Saturday 14 September 2013

மூடர்கூடம் - புதியமுயற்சி நல்ல முயற்சி


இத்திரைப்படத்தை பற்றி கூறுவதற்கு முன் இன்று  நான் இத்திரைப்படத்தை காண சென்ற திரைஅரங்கில் நடந்த சுவாரசியமான நிகழ்வை கூர் வேண்டும் , வேலை முடிந்து 12 மணி காலை காட்சிக்கு என் பணியிடம் அருகில் உள்ள கோல்டன்  திரைஅரங்குக்கு  சென்றேன் (சிங்கப்பூரில் ரெக்ஸ் சினிமாஸ் & கோல்டன் டிஜிட்டல் இந்த இரண்டு மல்டி திரையரங்குகளில் மட்டுமே எப்பொழுதும் தமிழ் படம் வெளியிடு காணும், சில பல பெரிய படங்கள் நிறைய பெரிய திரையரங்கில் வெளியாகும் ).  மூடர் கூடம் வெளியாகி இருந்தது , தங்கமீன்கள் 15 நாட்களை தாண்டியும் ஓடி கொண்டு இருக்கின்றது எனக்கு ஆச்சரியமாக ஆனந்தமாக இருந்தது . டிக்கெட் தருமிடம் சென்று மூடர்கூடம் ஒரு டிக்கெட் இந்த ஷோ என்றேன் , அதற்க்கு அவர் தம்பி ஆளு இல்லப்பா ஷோ கிடையாது என்றார் , அட என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசுறிங்க என்று நக்கல் கலந்து கேட்டு  தாருங்கள் என்றேன் , அட நீங்க மட்டும் தான் ஒரு மூணு பேர் இருந்த கூட ஓட்டுவோம் வேணும்னா தங்கமீன்கள் , வ.வா.ச டிக்கெட் தருகிறேன்   என்றார் பாருங்கள் , என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை , என்னடா இது ஒருத்தன் கூட வரமாட்டான என்று சிறிது நேரம் பார்த்துவிட்டு ஷோ கான்செல் என்று சொல்லிவிட்டார் வேறு பின் சற்று அருகில் உள்ள ரெக்ஸ்சில் பார்த்தேன். இது போல் எனக்கு நடப்பது முதல் முறை.

தமிழ் சினிமாவில் என்னடா ஒரே மாறி படம் வந்துட்டு இருக்குனு நினைத்தால் , உடனே சென்று மூடர் கூடம் காணுங்கள் , சூதுகவ்வும் படம் போல தான் என்றாலும் இதில் இயக்குனர் பரிமாறிய விதம் முற்றிலும் புதுமை. படத்தில் ஒரு காட்சி கூட காமெடி என்று நினைத்து பேசுகிறேன் , கலாய்க்கிறேன் , பார்வையாளர்களை சிரிக்கவைக்கின்றேன் என்று சுத்தமாக இருக்காது. முழுக்க முழுக்க ஒரு டார்க் காமெடி டைப் படம் தமிழில்.

இயக்குநரி பல யுக்திகள் நம் சினிமாவுக்கு புதுசு ஒன்று மட்டும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது , அது படத்தில் உள்ள 5 பாடல்களிலும் 5 நபர்களின் முன் வாழ்கையை கூறிவிடுகிறார் அதாவுது பிளாஷ் பேக் என்று தனியாக காட்சி படுத்தாமல் படைகளில் கூற நாமும் வெளியில் செல்லாமல் பார்த்துவிடுவோம் , அதுவும் ஜேசுதாஸ் அவர்கள் பாடிய கடைசி பாடல் அது யாருடைய முன் வாழ்கை என்ற நான்  கூறிவிட்டால் உங்களுக்கு ஒரு எக்சைட்மெண்ட் போய்விடும் , நீங்களே காணுங்கள் அனுபவியுங்கள்.

அதே போல கதை என்று எல்லாம் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை , வாழ வழி இல்லாத நாலு பேர் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க சென்று ஒரு நாள் அந்த வீட்டில் நடப்பவையே படம் , இதை எவ்வளவு சுவாரசியமாக தர முடியுமோ அதில் 80 சதவீதம் இயக்குனர் தந்து உள்ளார் , மீது இருபது சதவீதம் குறை தான் கொஞ்சம் இழுக்கின்ற போன்று தோன்றியது முதல் பாதி மற்றும் சில வேண்டாத காட்சிகள் , என்று இருந்தாலும் இப்படம் நிச்சயம்  ஒரு பீல் குட் மூவி என்று நினைக்க தோன்றும்.

