Friday 30 August 2013

தங்க மீன்கள் - அன்பின் மறுபக்கம்



நல்ல அற்புதமான  உணர்வுடன் இத்திரைப்படத்தின் தாக்கங்களுடன் இருந்து சுவாசித்து, நாளையே எழுதலாம் என்று தான் நினைத்தேன் , ஆனால் முடியவில்லை , இப்பொழுதே கொட்டிவிடு என்று நினைக்க நினைக்க , அதுவும் சரி தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலே இன்பம்  இன்னும் நூறு மடங்காகும் என்றே பதிவிடுகிறேன்.

திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்காக மற்றும் வியாபார நோக்கத்திற்காக என்று எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் , ஒரு உண்மையான எல்லோரின் வாழ்விலும் கடந்து மட்டும் செல்லாமல் என்றும் நினைவுகளாக இருந்து கொண்டு இருக்கும் தூய்மையான உண்மையான உயர்தரமான அன்பை திரையில் உணர்ச்சி குவியலாக அற்புதமாக தவமாக இருந்து இதை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தும் அதை நமக்காக வெளிக்கொண்டுவர இத்தனை நாட்கள் எத்தனை எத்தனை இடையூறுகளை கடந்து பொறுமை போற்றி காற்றுக்கொண்டு இருந்து , இன்று நம் எல்லோரையும் இத்திரைப்படத்தின் வழியாக உன்னத வாழ்வியலை காட்டிய இயக்குனர் ராம் அவர்களுக்கு தாழ்மையான நன்றிகள் .

தந்தை மகள் உறவு எவ்வளவு புனிதமானது என்பதை எல்லோரும் அறிந்து இருந்தாலும் , அதை இவ்வளவு நேர்த்தியாக திரையில் அற்ப்புதமாக காண்பது இதுவே முதல் முறை, கதை என்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அன்பை, உணர்ச்சிகளை, உணர்வுகளை, குடும்ப உறவுகளை, கல்வி முறையை, குழந்தை வளர்ப்பு முறையை, இன்றைய ஆசிரியர்களின் நிலையை, சமூகத்தின் விளம்பர யுக்தியை, என்று சகலமும் நாம்  காட்சியாக காணும் பொழுது இது திரைப்படம் என்பதை மறந்து நம்மில் நடந்ததை நினைவு படுத்துவதே இதன் சிறப்பு.

செல்லம்மா என்று மகளாக படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி பிடிக்கிறார் , என்ன ஒரு இயல்பான நடிப்பு பார்க்க பார்க்க பூரித்து போகிறது , இயக்குனர் ராமின் பொறுமை அதில் வந்தது தான் போல எவ்வளவு சிறப்பாக நடிப்பை கற்று கொடுத்து இயல்பாக வெளிக்கொண்டு வந்து இருக்கிறாரே , அதை காணும் எல்லோரும் இதை தான் கூறுவீர்கள் நிச்சயம்.

கல்யாணி என்று தந்தையாக ராம் அவர்கள் நடிப்பு இல்லை இல்லை வாழ்வு  வாழ்ந்து இருக்கிறார். தன்னுடைய இயலாமையை அவர் வெளிக்காட்டும்  பொழுதும் மகளுக்காக அவர் படும் பாடு நம்மை நிச்சயம் கலங்க வைத்து விடும் , இடைவேளைக்கு முன் வரும் காட்ச்சிகளில் கலங்கிவிட்டேன் ராம் அவர்களுக்கு நான் செய்த சிறப்பு அவரின் நடிப்பில் உணர்ந்து கலங்கினேன். நிச்சயம் இந்த தந்தையை எந்த ஒரு மனிதனும் விரும்புவான்.

வடிவு என்று ராமின் மனைவியாகவும் செல்லம்மாவின் அம்மாவாகவும் சிறப்பாக இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார், ஓவொரு முறையும் செல்லம்மாளை தன் மகளை கோபத்தில் அடித்து விட்டு பின் கணவனிடம் சொல்லி வருந்தும் காட்சிகள் என்று அன்னையாக மாறி இருப்பார்.

இப்படி எல்லோரும் எவரையும் தவிர்க்க முடியாமல் மிக சிறப்பாக தனது பங்கை அளித்திருப்பார் , ராமின் தந்தையாக வரும் ராமு தன் மகனை ஏளனம் அவனுக்கு தெரிந்தே பேசுவதும் அவனுக்கு தெரியாமல் வருந்துவதும் என்று நம்மை ஈர்த்துவிடுவார். ராமின் அம்மாவாக வரும் ரோகினி அவ்வாறே நேர்த்தியாக நடித்திருப்பார்.

