை எடுத்து வர, ஒரு ஜோடி கண்ணுல தென்பட கேட்டா பிரியாணி அப்படின்னு சொன்னாங்க. அது போதுங்க அப்படின்னு டிக்கெட் மாற்றி பார்த்தேன் இன்னைக்கு பிரியாணி.

படம் தொடங்கியதில் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமாக இருந்தது பின் தேவை இல்லாத விரிவு போல இலுவையோ இழுவை இடைவேளை முன் ஒரு 15 நிமிடங்கள் வரை அப்புறம் சரியான செம்ம ட்விஸ்ட் இடைவேளை முடிந்து ஆரம்பம் ஆர்வமாக தொடங்கியது பின் வழக்கமாக இழுவை தேவை இல்லாத டீடெய்லிங்க் கடைசி 30 நிமிடங்கள் செம்ம ட்விஸ்ட் பரபர செம்ம ஆர்வம் பார்க்கும் பொழுது அங்கே வெற்றி பெற்று விட்டார் வெங்கட் பிரபு.


பிரியாணி தேடி சென்று அதனால் பெற்ற வினையே படத்தின் கதை. இந்த விஷயம் நாம படம் பார்க்கின்ற போது  30 நிமிடங்களுக்கு மேல் தான் தெரிய வரும் ஆனா அதற்க்கு முன் வந்த காட்சிகளின் முக்கியத்துவம் படத்தின் கடைசி 30 நிமிடங்களில் வெறும் முடிச்சி அவிழ்த்து நம்மக்கு புரிய வைக்கும் பொழுது கண்டிப்பாக வெங்கட் பிரபு திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

கார்த்தி தன்னுடைய பங்கை வெகு சிறப்பாகவே செய்து உள்ளார் நடனம் தவிர மற்றும் அவர் ஒரு காட்சியில் சிங்கம் சூர்யா போல  வருவது செம்ம காண்டு ஏன் தேவை இல்லாமல் அவருக்கு விளம்பரம். ப்ளே பாய்  பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி போகிறார். தன் அக்காவை கடத்தி செல்லும் காட்சியில் தன் இயலாமையை நினைத்து வருந்துவது கூட மிக நன்றாக செய்து இருப்பார். ஒரு கதாநாயகனாக தன்னுடைய வேலையை சிறப்பாகவே புரிந்துள்ளார், 3 தோல்வி படங்களை தந்து விட்ட அவருக்கு இப்படம் நல்ல ஒரு ரிலீப் தந்து இருக்கும்.

பிரேம்ஜி  இதுவரை வந்த வெங்கட் படங்களில் என்ன பாத்திரமோ அதையே செம்மையாக செய்து உள்ளார் , ஆனால் இது தான் அவருக்கு கடைசி இதற்க்கு மேல் பொறுமை காக்க நமக்குவழி  இல்லை. ஒரே முகபாவனைகள் அப்படியே தயவு செய்து மாற்றுங்கள் வெங்கட் உங்கள் தம்பி என்பதற்காக எல்லாம் பொறுத்து கொள்ள இயவில்லை. ஆனாலும் சில காட்சிகள் நான்றாக தான் இருந்தது, குறிப்பாக சிங்கம் சூர்யா வேடம் அவருக்கு அப்போ கமல் புலி வேடம் பிரேம்ஜி க்கு  அது நன்றாகவே இருந்தது மற்றும் சில காட்சிகளின் பாவனைகள்.

ராம்கி நீண்ட நாட்களுக்கு பிறகு மிக அருமையான ரீஎன்ட்ரி, தன்னுடைய வேலையை காண கச்சிதமாக புரிந்து உள்ளார். கதை இவரை மையம் கொண்டே செல்லும் இரண்டாம் பாதியில் ஆனால் இறுதியில் வரும் சஸ்பென்ஸ் செம்ம. ஹன்சிகா ஊறுகாய் அவ்வளவே செம்ம அழகு ஆனாலும் அந்த ஹோட்டல் பாட்டுக்கு வருபவர் செம்மையோ செம்ம ஒரு சாங் ஆனாலும் செம்ம. நாசர் பேசவே இல்லை ஆனாலும் படம் முழுக்க இவரை சுற்றியே. ஒரே வருத்தம் சம்பத் மற்றும் ஜெய் பிரகாஷ் இவர்களை ஏன் இப்படி வீணாக்கினார் வெங்கட் ஸோ சேட். சம்பத்தின் நண்பராக வருபவர் சரியான ட்விஸ்ட் க்கு உபயோகம் இப்படி படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே.


எனக்கு மிக பெரிய ஏமாற்றம் முதல் முறை யுவன்-வெங்கட் தோல்வியே அதுவும் 100வது படத்தில் முதல் பாடல் தவிர வேறு ஒன்றும் மைண்டில் இல்லை ஆனால் வழக்கம் போல பின்னணி  கலக்கல். அந்த டிக்கெட் வர பாடல் கூட யோசிச்சாலும் வரலை ச்சும்மா கோடான கோடி  பாடு போல வர வேணாம் , என்னமோ போங்க யுவன்.