இயக்குனர் நவீன் நவீனகவும் , குபேரன் , வெள்ளை , சென்ராயன் என்று அந்த நான்கு பேர் நன்றாக நடித்து இருந்தாலும் , என்னை மிக கவர்ந்தது சென்றாயன் பிச்சி புகுந்து விளையாடி இருக்கார், ஓவியாவிடம் வளியும் போதும் , ஆஊனா எல்லோரையும் தலை கீழாக நிக்க சொல்லுவது (அவர் தரும் தண்டனை :) ) பட்டய கிளப்பிருக்கர் , இயக்குனர் நவீனின் வசன உச்சரிப்பு மிக பிடித்து இருந்தது , பல காட்ச்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தேன். வசனம் இல்லாத காமெடிகலும் அதிகம் இப்படத்தில் உடல்மொழி , அவர்களின் சூழ்நிலைகளை காண்போருக்கு இவ்வளவு நகைச்சுவையாக காட்டி இருப்பது முற்றிலும் புதுசு.

ஒளிப்பதிவு மிக நிறைவாக இருந்தது , இப்படத்திற்கு ஏற்றாது போலவே அதுவும் டார்க் டைப் என்று அனைத்தும் டார்க் தான் ஆனால் காணும் நமக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். எடிட்டிங் கச்சித்தமாக நறுக்கி இருக்கின்றனர். மியூசிக் புதியவர் உறுத்தல் தெரியவில்லை என்றாலும் இன்னும் நன்றாகவே இருந்து இருக்கலாம்.

வசனம் மிக முக்கியம் , இயக்குனர் பல விஷயங்களை வசனங்கள் வாயிலாக  இப்படத்தில் தொட்டு பேசி உள்ளார் , உலகமயமாக்குதல் , குழந்தை வளர்ப்பு முறை , ஏழை பணக்காரன் வித்தியாசம் , காதல் , மொழி பற்று என்று ,அதற்கு அவர் தரும் விளக்கங்கள் வசனங்கள் காட்ச்சிக்கு சில திணிப்பாக இருந்தாலும் , ரசிக்க முடிந்தது.

ஒரே ஒரு சாம்பிள் " ஒரு மரத்துல 100 பழம் இருந்துச்சுனா கீழ இருக்குற நூறு பேருக்கு என்பது இயற்கையோட நீதி , ஆனா அதா திறமை உள்ளவன் என்றும்  பணக்காரன் என்றும்   எல்லாத்தையும் பறிச்சி , அதை எடுத்து விதைச்சு மரமாக்கி காய்க்கிற பழத்த பறிக்க அவனையே பறிக்க சொல்லி அவனுக்கே ஒரு பழம் கூலியா தருறீங்க , அது தான் இப்போ  நடக்குது "

இதுபோல பல வசனங்கள் மிக கூர்மையாக இருந்தது.

மூடர் கூடம் குறைகள் இருந்தாலும் முற்றிலும் நமக்கு புதிய அனுபவமாக இருக்கும் ,நிச்சயம் நிறைவுடன் வருவோம் . திரைஅரங்கில் சென்று காணுங்கள். இயக்குனர் நவீன் உங்களின் அடுத்த படம் என்னை எதிர்பார்க்க வைத்துவிட்டது , உங்களின் இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.

மூடர் கூடம் - மூடை மாற்றும் நன்றாக 

5 comments:

  1. நண்பா,

    நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க. படிக்கவும் சுவாரிசியமா இருக்கு. நீங்க ஏன் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைக்க கூடாது..?? இந்த லிங்க்ல போய் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்க.

    http://www.tamilmanam.net/user_blog_submission.php

    அதுக்கு முன்னாடி கீழ இருக்கிற லிங்க்ல தமிழ்மணம் Username ஒன்னு கிரீயேட் பண்ணிடுங்க.

    http://www.tamilmanam.net/login/register.php

    உங்களுக்கு தமிழ்மணம் சார்பாக ஒரு மெயில் வரும், அது வந்த அப்புறம் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடலாம்.

    பதிவை இணைக்க http://www.tamilmanam.net/index.html லிங்க் போய் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்கிற பெட்டியில உங்க blog அட்ரஸ் குடுத்தா போதும்.

    வேற எதாவது சந்தேகம் இருந்தா என்னை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொள்ளவும்.
    (இந்த மாதிரி எனக்கு நண்பர் ராஜ் சொல்லி நான் இணைத்தேன். நீங்களும் இணைச்சுருங்க)

    ReplyDelete
  2. அப்றம் தல, முடிந்தால் டெம்ப்ளேட்டை மாற்றவும். இது ரொம்ப சிம்பிளா இருக்கு. இத விட நல்ல டெம்ப்ளேட்டுகள் நெட்டில் நிறைய கிடைக்குது. Google-ல "Latest Blogger Templates"னு சர்ச் பண்ணிப்பாருங்க.

    ReplyDelete