பத்மப்ரியா , வீட்டா மிஸ்ஸாக அருமையான பாத்திரத்தில் மிக அற்புதமாக  சிறிது நேரமே வந்தாலும் , இப்படத்தின் இறுதியில் இவரை ஓட்டியே மிகை படுத்தியே என்றால் இவர் வாயிலாக  பெருமை படுத்தியே முற்றும். இன்னும்மொரு டீச்சர் ஸ்டெல்லா என்று இன்றைய கல்வி முறை மாணவர்களை சிதைக்கும் பாத்திரத்தில் அப்படியே நடித்திருப்பார். இப்படி எவரையும் விட்டு கொடுக்க முடியவில்லை. அனைவரும் மிக சிறப்பாக தங்கள் உழைப்பை கொடுத்து இருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா , ராஜாவே தான் இந்த படத்திற்கு பாடல்கள் மிக இனிமையாக மென்மையாக மனதை வருடியது என்றால் , பின்னணி இசை காட்ச்சிகளோடு கவிதை பேசியது , ஒரு சில இடங்களில் கற்றது தமிழ் இசை வந்தும் அதை என் மனம் விரும்பவே செய்தது, யுவன் நல்ல இயக்குனர்களிடம் நல்ல இசை என்றும் இருக்கும் என்பதை விட நல்ல இயக்குனர் நல்ல இசையை பெறுவார் என்றே இதன் வாயிலாக புரிகின்றது.

இன்னுமொரு மிக முக்கியமானது சிறப்பானது ஒளிப்பதிவு அர்பிந்து என்ற புதியவரா (தெரியவில்லை ), மலைகள் அப்படியே நாமும் உடுருவுவது போலவே இருந்தது , பசுமையாக மலைகளை திரையில் காணுவது போல் அல்லாமல் ஏதோ சுற்றுலா சென்று நேரில் காண்பது போலவே இருந்தது சிறப்பு , அதுவும் அந்த ஆனந்த யாழினை பாடலில் அட்டகாசம்.

இயக்குனர் ராம் அவர்கள் மீண்டும் தன்னிடம் வசனங்கள் எப்பொழுதும் இப்படி தான் , என்று திடமாக உறுதி செய்து உள்ளார் ,
சாம்பிள் கற்றது தமிழ் போலவே
 " இது இவுங்க வாங்கணும் அது அவுங்க வாங்கணும் அப்படினா விளம்பரம் போடுறானுங்க "
"பணம் பிரச்சனை இல்லைங்க பணம் இருக்குற எடத்துல நாம பணம் இல்லாம இருக்கிறது தான் பிரச்சனைங்க "

இறுதியாக முடிவில் மிக அத்தியாவசியமான , யோசிக்க கூடிய அனைவரும் நினைக்க கூடிய ஒரு கருத்தை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை ஆனால் இந்த காட்சியை கண்டு முடிந்தவுடன் என்னை அறியாமல்  எழுந்து  கை தட்டி என் வணக்கங்களை ஆதரவுகளை தெரிவித்துவிட்டேன்.

இயக்குனர் ராமின் மேல் மிக பெரிய நம்பிக்கை இன்னும் உறுதியாக மனதில் பதிந்துவிட்டது. தங்க மீன்கள் தமிழ் சினிமாவின் தரமான படைப்பின் சிகரம். இத்திரைப்படம் இப்போதைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ததில் மிக பெரிய சந்தோசம். எல்லோரும் குடும்பத்தோடு திரையரங்கு சென்று ஒரு உன்னத வாழ்வியலை கண்டு உணருங்கள்.

தங்கமீன்கள் - உன்னத வாழ்வியல் 

Thursday 29 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - திரைப்பாடம்



தினமும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் எப்படியாவது, காதலர்கள் பிரிந்தனர் , தற்கொலை , பிறந்த குழந்தை குப்பை தொட்டியில் என்று நம்ம கண்டே வருகிறோம் ,இதை போலவே பல நிகழ்வுகள் தெரிந்து நடந்தது , நடக்கிறது , இனியும் நடக்குமா என்று கேட்டால் ... ?