கேமரா விறு விறு  சரவணன், வெங்கட் படம்னாலே பிச்சி எடுத்துடுவார் போல முதல் காட்சி கார் ஜம்ப் அப்போவே வாய் பிளக்க வச்சிட்டார் அப்புறம் வர அனைத்து சேசிங் காட்சிகளும் மிக அருமையாக செய்து உள்ளார்.

ஆக பிரியாணி படம் பொருத்தவரை கண்டிப்பாக பார்க்கலாம் , அதுவும் வெங்கட் படம் பிடிக்கும் என்பவருக்கு நிச்சயம் பிடிக்கும். சரோஜா பிடித்தவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும். இரண்டாம் பாதி படம் நன்றாக இருந்தால் பிடிக்கும் என்பவருக்கு கண்டிப்பாக நீங்கள் காண செல்லலாம்.


எனக்கு இந்த படத்தில் புதிதாக தோன்றியவை வெங்கட் பிரபுவிடம்

1. இவருக்கு ஸ்டார்டிங் ப்ரொப்லெம் அப்படியே போக போக பிக் அப்  ஆகும் படம் நல்லா கவனிச்சி பார்த்தா முன்ன வந்த இவர் படம் கூட அப்படி தான் இருக்கும் மங்காத்தா கூட.

2.முதல் பாதியில் பிடிக்க வில்லை என்றாலும்  தேவை இல்லாத விரிவாக்கம் தருகிறார் எல்லோருக்கும் முன்ன வந்த கோவா படத்துலையும் அப்படி தான்.

3. வெங்கட் பிரபு அவருக்கு முன்ன விட பின்ன தான் ரொம்ப பிடிக்கும் போல அதனால தான் அவர் படத்துல முன்னடிய விட பின்னாடிய ரொம்ப ரொம்ப நல்லாவே காட்டுறார். ( நான் முன் பகுதி பின் பகுதிய சொல்லுறேன் நீங்க வேற எதுவையும் நினைக்காதீங்க )

4.கண்டிப்பா மிக மிக திறமை உள்ளவர் என்பதும் புலப்பட்டது . ரெண்டு மணி நேரம் கடுப்பாகிய படத்தை கடைசி அரை மணிநேரத்தில் எல்லாம் தேவை என்று நமக்கு புரிய வைத்ததில்.

5. செல்வராகவன் படம் ஆரம்பம் முன் பகுதி மிக பிடிக்கும் என்று எல்லோரும் சொல்லுவர் அது போல இப்போ வெங்கட் பிரபு படம் பின் பகுதி எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லுகின்றனர்.

7 comments:

  1. வெங்கட் பிடிக்க காரணம், எந்த படத்தில் இருந்து தழுவி எடுத்தாலும் தற்போதைய இளைஞர்களை குறிவைத்து எடுப்பார். அடுத்து நவீன இளைஞனிடம் இருக்கும் வேற்றுமை பாராத பண்பை அப்படியே வெளிப்படுத்துவார். ஒரு செட் இருக்கும் அதில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பார்கள்... என்ற barriers ஐ தவிடு பொடியாக்கிவிடுவார். அடுத்து யூத் குசும்பு!

    எதற்கும் படத்தை பார்த்துவிட்டே பேசுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா , படம் சரோஜா படத்தையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணுனது போல இருக்கும் ஆனா இறுதி 30 நிமிடங்கள் நன்றாகவே இருந்தது அதனால் நிச்சயம் இந்த படம் தோல்வியாகாது கண்டிப்பாக காணுங்கள் பிரியாணி டயட்டில் இருந்தால் நிறைவுதான் :)

      Delete
  2. எல்லாரும் சொல்ற அதே மேட்டரு தான்.. காப்பியடிச்சாலும் நல்லா காப்பியடிப்பாரு.. அந்த காரணத்துக்காகவும், சென்னை-28 காகவும் தான் எனக்கு வெங்கட்-ட ரொம்ப பிடிக்கும்.. எல்லாரும் கழுவி ஊத்தின கோவா படம் கூட எனக்கு புடிச்சிருந்துச்சினா பாத்துக்கோங்களேன்.. இந்தப்படத்தயும் இப்போ எல்லாரும் கழுவி ஊத்திட்டு இருக்காய்ங்க.. ஆனா வெங்கட் பிரபுவோட ஃபேனா நீங்க நல்லாருக்குனு சொல்லிருக்கீங்க. பாத்துருவோம்..

    ஒரு சின்ன பிரச்சனையால ஊருக்கு போக வேண்டியதாயிருச்சி. பாக்க முடியலை.. இந்த வாரம் கடைசில பாத்துர வேண்டியதான்,.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா, கண்டிப்பா அப்போ உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றே நினைக்கின்றேன் , தவறாமல் பார்த்துட்டு சொல்லுங்க நண்பா.

      Delete
  3. Uma Riyaz Khan na hitwoman kattama vera yarayavathu hitman a kamichi irrukalam nanba...

    ReplyDelete
    Replies
    1. ஆனா ஷாக்கிங் ரோல் தானே மச்சி :)

      Delete
  4. நான் கோவா படத்தை 5 முறை பார்த்தேன்.. அவ்வளவு ஜாலியா இருந்துச்சு.... மற்றும் வெங்கட் பிரபுவின் ஸ்டைல் செம்ம.....

    ReplyDelete