இந்த திரைப்படத்தை எல்லோருக்கும் கொண்டு சென்றால் தடுக்கலாம். ஏதேனும் வகையில் பாதிப்பின் விளைவுகளின் அளவு குறையும். எந்த ஒரு ஆர்ப்பட்டமும் இல்லாமல் கருத்து சொல்லுகிறேன் என்று திணிக்காமல் , மென்மையாக எல்லோரும் ஏற்று கொள்ளும் வகையில் மிக அருமையாக நமக்கு தந்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். தமிழ் திரை உலகில் என்னை தவிர்க்க முடியாது என்று திடமாக நிருபித்து உள்ளார். 

பையன் தான் வீட்டை நன்கு ஏமாற்றுவர் என்று அதை மையபடுத்தியே பெருமன்மையான காட்சிகள் நம் திரைப்படங்களில் இடம் பெரும். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் இக்காலத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறாள் (பெற்றோரை காதலுக்காக ) என்று அப்பட்டமான உண்மைகளை காட்டி இருக்கிறார். 

எல்லோரின் நடிப்பிலும் இயக்குனரே தெரிகிறார் இருந்தும் ஜென்னி என்று ஸ்வேதாவின் தோழியாக வருபவர் மிக நன்றாக நடித்து இருப்பார். ஸ்வேதாவும் அப்படியே மிக அருமையாக பொருந்தி போகிறார்.

படத்தின் இறுதி 15 நிமிடங்கள் இன்றைய சமூகத்தின் உண்மை முகம். யுவனின் இசை உயிராய் இருக்கிறது, பாடல்கள் எப்படி எந்த இடத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல எடுத்துகாட்டு.

படத்தில் ஒரு காட்சியில் சும்மா போறவன் சொல்லுவான் "இந்தகாலத்து லவர்ஸ நாம பிரிக்க நினைக்ககூடாது அப்படியே விட்டா அவுங்களே பிரிஞ்சுடுவங்கனு "

அது தான் உண்மை ஆனால் ஆதலால் வரும் விளைவு படத்தின் முடிவு. பாலியல் கல்வி வேணாம் இந்த படத்த எல்லா மாணவர்களுக்கும் போட்டு காட்டுங்க அதுவே ஒரு நல்ல விதமாக இருக்கும். இல்லையேல் காதல் என்று இன்னும் கேவலமான நிகழ்வுகளை காண வேண்டும் வரும் காலங்களில்.

இப்படி ஒரு திரைப்படத்தை தந்த சுசீந்திரனுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். இது முழுக்க முழுக்க இயக்குனரின் திரைப்படம். கொண்டாட படவேண்டிய முக்கியமான பாதுகாக்க வேண்டிய திரைப்பாடம்.

ஆதலால் காதல் செய்வீர் -   

கற்றது தமிழ் - தமிழ் M.A (பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் )



தமிழ்நாட்டில் குறிப்பாக பள்ளிகள் தொடங்கி கல்லூரிகள் தொடர்ந்து வேலையிடம் வரை இருக்கும் பாரபட்சம் என்னை பொருத்தவரை வேறு எங்கும் உலகில் காண முடியாது. இதை இந்த படத்துடன் ஏன் சம்மந்தபடுத்தி கூறுகிறேன் என்றால் இதன் சாராம்சம் இதிலே புதைந்து உள்ளது, ஆனால் இதை பற்றி மட்டுமா இந்த படம் பேசுகிறது நிச்சயம் இல்லை ஒரு நாலு அஞ்சு படங்களில் சொல்ல வேண்டிய மைய கருக்களை இந்த ஒரு படத்தின் மூலம் கொண்டு சேர்த்தது இயக்குனர் ராம் அவர்களின் வெற்றி, இந்த படம் வெற்றிய தோல்விய என்ற பேச்சுக்கே இடமில்லை ஒரு படம் மட்டும் எடுத்து விட்டு 6 வருடங்களாக எதிர்ப்பார்க்க வைத்துள்ளார் அடுத்த படத்திற்கு , இந்த படம் வந்த பொழுது எத்தனை எத்தனை கல்லூரிகளுக்கு உரை ஆற்ற அழைக்கபட்டார் அதுவே அவருக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.

முதலில் இத்திரைப்படம் என்பார்வையில் எதையெல்லம் பற்றி பேசுகின்றது என்று பட்டியல்லிடுகின்றேன்

1. நடுத்தரவாசி தமிழ் படித்தால் ஒருவனின் நிலைமை எப்படி இருக்கும் ?

2. தமிழகத்தில் காவல்துறையினர் நினைத்தால் நடுத்தர வர்த்தக ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா ?

3. அறியாத வயதில் உருவான நட்பு புரிந்த வயதில் காதலாகுமா அவர்களை ஒன்று சேர்க்குமா ? (இவை இயக்குனர் எடுத்துக்கொண்ட கமெர்சியல் திணிப்பு அதையும் மிக அற்ப்புதமாக கையாண்டு இருப்பார் )

4. தன்னுடைய சம்பளத்திற்காக தன் அடையாளங்களை அழித்துகொள்ளலாமா ?

5. கல்வி என்பதில் ஏன் இத்தனை பாரபட்சம் ?

நான் மேற்குறிப்பிட்டு உள்ள 5 கேள்விகளிலும் கிளை கேள்விகள் எத்தனனையோ அவைகளுக்கும் சேர்த்தே காட்சிகள் அமைக்க பட்டு இருக்கும். முதல் காட்சியிலேயே தமிழ் நாட்டில் தமிழ் படித்தவன் ஏன் எப்படி உயிர் வாழ முடியும் என்று பிரபாகரன் கேட்க்கும் பொழுதே படம் தமிழை பற்றி மட்டும் பேச போகிறது என்று நான் நினைக்க தொடங்கிய அடுத்த நொடியே காவல் துறையின் காமன் மேன் பார்வை எந்த அளவுக்கு செல்லும் என்று காட்சிகள் விரிவடைய நானும் இந்த படம் ஒரு விடயம் சார்ந்தது இல்லை என்ற முடிவுக்கு வந்தே காண தொடங்கினேன். முதல் அரை மணிநேரம் ஒவ்வரு காட்சியும் ரணகளம் போலவே சென்றது என் இதய துடிப்பின் சத்தம் என் காதுகளை அடைந்தது. அடுத்து சிறுவயது அத்தியாயம் முதல் 10நிமிடங்கள் கவிதை தொகுப்பு போல கொஞ்சம் மென்மையாக நிதானபடுத்தியதே என்று நினைக்குபோதே அடி நெஞ்சை பிசைந்து விட்டது அடுத்த காட்சி. இப்படியே படம் முழுக்க மென்மையும் ரணமும் ஆகா என்னை ஆட்கொண்டு சென்று விட்டது.
30 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் படித்தல் முக்கியம் என்று இருந்தது , பின் எதை படித்தல் முக்கியம் என்று ஆனது , இன்று இதை படித்தல் முக்கியம் என்று இருக்கிறது.

குறைந்தபட்ச்ச சம்பளம் 2000-4000 அன்று முதல் இன்றுவரை

அதிகபட்ச்ச சம்பளம் அன்று 20000 இன்று .....?????

இங்கே இந்த ஒரு புள்ளியில் உலகின் ஒட்டுமொத்த உலகமயமாக்குதல் என்று ஏன் இப்படி ஆனது என்ற ஆயிரம் கேள்வியை கேட்க்கின்றது .

30000 40000 சம்பளம் வாங்கிட்டு பண்ற அலப்பரை இருக்கு பாருங்க சார் என்று வரும் ஒரு வசனத்திற்கு அந்த சம்பளம் வாங்குபவனும் திரைஅரங்கில் கை தட்டியதே அதில் உள்ள உண்மை புரியும் நமக்கு.

படத்தில் இயக்குனர் அவர்கள் இது தான் முடிவு என்று எங்கும் கூறவே இல்லை இப்படி இருக்கு என்றும் ஏன் என்றும் தான் சமூக அக்கறை கேள்வியாகவே கேட்க்கிறார்? ஒரு முடிவை எதிர் பார்த்தாலே இந்த படம் உங்களை ஈர்ப்பது மிக கடினம். கதையில் பிரபாகரன் என்பவன் தான் தமிழ் படித்து இப்படி இருக்கிறேன் இந்த சமூகம் ஏன் இப்படி உள்ளது என்னுடைய கோபம் அதன் தாக்கமே இப்படி ஆனது என்று கூறிவிட்டு இதற்க்கு முடிவு நான் சொல்லவில்லை இப்படி இருக்கு என்று மட்டுமே கூறியது பலருக்கு பிடிப்பில்லாமல் போய்விட்டது போல பின் அவை எனக்கு இல்லை என்றாலும் என் ஆனந்தி என்னிடம் வந்து விட்டால் அதுபோதும் என்று அவன் போவதும் பின் உயிர் துறப்பதும். மனதை நெகிழ வைத்து விட்டது , நம் வாழ்கையிலே நம் விரும்பும் ஒன்று கிடைக்க வில்லை என்பதால் நாம் நேசிப்பதை விட முடியாது என்பது போலவே பிரபாகரனின் முடிவு அமைந்து இருக்கும்.

ஒரே கல்லூரியில் வேற வேற பிரிவில் படித்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் ஒருவன் மேலே ஒருவன் கீழே இது சரியா ?
அப்பொழுது கல்வியில் எந்த கல்வி சிறந்தது என்பது எதனால் வந்தது உலகமயமாக்குதல் , எதை நோக்கி உலகம் தேடுதோ அதை நோக்கி எல்லோரும் ஓடுவது நல்லதா ? இப்படி படம் முழுக்க விவாதமாகவே சென்றது இதன் சிறப்பு.

இந்த திரைப்படத்தின் வசனங்களை பற்றி பேசவேண்டும் என்றால் அதற்காக தனி பதிவு போட வேண்டும் , அந்த அளவிற்கு மிக அட்டகாசமாக அமைந்துஇருக்கும். ஒவ்வருமுறை கோபாத்தின் உச்சம் ஒருவனுக்கு வார்த்தையாக வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு மிக பொருத்தமாக அமைந்து போகும் இதன் வசனங்கள். ஒவ்வொன்றும் நம்மை எத்தனையோ முறை கேள்வி கேட்கும் படியாகவே அமைத்து இருப்பது இயக்குனரின் திறமை.

யுவன் இசையில் ஒரு அசாத்தியத்தை நிகழ்த்திய இடம் இந்த திரைப்படம் , பின்னணி இசை மிக பிரமாதமாக அமைத்து இருப்பார் , படம் பல களங்களை பற்றி பேசுவதால் இவரின் இசையும் மிக அருமையா புகுந்து விளையாடும். என்னை மிகவும் கவர்ந்த இப்படத்தின் சில பாடல்களை லின்க்கில் தருகிறேன் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=w5z8p4UrZM4
http://www.youtube.com/watch?v=RnZjqj7லாபி
http://www.youtube.com/watch?v=-wfpOW4kMv8

அடுத்து வரும் லிங்கில் வரும் காட்சியில் இறுதியில் சமூக ஆர்வலர்கள் கருத்து கேட்க்க பட்டு இருக்கும் , படத்திற்காக இல்லாமல் உண்மையாகவே கேட்டு எடுக்கப்பட்டது அதில் வரும் ஆர்வலர்கள் கூறும் கருத்தும் மற்றவர்கள் வைக்கும் கேள்வியும் அதுவே இந்த படத்தின் மற்றவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில்', என்னை மிகவும் கவர்ந்த காட்சி.

http://www.youtube.com/watch?v=Z3iLGMHrMO8

அழகம் பெருமாள் என்று தமிழ் ஆசிரியராக வந்து உணர்வு பூர்வமாக மிக சிறப்பாக வாழ்ந்து இருப்பார். புதுபேட்டைக்கு பிறகு அவரின் ஆக சிறந்த படம் இதுவே. அதுவும் இந்த பாடலில் அற்புதமாக பொருந்தி போகிருப்பர்.

http://www.youtube.com/watch?v=7fvMjuR1aCA

பிரபாகரன் என்ற அந்த பாத்திரப்படைப்பு அத்தனை நெஞ்சங்களிலும் அதிர்வை உண்டாக்கியது ஜீவா என்ற நடிகனுக்கு கிடைத்த பெருமை .

ஆனந்தியாக காட்சிகளில் நம்மையும் ஈர்க்க்வைத்து வேதனை படவைத்து , அதற்க்கு உயிர் கொடுத்து வாழ்ந்து இருப்பார் அஞ்சலி.

இயக்குனராக ராம் அவர்கள் என் நெஞ்சில் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கினர் இந்த படத்தின் வாயிலாக , அவரிடம் மிக பெரிய நம்பிக்கை உள்ளது அவரின் படைப்புகளின் மேல், என்னை பொருத்தவரை இந்த கற்றது தமிழ் விவாதத்துக்கு உரிய சிறப்பு அம்சம் உள்ள அற்புத திரைப்படம். இன்னும்மொரு 30 வருடங்களுக்கு பிறகு இந்த படம் பற்றிய அப்போதைய பேச்சை நினைத்து பாருங்கள் இந்த படத்தின் வெற்றி அதில் உள்ளது.

ஆரண்யகாண்டம் - தமிழ் திரையுலகை நிமிர்த்தியது

தமிழ் சினிமாவின் உண்மையான மைல்கல், ஆரண்யகண்டம் கதை சொன்ன விதத்திலும் மேக்கிங்கிலும் தேர்ந்து எடுத்த கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர்களாகட்டும் அனைத்துவகைகளிலும் . இதற்குமுன்பும் பலதரப்பட்ட கதைகள் இறுதியில் ஒன்று சேரும் ஒரூ புள்ளியில் அந்த வகையான இப்படமே முழுமையடைந்து திருப்த்தி அடையவைத்தது. தமிழ் சினிமாவின் இலக்கணத்தை துணிந்து தகர்த்து எரிந்தது.

சிங்கபெருமாளிடம் முறைத்து கொண்டு பின்பு காரில் செல்லும் போது நண்பர்களுடன் நக்கல் பேசிக்கொண்டு போகும் காட்சியில் பசுபதியை போற்று என்று சொல்லும்போது, சுற்றி இருப்பவர்கள் கண்களும் நடிக்கும் மிக நேர்த்தியாக அந்த காட்சி படமாக்க பட்டு இருக்கும். அங்கே ஆரம்பிக்கும் ஆர்வம் தியேட்டரை விட்டு வெளியே வந்தும் ஆர்வம் குறையவில்லை. 

கொடுக்கபள்ளி சிறுவன் தான் அப்பாவை திட்டுவதாகட்டும் , அக்கறை கொள்வதாகட்டும் , தன்னுடைய சேவல் இறந்தவுடன் அவனும் அவன் அப்பா காளையா இருவரின் நடிப்பும் மிகச் சிறப்பாக இருக்கும், சேவலை கொள்ளும் போதும் தன் பங்கிற்கு சிக்ஸர் அடிச்சிருப்பார் சிங்கபெருமாள்.


இதே போல் ஒவ்வொரு காட்சியும் மிகவும் சிரத்தை எடுத்து கவனித்திருப்பார் இப்படத்தின் அறிமுக இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 

மிக பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை, படம் ஆரம்பத்தில் சுப்புவை சிங்கபெருமாள் காணும் காட்சியில் பின்னணியில் ரேடியோவில் ஒலிக்ககும் பாடல்களை கையாண்டே இருக்கும் போது  அங்கயே முடிவு செய்து விட்டேன் யுவன் புகுந்து விளையாட போகிறார் என்று, காட்சிகள் மிக பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் இவரின் இசை மென்மையாக வருடி கொண்டு இருந்தது. சண்டை காட்சிகளில் கூட தமிழ் சினிமாவில் முதல் முறையாக யாரும் இப்படி ஒரு மென்மையான இசை தந்திருக்க முடியாது.யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய இசை முத்திரையை பதிக்க ஆரண்யகண்டம் உதவி செய்து இருக்கிறது.

ஒவ்வொரு வசனமும் நடைமுறை வாழ்கையை ஓட்டியே சரியாக இருக்கும் ஒரு இடத்தில் கூட யதார்த்தத்தை மீறவில்லை , அவரவர் கேரக்டர்களுக்கு ஏற்ற வசனம் அதில் என்னை மிகவும் கவர்ந்தது படத்தின் இறுதியில் வரும் சுப்பு கூறுவாள் ,

"சப்பையும் ஆம்பளை தான் , எனக்கு எல்லா ஆம்பளையும் சப்பை தான்"

முடிவை ஒருவரும் யூகித்து இருக்க வழி இல்லாமல் முடித்து இருந்தது இயக்குனரின் மிக பெரிய வெற்றி. 

2010 அக்டோபர் மாதம் வந்த இத்திரைப்படம் இன்றுவரை இதன் சாயலில் எடுக்க ஒருவரும் முயற்சி செய்யவில்லை. இதுதான் இயக்குனருக்கு கிடைத்த மிக பெரிய கிரெடிட். ஏன் இதை கூறுகிறேன் என்றால் நம் தமிழ் சினிமாவில் தானே ஒரு வித்தியாசமான படம் ஹிட் அடித்துவிட்டால் அந்த பார்முலாவை அப்படியே தொடர்வார்கள். இந்த திரைப்படத்தால் தியாகராஜன் குமாரராஜா மீது மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் அடுத்த படம் 11நபர் கொண்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர். அதுவும் வெற்றி படமாக அமைய இவரை வாழ்த்துவோம். இதுபோன்ற புது முயற்சிகளை வரவேற்ப்போம்.